Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை!

Posted on February 14, 2019 by admin

அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை!

உலகில் வாழும் மனிதர்களில் சிலர் வரம்புமீறி கொலை, களவு, ஏமாற்று, மோசடி, பொய், பித்தலாட்டம், விபச்சாரம் போன்ற பாவத்திற்குமேல் பாவங்களையும், அநியாயங்களையும் செய்தவண்ணமாகவே இருக்கின்றனர்.   

மக்கள் பணத்தை சுரண்டி கொழுப்பது பல அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் பொழுதுபோக்காகவே போய்விட்டது.   மனிதர்கள் வகுத்த பலவீனத்திலும் பலவீனமான சட்டங்களிலிருந்து தப்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து குதூகளிக்கின்றனர்.   

தண்டனையிலிருந்து தப்புவது ஹல்வா சாப்பிடுகின்ற மாதிரி அவர்களுக்கு எளிதாக இருப்பதால் தவறு செய்வதைப்பற்றியோ, அநியாயம் செய்வதைப் பற்றியோ அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.

ஆனால்,

இவை அத்தனையும் கானல் நீராக மற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவர்கள் செய்த எந்த சிறு குற்றத் தண்டனையிலிருந்து கூட தப்ப முடியாது எனும்போது பெரும் குற்றங்களின் தண்டணையிலிருந்து தப்புவது துளியும் முடியாத காரியம்.

ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இவ்வுலக வாழ்க்கையின் மேலுள்ள கட்டுக்கடுங்காத ஆசை அவர்களை தவறுக்குமேல் தவறை செய்யத் தூண்டுகிறது. அவர்கள் விழிப்படைவதற்குள் மறுமை வந்துவிடும் என்பதை நினைவில் கொண்டு திருந்தி வாழ வேண்டும்.

இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் நரகம் காத்திருக்கிறது.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:

”நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்! கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!” (அல்குர்ஆன் 78:21)

”அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.” (அல்குர்ஆன் 7:41)

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.   (அல்குர்ஆன் 22:19,20)

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 78:21-24)

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!’ (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 9:35)

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன் 29:55)

ஆக,  நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக திருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கோரி நல்வாழ்க்கை வாழவேண்டும்.

– M.A.Mohamed Ali

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 58 = 65

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb