Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்!

Posted on June 24, 2017 by admin

ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்!

அமைதியின் பெயரே இஸ்லாம்! இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.

o ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை”. (ஆதாரம்: அஹ்மத்)

இந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமலான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.

கண்கொள்ளாக் காட்சிகள்

o உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகை நேரங்களில் இறைவிசுவாசிகள் இன, நிற, மொழி மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மறந்து தொழுகைக்காக வரிசைகளில் அணிவகுப்பதும்

o கடுங்குளிரிலும் அதிகாலை வேளைக்கு முன்னதாகவே எழுந்து உணவருந்திவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அதேபோல் தொழுகைகளில் அணிவகுப்பதும்

o மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒன்று கூடி அவரவர் கொண்டுவந்த உணவுப்பொருட்களையும் பழங்களையும் ஓரிடத்தில் குவித்து, பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக்கஞ்சியுடன் சேர்த்துப் பரிமாறப்பட நீண்ட சமபந்திகளில் அமர்ந்து சக விசுவாசிகளோடு பகிர்ந்துண்பதற்காக காத்திருப்பதும்

o சூரியன் மறைந்த உடன் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் கூறப்பட ஒரே நேரத்தில் சகவிசுவாசிகளோடு பேரீத்தம்பழம் கொண்டு நோன்பைத் திறப்பதும்

o உணவுண்ட பின் மீண்டும் மாலைத் தொழுகைக்காக அணிவகுப்பதும் அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகைக்காக அணிவகுப்பதும்…. ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்!

மனிதகுலம் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து தங்கள் வேற்றுமைகள் மறந்து தீண்டாமை மறந்து தோளோடுதோள் சேர்ந்து நின்று தொழும் காட்சியும் ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும் காட்சியும் அதைக் காண்பவர்களுக்கே குதூகலம் அளிக்கும் ஒன்று என்றால் அதை அனுபவிக்கும் அங்கத்தினர்களின் உள்ளங்களில் எழும் மகிழ்ச்சியை எழுத்தில் எவ்வாறு வடிக்க இயலும்?

குடும்பங்களில் குதூகலம்

இல்லங்களில் பெரியோர்களைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தைகளும் கூட நோன்பு வைக்க ஆசைப்படுவதும், பெற்றோர்களின் தடையையும் மீறி அவை உணவைத் தவிர்ப்பதும், ஆசையாக அவர்கள் உண்ணும் பொருட்களை கையில் பிடித்தபடியே நோன்பு துறக்கும் வேளை வரைப் பொறுமை காத்து பிறகு உண்பதும் இல்லங்களில் நாம் காணும் காட்சிகள்!

விடியற்காலை நோன்பைத் துவங்கும்போது உண்ணும் உணவுக்காக பெரியவர்களை எழுப்பும்போது குழந்தைகளை எழுப்பாமல் போனால் காலையில் அவர்கள் செய்யும் களேபரங்களைப் பார்க்கத்தான் வேண்டும்!

உலகம் பசியை தணிப்பதற்காகவே இயங்கி வருவதை நாம் அறிவோம். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!’ என்பது பழமொழி. பசியின் முற்றிய நிலையில் மனிதனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒரு பத்து பேரை மதிய உணவுக்காக விருந்துக்கு அழைத்து இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துப் பாருங்கள்… பசியின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்!

குழந்தைகள் முதல் பெரியோர் வரை உலக மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்களை எவ்வளவு சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக ரமலான் வார்த்தேடுக்கிறது பாருங்கள். அவர்களைப் பகல் முழுக்க பட்டினி போட்டு அதே வேளையில் அவர்களுக்குக் கையெட்டும் தூரத்தில் உணவுக் குவியலையும் வைத்துவிட்டு மாலைவரை பொறுமை காத்து வருமாறு கட்டளையிட்டு அதே வேளையில் இயல்பு வாழ்க்கை வாழவைக்கும் இறைவனின் இந்த பயிற்சிக்கு இணையான ஒன்றை நாம் வேறெங்கும் காண முடியுமா?

உலகெங்கும் பரவிக்கிடக்கும் தன் அடியார்கள் அனைவருக்கும் பகலில் பசி என்ற சீருடை அணிவித்து மாலையில் அவர்கள் சகோதர பாசத்தோடு பசியாறும் அழகைக் கண்டு ரசிப்பதில் இறைவனுக்கு அலாதி இன்பமோ?

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ (புஹாரி, முஸ்லிம்).

source: http://quranmalar.blogspot.in/2012/09/100.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

47 − 42 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb