Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இது தான் இன்று சில முஸ்லிம்களின் நிலை…

Posted on January 23, 2017 by admin

இது தான் இன்று சில முஸ்லிம்களின் நிலை…

மறுமையை மறந்து துன்யா மேல் மோகம் கொண்டு விட்டான்.

o அல்லாஹ் ஒரு நாளைக்கு 5 தடவை அழைக்கிறான். அது அவன் காதில் விழாது. யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பு ஒலி மட்டும் எப்படி தூக்கத்திலும் அவன் காதுக்கு கேட்டு விடும்.

o அல்லாஹ்வின் திருமறையை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் திறக்க நேரமில்லை. ஆனால் whatsapp, viber, Facebook, Twitter என அனைத்தையும் 24 மணிநேரமும் திறந்து வைத்திருக்குறான்.

o எவ்வளவோ அல்லாஹ்வுக்கு மாறு செய்திருப்பான். ஒரு தடவை கூட தவ்பா செய்ய மனம் நினைப்பது குறைவு. ஆனால் தவறுதலாக தட்டு பட்ட ஒருவரிடம் 10 தடவை மன்னிப்பு கேட்பான்.

o அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அதிகாலை எழ மாட்டான். ஆனால் வேலை செய்யும் முதலாளியின் கட்டளைக்கு பயந்து அலாரம் வைத்து எழுவான்.

o அற்ப தொழில் நஷ்டத்துக்காக கைசேதப் படுவான். மறுமையில் கைசேதப் படப்போவதை எண்ண மாட்டான்.

o உயிரிலும் மேலான நபிகளாரின் பொன்மொழிகள் 10ஐயாவது முழுமையாக அறிந்து வைத்திருக்க மாட்டான். ஆனால் சினிமா கூத்தாடிகளின் ஒவ்வொரு *Punch Dialogues* ஐயும் மந்திரம் போல் சொல்வான்.

o அல்லாஹுவின் கலாமை ஓதிக் காண்பிக்கப் பட்டால் அது எந்த சூறாவில் உள்ளது என சொல்ல முடியாதவனாய் இருப்பான் ஆனால் ஒரு பாடல்வரி பாடிக்காட்டப்பட்டால் எந்த திரைப்படம் என்ன பாடல் என அச்சொட்டாய் சொல்வான்.

o அவனது காதுகள் குர்ஆன் ஓதலுக்கோ பயான் ஓடியோவுக்கோ செவி சாய்க்காது. ஹராமான இசைக்கு செவி சாய்ப்பான்.

o இபாதத்தில் இன்பம் காண மாட்டான். பாவத்திற்கு ரசிகனாய் இருப்பான்.

o அல்லாஹ்வின் பாதையில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய யோசிப்பான். வீண் ஆடம்பரங்களுக்கு லெட்ச கணக்கில் கணக்கின்றி செலவழிப்பான்.

o சுவர்க்கத்துக்கு நன்மாராயம் செய்யப்ட்ட 10 ஸஹாபாக்களை அறிந்திருக்க மாட்டான். கிரிக்கட் வீரர்களில் ஒருவரின் பெயரைக் கூட தெரியாமல் இருக்க மாட்டான்.

o சந்தர்ப்ப துஆக்கள் ஓதியிருக்க மாட்டான். ஆனால் பாடல் வரிகளை மனனமாக்க மறந்திருக்க மாட்டான்.

o காதுகளைக் கிழித்து ஒலிக்கும் பாங்குக்கு பதிலளிக்க மாட்டான். ஆனால் நகைச்சுவை காட்சியை ரசிக்க அனைவரின் வாயையும் மூட வைப்பான்.

o போலி துன்யாக்காய் கோடி கணக்கில் சேர்த்து வைப்பான். மஹ்ஷர் நாளில் கை கொடுக்க எதுவும் சேகரிக்க மாட்டான்.

o சிறிய கவலையையும் பெரிதாய் எண்ணுவான். முள் குத்தும் வேதனைக்கும் பாவம் மன்னிக்கப் படுவதை அறிந்திருக்க மாட்டான்.

o தொழுதுவிட்டு இறைவறனுக்காய் திக்ர் செய்ய 10 நிமிடம் கூட ஒதுக்க மாட்டான். ஆனால் Phone ல் game விளையாட 10 மணிநேரம் என்றாலும் தயங்க மாட்டான்.

இதை எழுதும் நான் உட்பட அனைவரும் பாவங்கள் செய்யக்கூடிய சாதாரண மனிதர்ளே!!!

தவ்பா செய்வோம். அல்லாஹுவின் நேசத்தை பெற்று மறுமையில் வெற்றியடைவோம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 92

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb