Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நாடு சுடுகாடாகிறது!

Posted on May 7, 2017 by admin

நாடு சுடுகாடாகிறது!

[ பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தைத் தவறாகச் சேர்த்து குவிக்கிறார்களே அதை முறையாக அவர்களால் அனுபவிக்க முடிகிறதா? எத்தனை வயிறுகளுக்குத்தான் சாப்பிட முடியும்? ஒரே நேரத்தில் எத்தனை கார்களில் தான் பயணிக்க முடியும்?

இறைவனின் இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். மனிதன் என்னுடையது என்னுடையது என்று கூறிச் செல்வத்தைக் கணக்கின்றி குவிக்கிறான். ஆனால் அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்து, மறுமைக்காக தான தர்மங்கள் தாராளமாகச் செய்து மறுமைக்காக அனுப்பியது மட்டுமே அவனுடையது. எஞ்சியவை அவனது வாரிசுக்கானவை (அல்லது பினாமிக்கானவை)

இந்த நிலையை மனிதர்கள் நிதர்சனமாக, கண் கூடாகக் கண்டும் படிப்பினை பெறுவதாக இல்லை, என்னே மனிதனின் அறிவீனம்?]

”குரங்கு கையில் கிடைத்த பூமாலை’’ என்ற தொரு பழமொழி; அதுபோல் மனிதக் குரங்குகள் கையில் மத்திய, மாநில ஆட்சிகள் கிடைத்துள்ளன.

இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு மனிதத் தன்மையோ, மனிதாபமோ இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஆட்சியாளர்களுக்கு மனிதப் பண்பாடுகளோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ இருந்தால் மக்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், மக்கள் பணத்தை முழுக்க முழுக்க தவறான வழிகளில் கோடி கோடியாகச் சுருட்ட முற்படுவார்களா? இன்றைய அரசியல், மூலதனமே இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை ஈட்டித் தரும் ஒரு கேடு கெட்ட வியாபாரமாகி விட்டது.

இன்று வருமான வரித்துறை ஆட்சியாளர்களின் ஏவலர்களாக இல்லாமல், மனசாட்சியுடன், நடு நிலையுடன் செயல்பட்டுச் சோதனை நடத்தினால் எம்.சி., எம்.எல்.சி., எம்.எல்.ஏ., எம்.பி. மந்திரி, முதன் மந்திரி, பிரதம மந்திரி, அனைத்துத் துறைகளின் கீழ்மட்ட அதிகாரிகளிலிருந்து, மேல்மட்ட அதிகாரிகள் வரை ஒருவருமே தவறான வழிகளில் மக்கள் சொத்தை அபகரித்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தக் குற்றத்திலிருந்து தப்ப முடியாது. அப்படியே ஓரிருவர் தப்பினால் அது உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும். இன்று காற்றுப்புக முடியாத இடங்களில் கூட லஞ்சம் புகுந்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

இப்படிப் பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தைத் தவறாகச் சேர்த்து குவிக்கிறார்களே அதை முறையாக அவர்களால் அனுபவிக்க முடிகிறதா? எத்தனை வயிறுகளுக்குத்தான் சாப்பிட முடியும். ஒரே நேரத்தில் எத்தனை கார்களில் தான் பயணிக்க முடியும்? இறைவனின் இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். மனிதன் என்னுடையது என்னுடையது என்று கூறிச் செல்வத்தைக் கணக்கின்றி குவிக்கிறான். ஆனால் அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்து, மறுமைக்காக தான தர்மங்கள் தாராளமாகச் செய்து மறுமைக்காக அனுப்பியது மட்டுமே அவனுடையது. எஞ்சியவை அவனது வாரிசுக்கானவை (அல்லது பினாமிக்கானவை)

இந்த நிலையை மனிதர்கள் நிதர்சனமாக, கண் கூடாகக் கண்டும் படிப்பினை பெறுவதாக இல்லை, என்னே மனிதனின் அறிவீனம்?

மக்கள் சிந்தித்து விளங்க சமீபத்திய ஓர் உதார ணம். முன்னால் தமிழக முதல்வர் பல்லாயிரம் கோடிகளைத் தவறான வழிகளில் சேமித்துக் குவித்து வைத்திருந்தார். அது மட்டுமா? தனது தோழியுடன் தவறான உறவு வைத்திருந்ததால், தனது மிகமிக நெருங்கிய உறவினர்களையும் தனது வீட்டுக்கு வர விடாமல் தடுத்து வைத்திருந்தனர். அவரது மர்ம மரணத்துக்கு இவையே காரணமாக அமைந்தன. அவரது மரணத்திற்கும் அதன் மர்மம் வெளிவராமல் மறைப்பதற்கும், தமிழக அரசியலில் பெரும் பெரும் சூதாட்டங்கள் அரங்கேறுவதற்கும் அவர் சேர்த்து வைத்த பல்லாயிரம் கோடி பணமே காரணமாக இருக்கிறது. தமிழ்நாடு இன்று சுடுகாடாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

source:  http://www.annajaath.com/2017/05/03/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

87 − = 78

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb