Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஏழை எங்களுக்கே முதலிடம்…!

Posted on April 10, 2018 by admin

ஏழை எங்களுக்கே முதலிடம்…!

         பாத்திமா நளீரா        

ஹஜ்ஜுப் பெருநாள்   சிரிக்கிறது

ஹஜ்ஜாஜிகள் கூட்டம்   செழிக்கிறது.

 

சந்தோஷத்தைக் கொண்டாட   காசுக்குத்தான்

‘கல்பு” (மனம்) இல்லாமல்   காய்ந்து போயுள்ளது.

 

வருடந்தோறும்   ஹஜ் பட்டம்பெறும்

வசதி வர்க்கத்தினரே

சற்று நின்று…   பட்டினிக்குப்   பட்டியலிடும்

 

உங்கள் முஸ்லிம்   சமுதாயத்தையும்

திரும்பிப் பாருங்கள்..

 

படைத்தவனிடம்   பாவ மன்னிப்பு   கேட்டுக் கொண்டே

தூக்கத்திலும்   சொத்துக்கு – காவல்   வைக்கிறீர்கள்..

 

நாங்களோ..   வருடம் ஒருமுறை – வீசும்

வசந்தப் பெருநாளுக்கு   முன்னால்

ஏழ்மை – என்ற   கேள்விக்குறியில்

தொங்கலாட்டம் ஆடுகிறோம்..

 

எங்களின்   எஜமான் வறுமைதான்..

வட்டிக் கடைக்கும்   வட்டி கொடுப்பவனுக்கும்

வண்டி   இழுத்துக் கொண்டிருக்கிறது.

என்ன செய்ய….?

 

படைத்தவன் சோதிக்கிறான்..

மனைவி மக்களோ..

புதிய உடைக்கும்

புரியாணி சாப்பாட்டுக்கும்

மனப்பால் குடிக்கிறார்கள்..

 

தொழுகையில்..   தோளோடு நின்று

ஏற்றம் காணவரும்   தனவான்களே!

ஏழையின் – வீட்டின்   வேதனம் – என்ன

வேதம் பேசுகிறது – என்று   கேட்டுப் பாருங்கள்..

 

ஆடம்பரத்துக்கும்   அரசியலுக்கும் – உலக

மாயைகளுக்கும்   பணத்தைப் பஞ்சாகப்

பறக்க விடுகிறீர்களே!

எரிகிறது – எங்கள்   வீட்டு அடுப்பல்ல…

வயிறு!

 

மறை வேதத்தை -மறந்து…   மரண வாயிலுக்கு

பணம் என்ற   காவலரண்   வைத்திருக்கிறீர்கள்..

என்றாலும்

ஏழை – எங்களுக்கே   இறைவனிடம்   முதலிடம்!

 

பெருநாள்

உள்ளக் குமுறல்

உட்பொருளாய்

வந்தது – என்றாலும்

“ஈத் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்”

உங்கள் சிந்தனைக்கு

சீர்சேர்க்கட்டும்!

 

நன்றி: நவமணி

source: www.fathimanaleera.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

74 − 65 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb