இலந்தை மரத்தை இலேசாக எண்ணவேண்டாம்!
கீரனூர் மவ்லவீ S.N.R.ஷவ்கத் அலி மஸ்லஹி
வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்டது இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி இரும்புசத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது.
அல்முகைரா இப்னு சயீத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்; “ஒருமுறை நான் அப்துல்லாஹ் இப்னு அபூஷதீதா (ரளி) அவர்களின் தோட்டத்திற்கு போனபோது அங்கு இலந்தை மரம் அதிக அளவில் வளர்ந்திருப்பதைக் கண்டு “அவைகளை வெட்டி எறியலாமே..!” என்றேன். உடனே அவர் “மஆதல்லாஹ், அல்லாஹ் பாதுகாப்பானாக!” என்று கூறிவிட்டு நபிகளாரின் பொன்மொழியொன்றை ஞாபகப்படுத்தினார்.
“எவர் விவசாயத் தேவையின்றி இலந்தை மரத்தை வெட்டியெறிகிறாரோ அவருக்கு நரகத்தில் தங்குமிடம் செய்யப்படும்.” (நூல்: அபூ நுஅயம்)
மரங்கள் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டியவை. அதே வேளை விவசாயத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக மரத்தை வெட்டலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
மரத்தை வெட்டவே கூடாது என்பதல்ல விதி. வெட்டவேண்டிய நேரத்தில் வெட்ட வேண்டிய மரங்களை வெட்ட வேண்டிய அளவுக்கு வெட்டுவது தான் நல்லது.
”மரங்களை வெட்டினால் அதற்கு நரகம் தான் தண்டனை” என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
இன்று நீங்கள் மரங்களை வீணாக நெருப்பில் போட்டால் உங்களை அவை நாளை நெருப்பில் போட்டு வாட்டியெடுக்கும். அதிலும் குறிப்பாக இலந்த மரங்களை வீணாக வெட்டி வீசிவிடக் கூடாது.
இலந்தையின் உச்சந்தலை முதல் அடிவேர் வரை அனைத்துமே பயன்மிக்கவை என்பதை நாம் மறந்துவிடாமல் கவனத்தில் கொள்ள வேண்டும். இலந்தை பழம் நமக்கு நல்லதொரு ஞாபக சக்தியை தரக்கூடியது.
மிக முக்கியமான விஷயம், இறை சிம்மாசனமான அர்ஷின் அருகில் இருக்கக்கூடிய ஒரே மரம் இந்த இலந்தை மரம் தான் எனும்போது அதன் மகத்துவம் தான் என்னே!
“சித்ரத்துல் முன்தஹா” என்ற அரபிச்சொல்லுக்கு எல்லையைக் காட்டும் இலந்தை என்று பொருள். “சித்ரத்துல் முன்தஹா” ஏழு வானங்களையும் தாண்டி உள்ளது.
சித்ர், சித்ரத், சித்ரத்துல் முன்தஹா இம்மூன்று சொற்களும் அருள்மறை குர்ஆனில் 34:16, 53:14,16, 56:28 ஆகிய வசனங்களில் இடம்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
மய்யித்தை குளிப்பாட்டும்போது இந்த இலந்தை இலையை கொதிநீரில் போட்டு குளிப்பாட்டுங்கள் என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதன் காரணம், இனி இவன் மேலே போகப்போகிறான், அவன் அல்லாஹ்வை சந்திக்க வேண்டியுள்ளது. அங்கே அவன் அருகில் இருப்பது இலந்தை மரம் தான் என்பதை இலைமறை காயாக இது சுட்டிக்காட்டுகிறதோ என்னவோ…?!
இலந்தை மரங்கள் இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும் நமக்கு பயனளிப்பவை.
“(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழ் (அமர்ந்திருப்பார்கள்) (அல்குர்ஆன் 56:28) என்று சொர்க்கவாசிகளைப் பற்றி, அவர்கள் அமரும் இடம் பற்றி அல்குர்ஆன் கூறுவதிலிருந்தே இலந்தை மரத்தின் உயரிய சிறப்பை நாம் நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு பாவமான தவறான குற்றமான காரியம் நடக்கக்கண்டால் உடனே நாம் சொல்ல வேண்டிய சொல், “மஆதல்லாஹ், அஊது பில்லாஹ், அஸ்தஃ-ஃபிருல்லாஹ்” என்பன போன்ற பாதுகாப்பு தேடும் வார்த்தைகளாகும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் குர்ஆன், ஹதீஸின் பொன்மொழிகளை நாம் மறக்கவே கூடாது.
– ரஹ்மத் மாத இதழ், ஜூலை 2019. (”மரங்களை வளர்க்கலாம்” கட்டுரையிலிருந்து)
இலந்தை மருத்துவ பயன்கள்
இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது.
இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது.
உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும்.
விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் கி, ஙி2, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.
இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.
சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.
இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.
எலும்புகள் வலுப்பெற
உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.
பித்தத்தைக் குறைக்க
உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
வாந்தி குறைய
பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.
உடல் வலியைப் போக்க
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.
செரிமான சக்தியைத் தூண்ட
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.