Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நான்கு வகையான மனிதர்கள்

Posted on September 9, 2018 by admin

நான்கு வகையான மனிதர்கள்

1. வணக்கசாலிகள்.    மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

2. வணக்கசாலிகள்,    சிரமமான வாழ்க்கை

3. பாவம்செய்பவர்; மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

4. பாவம் செய்பவர்; சிரமமான வாழ்க்கை

o இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால்   அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்.

ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்

*مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ *

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 16:97)

 o  நீங்கள் நான்காவது நபராக இருந்தால்   அதுவும் இயல்பான ஒன்று தான்.

 

பாவம் செய்பவருக்கு உடனுடக்குடன் தண்டனை.

ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்;

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)

o நீங்கள் இரண்டாவது வகை நபராக வணக்கசாலியாக இருந்தும் சிரமமான வாழ்க்கையாக இருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

o ஒன்று அல்லாஹ் உங்களை நேசித்து உங்களை சோதிப்பதின் மூலம் உங்களின் அந்தஸ்த்தை உயர்த்த நாடியிருக்கலாம்.

அல்லாஹ் சொல்கிறான்;

*وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏*

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!   (அல்குர்ஆன் : 2:155)

o அல்லது, உங்கள் வணக்கங்களில் குறைபாடு ஏற்பட்டு அதில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அல்லது ஏதேனும் பாவமான காரியங்களில் ஈடுபட்டு அதைப்பற்றிய சிந்தனையில்லாமல் இருந்தால் உங்களை தன் பால் தவ்பா செய்து ஈர்க்க அல்லாஹ் செய்யும் ஏற்பாடாக உங்களுக்கு துன்பத்தைத் தரலாம்.

அல்லாஹ் சொல்கிறான்;

*وَلَنـــُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ *

மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம். (அல்குர்ஆன் : 32:21)

o நீங்கள் மூன்றாவது நபராக பாவங்கள் பல செய்தும் இவ்வுலக வாழ்க்கை மேலும் மேலும் இன்பகரமான வாழ்க்கையாக இருந்தால்,

என் அன்புச்சகோதரரே! எச்சரிக்கை,எச்சரிக்கை!

இது மெது,மெதுவாக உங்களை அழிவின் பால் இட்டுச்செல்லும் தூண்டிலாக இருக்கலாம். நிரம்பவும் ஆபத்தான வாழ்க்கை இது.

அல்லாஹ் சொல்கிறான்;

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். (அல்குர்ஆன் : 6:44)

விழித்துக்கொள்ளுங்கள். திருத்திக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம்மை காப்பானாக! என்றென்றும் அவனுக்கு நன்றியுள்ள நல்லடியாராக வாழ வைப்பானாக! ஆமீன்.

source: tnmulims.com 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb