Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பிரச்சினைக்குத் தீர்வு சுன்னாவிலா பித்ஆவிலா?

Posted on November 29, 2020 by admin

பிரச்சினைக்குத் தீர்வு சுன்னாவிலா பித்ஆவிலா?

அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் 3 கூற்றுகள்;

1. முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அவர்களை யார் வணங்கினார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும். யார் அல்லாஹ்வை வணங்கினார்களோ அவன் உயிருடனே உள்ளான்.

2.அல்லாஹ்வின் மீது சத்தியமாக கொடிய மிருகங்கள் என்னைத் தாக்கினாலும் உஸாமாவின் படையை அனுப்பியே தீருவேன்.

3. அல்லாஹ்வின் மீது ஆணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து நோக்குவோருடன் போர்செய்தே தீருவேன்.

மேற்கூறிய அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வார்த்தைகள் இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளதை விட பன்மடங்கு சோதனைகள் நிறைந்த காலத்தில் கூறப்பட்டவையாகும்.

 

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கவில்லை என்று கூறிக்கொண்டு மக்களெல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டு இருந்த போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள் என அடித்துக்கூறினார்கள் அபூ பக்ர் ரழி அவர்கள். நபியவர்களுக்கு மிக நெருக்கமான முஸ்லிம் சமுதாயத்தில் ஈமானில் முதல் தரத்தையுடைய அவர்களின் உறுதியையே இது பறைசாற்றுகின்றது. ஆனால் இது போன்று இன்று நடைபெற்றால் இவருக்கு நபியின் மீது அன்பில்லை, பிரச்சினையின் ஆழம் தெரியாது என்றெல்லாம் வசைபாடத் தொடங்கிவிடுவார்கள்.

அது போன்றுதான் இஸ்லாத்தின் அனைத்து எதிரிகளும் மதீனாவை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்ற ஐயம் இருந்த போதும் நபியவர்கள் அனுப்பிய படையை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.

மூன்றாவது நிலைப்பாடுதான் மிகவும் ஆச்சரியமானது. எனெனில் ஒரு பக்கம் உஸாமாவின் படையில் பெரும்பாலான நபித்தோழர்கள் செல்கின்றனர். இன்னொரு பக்கம் இஸ்லாத்தை விட்டும் பல முஸ்லிம்கள் மதம்மாறிவிட்டனர். இந்த நேரத்தில் ஸகாத் தரமாட்டோம் எனக் கூறியோருடன் போராட வேண்டுமா என மக்கள் ஆட்சேபனை செய்தபோதுதான் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள்.

அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த மூன்று நிலைப்பாடுகளும் அவர்களின் தைரியத்தினாலும் துணிவினாலும் பிறந்ததல்ல. மாறாக குர்ஆன் சுன்னாவைப் பற்றிய அறிவு, அவற்றின் மீதிருந்த பற்று ஆகியவற்றால் ஏற்பட்டதாகும். ஏனெனில் வீரத்துக்கு முன்னுதாரணமான உமர் ரழி அவர்கள் கூட நிலைகுலைந்து போன சந்தர்ப்பமே அது.

எனவே மார்க்கக் கல்வியில் ஆழம் கண்டவர்களின் அறிவை ஒரு போதும் உணர்ச்சிகள் மறைத்துவிடமாட்டாது. மாறாக அவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்களைக் கட்டுப்படுத்தி தெளிவான மார்க்க வழிகாட்டலை வழங்குவார்கள். எவரது பழிச் சொல்லுக்கும் அஞ்சமாட்டார்கள்.

ஆனால் இன்று ஒரு மார்க்கத் தீர்ப்புத் தவறு எனச் சுட்டிக்காட்டினால் உங்களுக்குத் தெரியுமா நமக்கிருக்கும் பிரச்சினை? அப்படி இப்படி என்றெல்லாம் கிளம்பி வருகின்றனர்.

ஆனால் எந்த நிலையிலும் மார்க்க வழிகாட்டலை மீறாமலிருப்பதே ஒரு முஃமினின் பண்பு என்பதை மறந்துவிடுகின்றார்கள்.

( ஆக்கம். அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ )

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb