Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மரணத்தை வெல்லுமா நவீன விஞ்ஞான தொழில்நுட்பம்?

Posted on August 15, 2020 by admin

மரணத்தை வெல்லுமா நவீன விஞ்ஞான தொழில்நுட்பம்?

      ரஹமத் ராஜகுமாரன்      

மனித வாழ்க்கையைப் பொறுத்தவரை மனித உடலை விட்டு ஒருமுறை உயிர் பிரித்தால் அது பிரிந்ததுதான். அதனை மீட்டுக் கொண்டு வந்து மனித உடலுக்கு மீண்டும் சேர்ப்பது என்பது எந்த விஞ்ஞானம் அல்லது தொழில் நுட்பத்தாலும் முடியாது என்பதே இன்றைய நிலை.

ஆனால், உயிருள்ள மனிதர்களை 196 டிகிரி செல்சியஸ் உறை வெப்பநிலையில் உறைய வைத்துப் பின்னர் மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல கழித்து மீண்டும் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கொண்டு வருவதன் மூலம், அவர்களை (அதாவது உயிரற்ற உடல்களை) மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை சில பல விஞ்ஞானிகளிடம் இருந்து வருகிறது.

உதாரணமாக, இந்த மருத்துவக் கூற்று அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலேயே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜே.எஸ்., எனும் பெயர்கொண்ட ஒரு 14 வயது சிறுமி, மிகவும் அரிதாக ஒரு வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக இறக்கும் தறுவாயில் இருந்தபோது, தன்னை உறைய வைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதில் வெற்றியும் கண்டார். தற்போது அவரது உடல் உறைய வைக்கப்பட்டிருக்கிறது.

 

இவரைத் தாக்கிய அரிதான புற்றுநோய்க்கான மருந்துகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், அவரை மீண்டும் உயிர்ப்பித்து அவரின் புற்றுநோயைக் குணப்படுத்தி மீண்டும் அவர் ஆரோக்கியமாக வாழ ஒரு வாய்ப்பு இருக்கிறது எனும் கூற்றை அந்தச் சிறுமியும், அவரது தாயாரும் நம்பியதே இந்த நிகழ்வுக்குக் காரணம் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

சிறுமிக்கும் அவரைப் போன்ற நம்பிக்கை கொண்ட மற்ற பலருக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், எலிகளுடைய சிசுக்களின் வளர்ச்சியானது ஒரு வகையான ரசாயனத்தின் மூலம் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட (அதாவது உறைந்துபோனது போன்ற நிலைக்கு தள்ளப்பட்ட) பின்னர், சுமார் நான்கு வாரங்களுக்கு பிறகு அந்த ரசாயனத்தை நீக்கியபோது, மீண்டும் அந்த சிசுக்களின் இயற்கையான வளர்ச்சி தொடர்ந்தது கண்டறியப்பட்டது.

ஆங்கிலத்தில் Suspended Animation என்று அழைக்கப்படும் ஒரு வகையான வளர்ச்சி உறைநிலையில் இருந்து ஒரு சிசுவானது மீண்டும் இயற்கையாக வளரும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுவது உலகில் இதுவே முதல்முறை.

இதன் அடிப்படையில், இந்த ஆய்வில் கர்ப்பப்பையில் பொருத்தப்படாத நிலையில் இருக்கக்கூடிய எலிகளுடைய வளர்ச்சியின் நிலையான Blastocyst-ல் உள்ள உயிரணுக்களின் வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கவே ஆய்வாளர்கள் முயன்றனர்.

அதாவது, உயிரணுக்களின் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் திறன்கொண்ட mTOR எனும் புரதத்தின் செயல்பாடுகளைத் தடுக்கும் mTOR inhibitors எனப்படும் ஒருவகையான ரசாயன மருந்து மூலம் சிசு உயிரணுக்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்க முயன்றபோது, அந்த உயிரணுக்களின் வளர்ச்சி முற்றிலுமாகத் தடைபட்டு நின்றுபோனது தெரியவந்தது.

இந்த ரசாயன சிசு உயிரணுக்கள் மீது பயன்படுத்துவதை நிறுத்தியபோது, அதே சிசுவானது மீண்டும் இயற்கையாக வளரத் தொடங்கியது. ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மிகவும் முக்கியமாக, இந்த வளர்ச்சி உறைநிலையானது அதிகபட்சமாக சுமார் நான்கு வாரங்கள் வரையில் பாதிப்புகள் இன்றித் தொடர்ந்து அதே சிசுக்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இத்தகைய ஒரு வளர்ச்சி உறைநிலையும் பின்னர் மீண்டும் இயற்கையாக வளர்வதும் எலிகளுக்குப் புதிதல்ல என்று கூறப்படுகிறது.

உதாரணமாக கர்ப்பமாக இருக்கும் எலிகள், மிகவும் மனஉளைச்சல் அல்லது உடல்ரீதியான உளைச்சல்கள் உள்ள சூழல்களின்போது (அதாவது உணவு இல்லாத சூழல் போல) தனது கர்ப்ப வளர்ச்சியை சில காலம் உறைநிலையில் வைத்திருந்துவிட்டு, பின்னர் உணவு கிடைக்கும் சூழல் ஏற்பட்டவுடன் மீண்டும் கர்ப்ப வளர்ச்சியை இயற்கையாகத் தொடரும் திறன் எலிகளுக்கு உண்டு என்று கூறப்படுகிறது.

ஆனால் முக்கியமாக இந்த ஆய்வில் எலிகளின் சிசுக்கள் மட்டுமல்லாமல், உடலின் எல்லா வகையான உயிரணுக்களையும் உற்பத்தி செய்யும் சிசு ஸ்டெம் செல்களையும் (Embryonic Stemcells) mTOR inhibitors மருந்து மூலம் உறைய வைத்து மீண்டும் உயிர்ப்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெம் செல்களுக்கு உள்ளே நிகழும் பெரும்பாலான மரபணுச் செயல்பாடுகளைக் குறைப்பதன் மூலமே இந்த மருந்துகள் ஸ்டெம் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து உறையச் செய்கின்றன என்று விளக்குகிறார்கள் ஆய்வாளர்கள்.
சிசுக்களையும், ஸ்டெம் செல்களையும் உறைய வைத்துப் பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய அசாத்திய திறன் கொண்ட இந்தப் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன், முழுமையாக வளர்ந்த உயிரணுக்கள் மற்றும் சிசுக்களையும் சில காலம் உறையச் செய்து தேவையானபோது மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதாவது உடலில் குறிப்பிட்ட ஒர பகுதியைத் தாக்கியுள்ள (புற்றுநோய் போன்ற) ஒரு நோயானது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தடுக்க, அத்தகைய உயிரணுக்கள் அல்லது திசுக்களை உறையச் செய்துவிடலாம் என்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், தொடக்க நிலை கர்ப்பத்தில் உள்ள சிசுக்களை உறையச் செய்வதன் மூலம் அவற்றில் மிகவும் ஆபத்தான மரபணு குறைபாடுகள் இருக்கின்றனவா என்பது தொடர்பான மேலதிக பரிசோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு மீண்டும் கர்ப்பத்தைத் தவிர்ப்பதா என்பது குறித்த முடிவுகள் எடுக்கும் வாய்ப்பு மனிதர்களுக்கு உருவாகும்.

ஆக மொத்தத்தில் உயிரணுக்களை உறையச் செய்து மீண்டும் உயிர்ப்பிக்கும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித குலத்தைப் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாற்றுவது முதல் மரபணு குறைபாடுகள்ள குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட இன்னும் கண்டறியப்படாத பல பலன்கள் இருக்கின்றன என்று உறுதியாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ ۛ وَ مِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا‌‌ ۛ يَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَ لْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَ‌ وَاللّٰهُ بَصِيْرٌ بِمَا يَعْمَلُوْنَ ‏

அன்றி, (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகளை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! அவர்களில் ஒவ்வொருவனும் “நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வேண்டுமே?” என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) யிருடன் இருக்க அவனை விட்டு வைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிட மாட்டாது.

அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:96)
ர.ரா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

36 − 29 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb