உறவுகள் மேம்பட 10 உன்னத வழிமுறைகள்! மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது பல சொந்தபந்தங்களை உள்ளடக்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டுபோவதாகும். உறவுகள் மனிதனது வாழ்வில் மிகமிக அவசியமான ஒன்றாகவும் திகழ்கிறது. ஒருகாலத்தில் குடும்ப உறவுகள் புரிந்துணர்வுடன்,சகிப்புத் தன்மையும் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து உறவுகளில் விரிசலடையாமல் பாதுகாத்து அதிகபட்சமாக ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். அப்படி மகிழ்வுடன் கூடிவாழ்ந்த உறவுகளின் இன்றைய நிலையை பார்ப்போமேயானால் பரிதாபமாக இருக்கிறது. உறவுகளுக்குள் புரிந்துணர்வு இல்லாமல் சின்னச்சின்ன…
Category: பெற்றோர்-உறவினர்
மருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்!
மருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம் அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது… எனது மகளை நீங்கள் மனைவியாக ஏற்று ஐந்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் எனது நெஞ்சிலும் தோளிலும் சுமந்த எனது மகளை உங்களின் பொறுப்பில் இனி விட்டுவிட்டேன்.ஒரு தந்தை என்ற ரீதியில் எனது கடமையை நான் சரியாகச் செய்து முடித்திருக்கிறேன் என நம்புகிறேன்.ஒரு கணவனாக உங்கள் கடமையைச் செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நேரம் இரவு பத்து மணி….
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம்
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம் இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம். அன்புள்ள மகனுக்கு, மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:…
ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே?
ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே? [“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும்,தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே, அன்னை வளர்ப்பிலே என்ற இந்த வரிகள், நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துகின்றது. பள்ளிக்கூடக் கல்வியை மட்டும் நம்பி இல்லாமல், பெற்றோர்கள் குழந்தைப்பருவத்தில் இருந்தே எதையும் எதிர்கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் விரக்தி மனப்பான்மையில் முடிவெடுக்கக்கூடிய சூழல்களில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள். பிறக்கும்போதே குழந்தைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அவர்களை…
உறவுகளே! உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்….
உறவுகளே! உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்…? சமூகநீதி முரசு தாய் தந்தையர்களை, இரத்த பந்தங்களை, உறவு முறைகளை, இனபந்துக்களை துண்டித்து தூரமாகி வாழ்பவர்களுக்கு சுவர்க்கம் கிடையாது, அவர்களது நல்ல அமல்கள், வணக்க வழிபாடுகள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா என இஸ்லாம் கூறுகிறது. வேகமான உலகில் பொருளாதார பிரானியாகிவிட்ட மனிதன் உறவுகளைப் பேணி வாழ்வதில் கரிசனை கொள்வதில்லை, அன்புக்காக ஏங்கி நிற்கும் தாய் தந்தையர்கள், முதியவர்களை கண்டு கொள்வதில்லை, காலை மாலை விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புக்கள்…
தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே! தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், “எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!” என்றார். ஆம்! தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே! நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது. அவர்களைப் பேணுங்கள். அவர்களின் ‘துஆ’வைப்…
மருமகனும் மருமகளும் பிள்ளைகளே!
மருமகனும் மருமகளும் பிள்ளைகளே! மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்ஃபில், ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்கு முன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு…
முதியவனின் முணங்கல்!
முதியவனின் முணங்கல்! எனது வாலிப காலத்தில் கடும் உழைப்பால் கை நிறைய சம்பாதித்தவன் உத்யோகத்தோடு குடும்பத்தையும் இரு கண்களாய் பாவித்தவன். நான் பெற்ற 4 குழந்தைகளையும் சமமாய் செல்லமாய் வளர்த்தவன் மனைவியின் பொருப்பில் பாதியை என் தோளில் ஏற்றிக்கொண்டவன் விடுமுறை நாட்களிள் குழந்தைகளோடு முழு நேரத்தையும் செலவிட்டவன். அவர்கள் கேட்ட விளையாட்டு பொம்மைகள் அத்தனையும் மறுப்பு சொல்லாமல் வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வதை கண்டு கவலைகள் மறந்து அகம் மகிழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறேன். என் மனைவி படிப்பறிவு குறைந்த…
தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது!
தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது! [ தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டால் முடிவில்லாமல் பேசுகின்ற ஒரு பதினான்கு வயது இளம் பெண்ணை எனக்கு தெரியும். அவள் தேர்வுகள் நெருங்கி வந்துவிட்டால் பாடப்புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். தோழிகளுடன் கதையடிப்பதில் நாட்டம் மிகுந்தவளாக இருப்பினும். தன் கடமைகளில் அவன் ஒருபோதும் குறை வைப்பதில்லை இதனால் அவள் தந்தைக்கும் மகிழ்ச்சி தொட்டதற்கெல்லாம் மகளை அவர் கடிந்துக்கொள்வதில்லை. தொலைபேசியில் விடாமல் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் எப்பொழுதாவது நேரம்…
முதியோர்களை பாதுகாப்போம்
முதியோர்களை பாதுகாப்போம் [ வயதான தாத்தா – பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது…