Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹிப்னாட்டிசம் உண்மையா?

Posted on March 9, 2017 by admin

ஹிப்னாட்டிசம் உண்மையா? 

        பி.ஜெய்னுல் ஆபிதீன்       

கேள்வி – ஹிப்னாடிஸம் (hypnotism) என்றால் என்ன? அது ஒருவிதமான கலையா? அல்லது அனைவராலும் இயலுமான காரியமா? அடுத்தவருடைய சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்வது சரியா? – சாந்து மக்பூல் கான்

பதில் பி.ஜே – ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் நோக்குவர்மம் என்று பெயரிட்டுள்ளனர்.

ஹிப்னாடிசம் மூலம் நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தனது முன்னால் இருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது வெறும் கற்பனை தானே தவிர உண்மையல்ல. இவ்வாறு செய்ய முடியும் என்று எந்த ஒரு விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. கியாமத் நாள் வரை முயற்சி செய்தாலும் நிச்சயமாக இதனை நிரூபிக்க முடியாது என்பதை உலகத்திற்கு சவாலாகவே நாம் சொல்லிக் கொள்ளலாம்.

ஹிப்னாட்டிசம் மூலம் என்னை வசப்படுத்திக் காட்டுங்கள் என்று பலரிடம் நாம் அறைகூவல் விட்டுள்ளோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் நம்பியவர்களுக்குத் தான் இது பலிக்கும்; நம்பாதவர்களை ஹிப்னாட்டிசம் செய்ய முடியாது என்பது தான் அவர்களின் ஒரே பதிலாக உள்ளது. எல்லா பிராடுபேர்வழிகளும்(?) இதையே தான் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஹிப்னாட்டிசம் குறித்த பல நூல்களை நாம் வாசித்த போது அதில் எந்த விஞ்ஞான உண்மையோ ஏற்கத்தக்க எந்த லாஜிக்கோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஹிப்னாட்டிசம் செயவதாக சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுக்கு மனநோய்க்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடிகிறது.

எந்த ஒரு ஹிப்னாட்டிச நிபுணர்(?) முன்வந்தாலும் அவர் முன்னிலையில் அது ஒரு பித்தலாட்டம் என்று நாம் நிரூபித்துக் காட்ட்த் தயாராக இருக்கிறோம்.

மார்க்க அடிப்படையிலும் இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாகும்.

எவ்வித புறச் சாதனங்களும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்பது இறைவனுக்குரிய ஆற்றலாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியவே முடியாது.

‘ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும்’ என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வைப் போல் யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை நாம் அறிவோம்.

எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வகையிலேனும் இறைவனின் நிலையில் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான இணை வைத்தலாகும். அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதுமாகும்.

அல்லாஹ் ஒரு மனிதனை ஊனமாக்கவோ, கை கால்களை முடக்கவோ, படுத்த படுக்கையில் கிடத்தவோ நினைத்தால் அந்த மனிதன் மீது எந்த சாதனத்தையும் செலுத்தாமல், எப்படி இது நடந்தது யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் செய்து முடிப்பான்.

– பி.ஜெய்னுல் ஆபிதீன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

33 + = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb