Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில் தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா

Posted on January 18, 2021 by admin

ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில்

தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா

    Aashiq Ahamed    

டாக்டர். ராணா தஜானி (படங்கள்), பாலஸ்தீனத்தை சேர்ந்த மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான இவர், ஜோர்டானின் Hashemite பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டெம் செல் மற்றும் மரபியல் ஆய்வுகளில் தனித்தன்மை பெற்றுள்ள சகோதரி ராணா இது தொடர்பில் பல்வேறு விருதுகளை வென்றவராவார். கேம்பிரிட்ஜ், யாலே, ஹார்வர்ட் என உலகின் பல தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராவும் இருக்கிறார் ராணா தஜானி.

‘இளம் விஞ்ஞானிகளுக்கான இஸ்லாமிய அகாடமி’யை தோற்றுவித்த இவருடைய மற்றுமொரு செயல்திட்டம் மகத்தானது.

படிப்பு என்பது மாணவர்களுக்கு மகிழ்வை தர வேண்டும். ஒரு பாடத்தை விருப்பத்துடனும், மகிழ்வுடனும் படிக்கும் மாணவர்கள் மொழி வல்லமையும், தொழிநுட்ப திறனும், சிறந்த அறிவுத்திறனும் பெற்றவர்களாக வளர்வர் என்று கூறியவர், அதற்கான பாடத்திட்டங்களை கட்டமைத்தார்.

எப்படி தொடங்குவது என்று குழம்பியவருக்கு, இவர் சார்ந்த லோக்கல் பள்ளிவாசல் உதவ முன்வந்தது. இதற்கான பொருளாதார செலவிலும் பள்ளிவாசல் நிர்வாகம் பங்கெடுத்துக் கொண்டது. ஐம்பது மாணவர்களுடன் அந்த பள்ளிவாசலில் தன் பயிற்சியை தொடங்கினார் ராணா.

ராணாவின் பாடத்திட்டத்தின் பலனாக மாணவர்கள் படிப்பதில் மட்டும் ஆர்வம் என்றில்லாமல் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவிக்க இவருடைய பாடத்திட்டம் புகழ் பெற ஆரம்பித்தது.

ஒரு பள்ளிவாசலில் தொடங்கிய முயற்சி பல பள்ளிவாசல்களுக்கும் பரவியது. அரசும் உதவ முன்வந்தது. இந்த திட்டங்களின் பலனாக இன்று சுமார் 1500 நூலகங்கள் ஜோர்டானில் நிறுவப்பட்டுள்ளன.

எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தன் செயல்திட்டத்தை அமல்படுத்த பிரதிநிதிகளை நியமித்தார் ராணா தஜானி. பிரதிநிதிகள் என்பவர்கள் ராணாவால் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களாவர். இவர்கள் மூலமாக அதிகப்படியான மாணவர்களை சென்றடைந்தது ராணாவின் பயிற்றுவிக்கும் முறை.

இன்று, இறைவனின் கிருபையால், பாலஸ்தீனம் ஜோர்டான் சிரியா லெபனான் மற்றும் பல்வேறு அகதி முகாம்கள் என இவருடைய முயற்சி விரிவடைந்திருக்கிறது.

ராணாவின் சீரிய திட்டத்தால் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டுகிறது. இவரால் பயிற்றுவிக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 7,000-த்துக்கும் அதிகமாகும்.

தன்னுடைய பணிகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார் ராணா. இங்கே நான் அவற்றை பட்டியலிட்டால் நீங்கள் பலமுறை க்ரோல் செய்ய வேண்டி வரும் என்றால் அந்த விருதுகளின் எண்ணிக்கையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இறைவன், இவர் போன்ற எண்ணற்ற கல்வியாளர்களை இவ்வுலகிற்கு, நம் சமுதாயத்திற்கு தந்தருள்வானாக.

source: https://www.facebook.com/photo?fbid=3282293268534706&set=pcb.3282294961867870

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 88

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb