Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரு நாய்க்கு உதவுவதற்கே சுவனம் என்றால்…

Posted on March 15, 2017 by admin

ஒரு நாய்க்கு உதவுவதற்கே சுவனம் என்றால்…

       M.A.முஹம்மத் ஸலாஹுத்தீன் B.Com.,  நீடூர்.    

 ”மனிதநேய மிக்க வாழ்வு நெறி” கூறும் ”வளமார்ந்த சமூக சார்பு ஆன்மீக நெறி” மார்க்கம் இஸ்லாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான். “என்னை நம்பு. (எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்று பொய்யாக) இணை வைக்காதே! வானம் அளவு பாவம் செய்தாலும் நான் உன்னை மன்னிக்கிறேன்.”

”ஹதீஸ் குத்ஸி” என்பது அல்லாஹ் உடைய உரை! வார்த்தைகள் அண்ணலாருடையது. அப்படி என்றால் குர்ஆன்..?!

குர்ஆன் அல்லாஹவின் உரை. மூலமும் அல்லாஹ்வுக்கே உரியது.

ஹதீஸ் என்பது அண்ணலாரின் சொல்.

எழுதப் படிக்காத தனது இறுதி தூதர் மூலமாக மூன்று வகை உரைகளை வெளிப்படுத்தியது இலக்கிய உலகின் விந்தை.

”ஏக இறை நம்பிக்கை” அவ்வளவு கண்ணியமிக்கது எல்லாம் வல்லோனிடம்.

பெரிய ஆச்சரியம்.

இங்கு அல்லாஹ் பாவ மன்னிப்பு கூட கேட்கச் சொல்லவில்லை.

விளங்க வேண்டிய கருத்து அல்லாஹ்விடத்தில் ”ஏக இறை நம்பிக்கை” அவ்வளவு உயரிய இடம் பெற்று இருக்கிறது என்பதை!

ஆக பாவம் செய்வதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று யாரும் விளங்கி செயல்படுவதில்லை.

ஒரு விபச்சாரி ஒரு நாய்க்கு அதன் தாகம் தீர்ப்பதற்காக கொஞ்சம் முயற்சி செய்து நீர் புகட்டுகிறாள். இந்த ஒரு சின்ன செயலுக்காக அல்லாஹ் அவளுக்கு சுவனம் அளித்த சம்பவத்தை ஹதீஸிலே கண்டிருப்போம்.

அதற்காக எந்த பத்தினி பெண்ணும், ”ஆகா! இனி நானும் அவளைப் போல மாறி சொர்க்கம் செல்கிறேன்” என்று விளங்கி கற்பை விலை கூறி விற்க முயலுவதில்லை.

அப்படியா சங்கதி என்று எந்த ஆணும் நாயைத் தேடி நீர் புகட்டி சொர்க்கம் செல்ல முயற்சிப்பதில்லை.

இயல்பாகவே இயற்கையாகவே உதவும் பக்குவத்திற்கு இது உந்தும்.

வேசிக்கோ நாய்க்கோ எந்த முக்கியத்துவம் தராத இஸ்லாத்தில் ஒரு நாய்க்கு உதவுவதற்கே சுவனம் என்றால் ஒரு மனிதனுக்கு உதவினால் என்ன நன்மை கிடைக்கும் என்ற சிந்தனை தலை தூக்கும் போது ஒரு முஸலிம் சிரமப்படும் யாருக்கும் உதவுவது இயல்பே. அறிவுடைமையே.

ஆம். ”மனிதநேய மிக்க வாழ்வு நெறி” கூறும் ”வளமார்ந்த சமூக சார்பு ஆன்மீக நெறி” மார்க்கம் இஸ்லாம்.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 37 = 39

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb