Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“பத்து காரியங்களால் உங்களுடைய இதயங்கள் மரணித்து விட்டன”

Posted on May 29, 2020 by admin

“பத்து காரியங்களால் உங்களுடைய இதயங்கள் மரணித்து விட்டன”

பிரபல துறவியான ஹளரத் இப்ராஹீமுப்னு அத்ஹம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஒரு முறை பஸராவின் கடைத்தெருவில் சென்றார். அவரை அங்குள்ள மக்கள் சூழ்ந்து கொண்டு “அபூ இஸ்ஹாக்கே, நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். எங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதில்லை, இதற்கு காரணம் என்னவென்று வினவினர். அதற்கவர் பத்து காரியங்களால் உங்களுடைய இதயங்கள் மரணித்து விட்டன.

1. அல்லாஹ்வை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். (அவன்தான் உங்களைப் படைத்து காத்து இரட்சிப்பவன் என்பது உங்களுக்கு தெரியும்) ஆனால்    அவனுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் செய்வதில்லை.

2. அல்லாஹ்வின் ரசூலை நேசிப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களை விசுவாசித்திருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால்    அவர்கள் காட்டிய வழிமுறையாகிய சுன்னத்தை நீங்கள் கடைப்பிடித்தொழுகுவதில்லை.

3. நீங்கள் திருக்குர்ஆனை ஓதி இருக்கிறீர்கள். ஆனால்    அதில் கூறப்பட்டவாறு செயலாற்றுவதில்லை.

4. அல்லாஹ் உங்களுக்கு கொடுத்துள்ள பாக்கியங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால்    அதற்குத்தக்கவாறு நன்றி செலுத்துவதில்லை.

5. ஷைத்தான் உங்களுடைய விரோதி என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால்    அவனுடைய நோக்கத்திற்கிணங்க செயலாற்றுகிறீர்கள்.

6. சுவர்க்கம் உண்டு என்று நம்புகிறீர்கள். ஆனால்    அதனை அடைவதற்கான அமல்களை செய்வதில்லை.

7. நரகம் உண்டு என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால்    அதனை விட்டு விலகுவதற்கான செயல்களை செய்வதில்லை.

8. மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை உறுதியாக தெரிந்திருக்கிறீர்கள். ஆனால்    அதற்குத் தகுந்தவாறு உங்களை நீங்கள் ஆயத்தம் செய்து கொள்வதில்லை.

9. நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து பிறருடைய குறைகளையே கவனிக்கிறீர்கள். ஆனால்    உங்களிலுள்ள குறைகளைக் குறித்து நீங்கள் சிந்திப்பதில்லை.

10. உங்களில் இறந்தவரை நல்லடக்கம் நல்லடக்கம் செய்கிறீர்கள். ஆனால்    அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதில்லை ” என்று பதிலளித்தார்கள்.

[ திருக்குர்ஆனுக்கு தமிழில் முதன்முறையாக விரிவுரை தந்த உத்தமபாளையம் மௌலானா அல்ஹாஜ், அல்லாமா, பன்னூலாசிரியர் எஸ். எஸ். முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்கள் மொழிபெயர்த்த “நாற்பது ஹதீஸ்ககள்” என்ற நூலிலிருந்து.]

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb