மனிதருள் சிறந்தவர்
o ”வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவனே மனிதருள் சிறந்தவன்.” – (நூல்: முஸ்லிம்)
o ”ஆபாசப் பேச்சுக்கள் எதுவும் பேசாமல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவனே மனிதருள் சிறந்தவன்.” (நூல்: புகாரி)
o ”இறைவனிடத்திலும், முதலாளியிடத்திலும் விசுவாசமாக நடப்பவனே சிறந்த தொழிலாளி.” (நூல்: புகாரி)
o ”இல்லாளிடம் நற்பெயர் வாங்கியவனே நல்ல கணவன்.” (நூல்: திர்மிதீ)
o ”கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்வைத்தந்து, அவன் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்காமல், தன் கற்பைப் பேணிக் கொண்டவளே நல்ல மனைவி.” (நூல்: நஸயீ)
o ”அண்டை வீட்டினரோடு சுமூக உறவு கொள்ளாமல் ஆயிரம் உபரி வணக்கங்களில் ஈடுபடுபவனைவிட அவனோடு அந்நியோன்யமாகப் பழகும் குறைந்த வணக்கம் புரிபவனே மேலானவன்.” (நூல்: மிஷ்காத்)
o ”பகையினால் ஒருவர் முகத்தை பிறிதொருவர் பார்க்க விரும்பாத கட்டத்தில் பகையை மறந்து முகமன் கூறி முதலில் பேசத் துவங்குபவரே உங்களில் சிறந்தவர்.” (நூல்: புகாரி)
o ”பணிவிடை என்று வருகிறபோது, மற்றவரைவிட தன்னை முற்படுத்திக் கொள்பவனே சிறந்த தலைவன்.” (நூல்: பைஹகீ)