Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்”

Posted on August 13, 2017 by admin

“மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்”

நான் சிறுவனாக இருக்கும் போது என் தாய் என்னை அருகில் அழைத்து, உதடுகள் ஒட்டாமல் ‘ஹலால்’ என்று சொல் பார்ப்போம் என்றார்கள்.

நான் ‘ஹலால்’ என்று சொன்ன போது என் உதடுகள் ஒட்டவில்லை.

மிகவும் மகிழ்ச்சியுடன் அம்மா என் உதடுகள் ஒட்டவில்லை என்று சொன்ன போது, என்னை கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.

மகனே! இப்பொழுது உதடுகள் ஒட்டாமல் ‘ஹராம்’ என்று சொல் பார்ப்போம் என்றார்கள்.

நான் எவ்வளவோ முயன்றும் ‘ஹராம்’ என்று, ‘ம்’ ஐ சொல்லும் போது என் உதடுகள் ஒட்டிக் கொண்டன.

அம்மா எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை என்று சொன்னேன்.

கலகல என சிரித்த என் தாய், ”இது தான் மகனே ஹராமிற்கும் ஹலாலிற்கும் உள்ள வித்தியாசம்” என்றார்கள்.

”எப்பொழுதும் ஹலாலாக்கப்பட்டவை உனக்கு நன்மையின் வாசல்களைத் திறக்கும். இம்மை மறுமைக்கான எல்லா நன்மைகளையும் அது உருவாக்கும்.  மாறாக,  ஹராமாக்கப்பட்டவைகள் உனக்கு நன்மைதரும் எல்லா வாசல்களையும் அடைத்து விடும்.  உன் உதடுகள் எப்பொழுதும் ஹலாலானவற்றிற்காகவே திறந்திருக்கட்டும்.  ஹராமானவற்றை கண்டால் உன் உதடுகளை இருக மூடிக்கொள்”. என்றார்கள் என் அன்னை.

அதன் பிறகு, நான் ஏதாவது நல்லது செய்தால் உதடுகள் விரிய என்னை பார்த்து புன்னகைப்பார்கள்.

ஏதேனும் தவறு செய்தால் உதட்டை இருக்க மூடிக் கொண்டு கவலையுடன் என் அன்னை என்னைப் பார்ப்பார்கள்.

இத்தகைய நிலையில் தான் நான் வளர்ந்தேன்.

நான் பெரியவனான பின், என் தாயார் மறைந்தார்கள்.

அவர்களுக்கு கஃபனிட்ட பின் இறுதி முறையாக அவரின் முகத்தை பார்த்து நெற்றியில் முத்தமிட குனிந்தேன்.

அழகிய என் தாயின் முகம் உதடுகள் விரிய புன்னகைத்த நிலையில் கண்டேன்.

பொங்கி வரும் அழுகையை கட்டுபடுத்தியவனாக என் அன்னையின் நெற்றியில் முத்தமிட்டு,சொன்னேன்

“அம்மா! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம், ஹலால்களை பேணி நடப்பேன்.”

ஆம்!. ஒரு தாய் தன் உதிரத்தை பாலாக்கி தன் குழந்தைக்கு புகட்டும் போதே அவனுக்கு ஹலால் எது? ஹராம் எது? என்பதை எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவன் தலை சிறந்த மூஃமினாக திகழ்வான்.

ஒரு குழந்தைக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் முதல் ஆசான் தாய்தானே!

ஹலால் என்றால் திறக்கும் உதடுகள் ஹராம் என்றால் மூடிக் கொள்ளும்.

– அரபியில் முஹம்மது ராத்திப் அன்னாபிலிஸி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb