Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா…!

Posted on February 18, 2017 by admin

இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா…!

மறுமையில் நல்லடியார்களுக்கு கிடைக்ககூடிய நற்கூலிகளும் , அந்தஸ்த்துக்களும் பற்றி நிறைய ஹதீஸ்கள் உள்ளன. அவைகளை அடைவதற்கு சகாபாக்கள் ஒருவொர்கொருவர் போட்டிப் போட்டார்கள். நாம் இந்த உலகத்தை அடைவதற்கு ஒருவொர்கொருவர் போட்டிப் போடுகிறோம் தவிர, மறுமையில் கிடைக்கும் பல அந்தஸ்த்துக்கள் பற்றி நமக்கு கவலையில்லை, அக்கறையும் இல்லை!

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;

”அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ, இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ (ஷஹீத்களாகவோ) இருக்கமாட்டார்கள். ஆனால் மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்த்தைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்!”

மக்கள் வினவினர். ”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?

அண்ணலார் பதில் அளித்தார்கள். ”அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒலிமையமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்திலும் ஆழ்ந்திருக்கும் (மறுமை) நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.

பிறகு அண்ணலார், ”தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்” எனும் திருமறை (10..62) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பாளர்.. உமர் ரளியல்லாஹு அன்ஹு)

நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்கத்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை, மாறாக இஸ்லாமும், ‘இஸ்லாமிய வாழ்வை உருவாக்கிட வேண்டும்’ எனும் ஆர்வத்துடிப்பும்தான் அவர்களை ஒருவருக்கொருவர் நண்பர்களாய், தோழர்களாய் விளங்கச் செய்தது. இத்தகையவர்களுக்கு இவ்வுலகில் வெற்றியும் உதவியும் கிட்டுமென்றும் மறுவுலகில் நிரந்தர நற்கூலி கிடைக்குமென்றும் நற்செய்தி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று, குடும்பத்திலும் சரி, உறவினர்கள் மத்தியிலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி, சமூகத்திலும் சரி ஒருவருக்கொருவர் தூய அன்பு உள்ளத்தில் இல்லாமல் போய்விட்டது.. சுயநலமும், ஏதாவது காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பழகுவது பேசுவது இப்படி நம் சமுதாயத்தில் வந்துவிட்டது. சிலரைத் தவிர…..

எந்தவொரு நோக்கமும் இல்லாமல் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். இதற்க்கு மேலாக இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்தி வந்தால் இன்ஷாஅல்லாஹ் அந்த உயர்ந்த அந்தஸ்த்து கிட்டும் என்பதில் ஐயம் இல்லை!

அல்லாஹ் நம் அனைவரையும் அந்த பாக்கியம் கிட்ட அருள் புரிவானாக! ஒருவருக்கொருவர் அன்புடனும், நேசத்துடனும் வாழ தௌபீக் செய்வானாக..!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

-சத்திய பாதை இஸ்லாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb