Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சீரழிக்கப்படும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் காரணிகளும்

Posted on September 21, 2018 by admin

சீரழிக்கப்படும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் காரணிகளும்

    J. யாஸீன் இம்தாதி      

[   சாதா நிலை பேராசிரியையாக இருக்கும் நிர்மலாதேவியும் துவக்கத்தில் ஒழுக்கமுள்ளவராகவே இருந்திருப்பார்.

அவருடைய படிக்கும் பருவத்தில் அவரிடம் யாரோ செய்த மூளை சலவையும் அவருடைய பதவி மோகமும் தான் நிர்மலாதேவியை மற்றும் அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இன்றைக்கு இந்த அவமானத்தில் தள்ளி உள்ளது.

படிப்பின் மீதும் பட்டத்தின் மீதும் உள்ள ஆர்வத்தால் பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்த பிள்ளைகளின் நடவடிக்கைகள் மற்றும் நட்புகளை இதர தொடர்புகளை அன்றாடம் கவனிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

ஒழுக்கத்தை கடை பிடிக்காது படிக்கும் படிப்புகளும் அதன் மூலம் வாங்கும் பட்டங்களும் பதவிகளும் குப்பைக்கு சமமானவை என்பதை பேராசிரியை நிர்மலிதேவியின் அவமானம் இன்றைய பெற்றோர்களுக்கு படிப்பினை பாடமாக அமைய வேண்டும்.]

தற்கால படிப்பறிவும் மனிதனை பண்படுத்தவில்லை என்பதற்கு அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி எனும் விபச்சார புரோக்கர் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலமும் மற்றும் அவர் மாணவிகளிடம் பேசிய கீழ்நிலை உரையாடலின் ஆடியோ பதிவும் சான்றாகி விட்டது

மதிப்பெண் மீதும் வசதி வாய்ப்புகளின் மீதும் ஏழ்மைநிலையில் உள்ள தனது மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி அரசியல் கழிசடைகளுக்கும் பணம் படைத்தோருக்கும் அடிமைகளாக்கி விபச்சாரியாக்கும் தந்திரத்தை பேராசிரியை நிர்மலாதேவி கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வந்தது தற்போது ஊர்ஜிதமாகிவிட்டது

குறிப்பிட்ட சில கல்லூரி மாணவிகள் விபச்சார புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் வண்டவாளத்தை தற்போது தண்டவாளம் ஏற்றி உள்ளார்கள் என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் பேராசிரியை நிர்மலாதேவியின் வலையில் எத்தனை மாணவிகள் சிக்கி தனது கற்பை விற்பனை செய்திருப்பார்கள் என்பதும் அவைகளை மூடி மறைத்திருப்பார்கள் என்பதும் சிந்திப்போருக்கு அறிய முடியும்.

ஆடம்பரத்தின் மீதும் உலக கல்வியின் மதிப்பெண் மீதும் பொதுவாகவே இளம் பெண்களுக்கு அதிகமான ஈர்ப்பு இருப்பதால் தான் நிர்மலாதேவி போன்ற பெண் விபச்சாரி புரோக்கர்கள் தங்கள் வாழ்வை பொருளாதாரத்தால் வளப்படுத்தி கொள்கின்றனர்.

மாணவிகளையே விபச்சாரத்திற்க்கு பேராசிரியை நிர்மலாதேவி துணிச்சலாக விலை பேசுகிறார் என்றால் அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் எந்தளவுக்கு ஒழுக்கம் கெட்டவராக இருப்பார் என்பது புலனாகிறது. அதனால் தான் நிர்மலாதேவியின் கணவனும் கூட அவரை பிரிந்து வாழ்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது.

சாதா நிலை பேராசிரியையாக இருக்கும் நிர்மலாதேவியும் துவக்கத்தில் ஒழுக்கமுள்ளவராகவே இருந்திருப்பார்.

அவருடைய படிக்கும் பருவத்தில் அவரிடம் யாரோ செய்த மூளை சலவையும் அவருடைய பதவி மோகமும் தான் நிர்மலாதேவியை மற்றும் அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இன்றைக்கு இந்த அவமானத்தில் தள்ளி உள்ளது.

படிப்பின் மீதும் பட்டத்தின் மீதும் உள்ள ஆர்வத்தால் பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்த பிள்ளைகளின் நடவடிக்கைகள் மற்றும் நட்புகளை இதர தொடர்புகளை அன்றாடம் கவனிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

ஒழுக்கத்தை கடை பிடிக்காது படிக்கும் படிப்புகளும் அதன் மூலம் வாங்கும் பட்டங்களும் பதவிகளும் குப்பைக்கு சமமானவை என்பதை பேராசிரியை நிர்மலிதேவியின் அவமானம் இன்றைய பெற்றோர்களுக்கு படிப்பினை பாடமாக அமைய வேண்டும்.

குறிப்பாக கல்லூரிகளில் உறவினர்களின் கண்காணிப்பில் இல்லாது தங்கி படிக்கும் மாணவ மாணவியர்களில் பலர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் அசிங்கத்திற்க்கும் ஆபாசத்திற்க்கும் அடிமைகளாகி வருகின்றனர்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்களை பெற்றுள்ள பல குடும்ப பெண்கள் கல்லூரிகளில் படிக்கும் பல இளைஞர்களை காமத்தால் மயக்கி சீரழிப்பதும் சென்னை மற்றும் பெருநகரங்களில் சாதாரணமாகி வருகிறது.

இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது சுதந்திரம் எனும் போர்வையில் கட்டுப்பாடு இல்லாத உரிமைகள் தான் என்பதை சமுதாயம் உணர வேண்டும்.

عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي

உங்கள் வயிறுகள் மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மனஇச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் பயப்படுகிறேன்
என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் முஸ்னத் அஹ்மத்)

நட்புடன் J .இம்தாதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb