Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைவனிடம் கையேந்துங்கள்

Posted on April 28, 2019 by admin

இறைவனிடம் கையேந்துங்கள்

மன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்.

தொழுகை நேரம் நெருங்கி விட்டது. மன்னர் அவர்களும் வந்து விட்டார். இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம் முறையிடுகின்றார்.

“மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும் யாரும் உதவிப் புரியவில்லை, நான் பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவி செய்து நல்வழிக் காட்டுங்கள்” என வேண்டுகிறார்.

கூர்ந்து கேட்ட மன்னர் அவர்கள் தொழுகைக்கு நேரமாச்சி, தொழுகை முடிந்த பின் இதே இடத்தில் மீண்டும் என்னை சந்திக்கவும் என சொல்லி அவசரமாக மன்னர் ஒளரங்கசீப் அவர்கள் தொழுகைக்கு சென்று விடுகிறார்.

தொழுகை முடிந்ததும் மன்னர் அதே இடத்திற்கு வந்து உதவிக் கேட்ட அந்த ஆளை தேடுகிறார். அவரை காணவில்லை. உடனே தனது பணியாளர்களை அழைத்து அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும்படி ஆணையிட அவர்கள் ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக் கொண்டிருந்த அந்த நபரை அழைத்து வந்து மன்னரிடம் விடுகின்றனர் ..

மன்னர் அவரை பார்த்து எங்கே சென்றீர் உமக்கு என்ன உதவி வேண்டும் என கேட்க, அந்த நபர் “இப்போ உங்க உதவி எனக்கு வேண்டாம் மன்னா” என்று அவர் சொல்ல,

மன்னர் திடுக்கிட்டு, தொழ போகும்போது உதவி கேட்டீர், தொழுது விட்டு வந்து நானே உம்மை அழைத்து உதவ முன் வரும்போது வேண்டாம் எனகிறீரே என்ன காரணம்?!’

“மன்னா தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள் பார்த்தேன். எல்லா செல்வங்களும், அதிகாரங்களும் பெற்று இந்த மண்ணை ஆளுகின்ற மன்னராகிய நீங்கள், இறைவனிடத்தில் கையேந்தி கண்மூடி அமர்ந்து இருந்தபோது… அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே உதவி கேட்கும்போது நாம் ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும்? நாமும் இறைவனிடம் கேட்போமே! என்று என்னை நானே மாற்றிக்கொண்டேன் மன்னா” என்றதும் மன்னரின் கண்கள் கலங்கின..மனதும் கலங்கியது.

உடனே அவரை மரியாதை கலந்த பார்வை பார்த்து விட்டு “நண்பரே உமது எண்ணம் உண்மையாகட்டும், மேலும் உறுதியாகட்டும்.. மனிதர்கள் புரியும் உதவிக்கு அளவு உண்டு. ஆனால் அல்லாஹ் புரியும் உதவிக்கும், அருளுக்கும் அளவே கிடையாது, யாராக இருந்தாலும் அல்லாஹ்விடம்தான் உதவி தேடியாக வேண்டும். கடைசி வரை இதையே கடைபிடியும்.”

என்று கூறி அப்போது தன் கைவசம் இருந்தவற்றை அவரின் கையைப் பிடித்து வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டு மன்னர் இறை சிந்தனையோடு நகர்கிறார்..

அந்த நபரோ இறைவனிடம் கையேந்த பள்ளிக்குள் செல்கிறார்!!

இறைவனிடம் கையேந்துங்கள்   அவன் இல்லை என்று சொல்லுவதில்லை…

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 1 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb