Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் அசாதுதீன் ஒவைசி கட்சி பார்த்து பயப்படும் பாஜக!

Posted on December 2, 2020 by admin

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் அசாதுதீன் ஒவைசி கட்சி பார்த்து பயப்படும் பாஜக!

மொத்தம் 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலுக்காக பாஜக நடந்துகொண்ட விதம்தான் தெலங்கானா மற்றும் தேசிய அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “ஒரு மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க தலைவர்கள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையேதான் அசாதுதீன் ஒவைசியும், “இது மாநகராட்சித் தேர்தல்போல தெரியவில்லை. பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய பிரதமரைத் தேர்வு செய்ய நடக்கும் தேர்தல்போல் இருக்கிறது. இன்னும் பாஜகவுக்கு ட்ரம்ப் மட்டும்தான் பிரசாரத்துக்கு வரவில்லை” என்று விமர்சித்தார்.

ஓவைசி சொல்லியது   போல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, தமிழகத்தின் வானதி சீனிவாசன் என பாஜக படையே தோல்வி பயத்தில் ஹைதராபாத் தேர்தலுக்காக அங்கேயே மையம் கொண்டிருந்தனர். பிரதமர் மோடி மட்டும்தான் பாஜவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.

இதைவிட, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பொறுப்பாளராக மோடி, அமித் ஷாவின் நம்பிக்கை பெற்ற புபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டது தான் பாஜக வின் உச்சக்கட்ட பயம்.

மேலும் இந்தத் தேர்தலுக்காக தனி தேர்தல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது பாஜக. இதைப் பார்க்கையில் ஒரு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பாஜக ஏன் முக்கியவத்துவம் கொடுக்கிறது என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கக்கூடும்.

அதற்கு அரசியல் வல்லுநர்கள் தற்போது விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு பாஜக ஏன் முக்கியவத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணம், தெலங்கானாவில் அசாதுதீன் ஒவைசி கட்சி சமீபகாலமாக பெற்று வரும் வெற்றியே.

பாஜக இந்தத் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

ஹைதராபாத் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஒவைசி பெற்று வரும் பல மடங்கு வளர்ச்சியும், பாஜக அம்மாநிலத்தை கண்வைக்க ஒரு காரணம்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் ஒவைசியின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2015 மாநகராட்சித் தேர்தலில் ஓவைசி ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 44 இடங்களைப் பெற்றிருந்தது.

2020 மாநகராட்சித் தேர்தலில் ஓவைசி ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி மொத்தம் 150 வார்டுகளில் 110 வார்டுகள் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

இதனால் அவரை தெலங்கானாவில் பலம் இழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்தத் தேர்தலை பயன்படுத்தியது பாஜக. இதை பாஜக பிரச்சார பேச்சுக்களில் இருந்தே காணலாம்.

பிரசாரத்தில் பாஜக மதவாத அரசியலை முன்னிறுத்தியதோடு நில்லாமல், ஓவைசியை மட்டுமே நேரடியாகவே விமர்சித்தார்கள்.

இதேபோல் ஹைதராபாத் வந்த அமித்ஷா, தோல்வி அச்சத்தில் “பாஜகவுக்கு வாய்ப்பளியுங்கள். ஹைதராபாத்தை நிஜாமிருருந்து விடுவித்து அனைவருக்கும் விடுதலை தருகிறோன் என்றார்.

தெலுங்கானா பாஜக தலைவர் சஞ்சய் தோல்வி விரக்தியில் “பாகிஸ்தான், ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் சட்டவிரோதமாக ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். நகராட்சி தேர்தலில் பாஜக மேயர் பதவியில் வெற்றி பெற்றால், `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மூலம், ரோஹிங்கியாக்கள் மற்றும் பாகிஸ்தானியர்களை விரட்டப்படுவார்கள்” பைத்தியக்கார பிதற்றலாக பேசினார்.

இவர்கள் மட்டுமல்ல,

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பட்நாவிஸ் என ஹைதராபாத் வந்த அனைவரும் தோல்வி பயத்தில் ஓவைசியை குறித்து ஜின்னா, ரோஹிங்கியாக்கள், பாகிஸ்தானியர் என்று விமர்சித்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் சந்திரசேகர ராவைவிட அவர்கள் ஓவைசியே அதிகம் விமர்சித்தனர்.

நடந்து முடிந்த பீகார் தேர்தலில், ஓவைசியின் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியது. இதேபோல் மகாராஷ்ட்ராவிலும் ஓவைசி கட்சி பாஜகவுக்கு எதிராக வேலை பார்த்தது. அடுத்து உத்திரபிரதேசம் தமிழ்நாடு மேற்குவங்கத்திலும் களம் காண இருப்பதாக அறிவித்திருக்கிறார் ஓவைசி.

இப்படி ஓவைசி பலம்பெற்று வருவதை பார்த்து பயந்து தான் மதத்தை முன்னிறுத்தி பாஜக அவருக்கு எதிராக தேர்தலில் இறங்கியுள்ளது.

ஆனால், ஹைதராபாத்தில் வெற்றி வாய்ப்புகள் ஓவைசி தான் சாதகமான உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகிறது.

பாஜக வின் தோல்வியை மக்களே தீர்மானிக்க இருக்கின்றனர். மக்களின் முடிவு இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும்.

source: https://www.facebook.com/photo?fbid=2594183700728198&set=a.103354203144506

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb