அச்சுருத்தும் கொரோனா சிகிச்சை முறை!
( இதை படிப்பவர்கள் கட்டாயமாக “மாஸ்க்” அணிவார்கள். சமூக இடைவெளியை கடை பிடிப்பார்கள்.)
கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு:
கோவிட் 19 க்கான வென்டிலேட்டர் என்பது தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும்.
அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும்.
நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது – அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.
இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார்.
இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.
திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும்.
கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப் பட்டிருக்கும்.
இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள்.
உங்களின் உடல் வெப்பநிலையை 40ஊ டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.
அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது.
ஆனால் சிலர் முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்!
o மாஸ்க் கட்டாயம் அணியுங்கள் சமூக இடைவெளியை கடை பிடியுங்கள்!
o மாஸ்க் கட்டாயம் அணியுங்கள் சமூக இடைவெளியை கடை பிடியுங்கள்!
o மாஸ்க் கட்டாயம் அணியுங்கள் சமூக இடைவெளியை கடை பிடியுங்கள்!
நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க!