Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நெருப்பில் படைக்கப்பட்ட ஷைத்தான் பற்றி அல்குர்ஆன்

Posted on December 26, 2019 by admin

நெருப்பில் படைக்கப்பட்ட ஷைத்தான் பற்றி அல்குர்ஆன்

ஷைத்தான் இப்லீஸ், நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். (7:12, 18:50)

இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். அவருக்கு மரியாதை செய்ய மறுத்தான். (2:34, 15:31, 17:61, 20:116, 38:74)

மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான். (7:14-17, 15:36-,39, 17:62-64)

உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது. (16:99, 14:22, 15:42, 17:65)

இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான். (18:50)

இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான். (7:27)

மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான். (4:119, 4:120, 5:91, 7:20, 20:120, 114:4)

கெட்ட மனிதர்கள் நரகத்திற்குச் செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான். (14:22, 26:94,95, 59:15)

தீய எண்ணங்களுக்கு ஆட்படுவோர் உடனே அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுவது கடமையாகும். (7:200, 16:98, 23:97,98, 40:56, 41:36, 113:4, 114:3)

ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது. (15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9)

ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல் ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். (6:130)

கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள். (6:128, 7:38, 7:179, 11:119, 41:25, 41:29, 46:18, 55:39)

மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன. (17:88, 51:56, 55:33)

ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான். (18:50)

ஸுலைமான் நபிக்கு ஜின்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்து இறைவன் சிறப்பித்திருந்தான். (21:82, 27:17, 27:39, 34:12, 38:37,38)

ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை. (27:39,40, 72:8,9)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜின்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டனர் (46:29-32, 72:1-4, 72:19)

ஜின்களிலும் மறுமையை நம்பாதவர்கள் உள்ளனர். (72:7)

ஜின்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முயலும்போது தடுக்கப்படுவார்கள். (15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9)

ஜின்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனர். (72:11-14)

ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர். (7:12, 15:27, 38:76, 55:15)

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர். (6:112)

source:   http://tamilwebislam.blogspot.com/search

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb