Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

Posted on November 28, 2016 by admin

500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

      பிந்தியா     

தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ – இந்திய பொருளாதாரத்தில் மாபெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இரண்டு நாட்களில் ‘உங்கள் பணத்தை உங்களுக்கு தருவோம்’ என்று சொன்ன மத்திய அரசு – இப்போது புதிய பணமே இல்லாமல் ஒரு மாபெரும் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது!

முதலில், 1000 ரூபாய் தாளை ஒழித்து, அதற்குப் பதிலாக 2000 ரூபாய்த் தாளைக் கொடுத்து – அதை எங்கேயும் மாற்ற முடியாமல் திண்டாட வைத்துள்ளார்கள்.

பின்னர், ஏடிஎம் எந்திரங்களில் எந்த அளவு பணத் தாள்களை வைக்க முடியும் என்கிற அளவே தெரியாமல் – புதிய ரூபாய் தாள்களின் அளவை மாற்றி, ஏடிஎம் எந்திரங்கள் செயல்படாமல் செய்தார்கள்.

இப்போது, 500 ரூபாய் தாள்களுக்கு பதிலாக – புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்கவே இல்லை என்கிற தகவல் வெளிவந்துள்ளது. அதனால்தான், 500 ரூபாய் தாள்களை தொலைக்காட்சியிலும் வாட்ஸ்அப்பிலும் மட்டும் காட்டுகிறார்கள், கைகளில் காட்டவில்லை. (இந்தியாவின் மொத்த பணத்தில் பாதி அளவாக 500 ரூபாய் தாள்கள் உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்).

“500 ரூபாய் தாள் இல்லை”

500 ரூபாய் தாள் தொடர்பாக இப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

பழைய ரூபாய் தாள்களை தடை செய்யும் முன்பு இருந்த 500 ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 1660 கோடி தாள்கள் ஆகும். இதன் மொத்த மதிப்பு 8 லட்சத்தி 30 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இதுவரை மத்திய அரசு அச்சடித்திருக்கும் புதிய 500 ரூபாய் தாளின் எண்ணிக்கை 1 கோடி தாள்கள் மட்டும்தான்! (அதாவது, எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவையோ, அதில் 0.06% மட்டும்தான் அச்சடித்துள்ளார்கள். இதில் அச்சுப்பிழையுடனும் சிலவற்றை அச்சடித்துள்ளனர்).

ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இரண்டு அச்சகங்களில் ரூபாய் நோட்டு தடைக்கு 2 மாதம் முன்பே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க உத்தரவிட்டதாம் மத்திய அரசு. ஆனால், 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நிதி அமைச்சகத்துக்கு சொந்தமான இரண்டு அச்சகங்களுக்கு, ரூபாய் நோட்டு தடைக்கு ஒருவாரம் முன்னர்தான் உத்தரவிட்டார்களாம்.

(ரிசர்வ் வங்கிக்கும், அச்சகத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இந்த தாமதம் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த அச்சகங்களுக்கான தலைமைப் பதவிக்கு ஆள் போடாமல் காலியாகவும் வைத்துள்ளதாம் மத்திய அரசு).

ஆக, இந்திய மக்களின் மிக முக்கிய பணப்பரிமாற்றமாக உள்ள, 500 ரூபாய் தாள்கள் 1660 கோடி தாள்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 1 கோடி தாள்களை மட்டும்தான் இதுவரை அச்சடித்துள்ளார்கள். இன்னும் 1659 கோடி தாள்களை எப்போது அச்சடிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத புதிராக உள்ளது.

திட்டமிட்ட சதியா?

1. ஏடிஎம் எந்திரங்களுக்கு பொருந்தாத வகையில் பணம் வடிவமைப்பு, 2. சில்லரையாக மாற்றமுடியாத 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகம், 3. முக்கிய தேவையான 500 நோட்டுகளை அச்சடிக்கவே இல்லை – இவை அனைத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால், மக்கள் பணத்தை வங்கிகளில் முடக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் எல்லாம் நடப்பதாக தெரிகிறது.

“வங்கிகளுக்கு இடையே தான் பணம் மாற வேண்டும். மக்களுக்கு இடையே பணத்தாளாக மாறக்கூடாது” என்பதில் மோடி அரசு தெளிவாக இருந்துள்ளது.

விஜயமல்லயா போன்ற பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட, வராக்கடனாக போய்விட்ட பணம் 6 லட்சம் கோடிக்கு இணையாக, இப்போது மக்களின் பணம் வங்கிகளில் குவிந்துள்ளது. இதனை மீண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்கலாம். இதற்காகத்தான் எல்லா நாடகமும் நடக்கிறதோ!

 

மோடி அரசின மாபெரும் கொள்ளை; மக்கள் கோபத்தை தணிக்க நாடகம்!

கருப்பு பணத்தை மீட்கப் போவதாகக் கதை விட்டு, மக்கள் பணத்தை பறித்து கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பதில் வெற்றியடைந்துள்ளார் பிரதமர் மோடி!

மொத்தமுள்ள 14 லட்சம் கோடி மதிப்பிலான 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களில், நேற்றுவரை 6 லட்சம் கோடி மதிப்பு பணத்தாளை வங்கிகளில் குவிக்க செய்துள்ளது மோடி அரசு. இவ்வாறு குவியும் பணத்தில் சிறிதளவுதான் மக்களுக்கு பணத்தாளாக திருப்பி அளிக்கப்படுகிறது. வங்கிகளில் குவியும் பணத்தைக் கொண்டு, தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முடியும் என்றும், இதனால், வங்கிகளின் வராக்கடன் பிரச்சினையை சமாளிக்க முடியும் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று கூறியுள்ளார்.

அதாவது, விஜய மல்லயா போன்ற பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட, வராக்கடனாக போய்விட்ட பணம் 6 லட்சம் கோடிக்கு இணையாக, இப்போது மக்களின் பணம் வங்கிகளில் குவிந்துள்ளது. இதனை மீண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனாக கொடுக்க முடியும்.

“மக்களின் கோபத்தை தணிக்க நாடகம்”; பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த இன்றே கடைசி என்று உள்ளது. மக்களின் கோபம் தணியாததால், இதனை மீண்டும் நீட்டித்து இன்று அறிவிப்பு வரலாம். அல்லது இதுபோன்ற வேறு தளர்வு நடவடிக்கைகளை இன்று இரவு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். 

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். வங்கிகளில் மக்கள் செலுத்தும் பணத்தை இனி பணத்தாளாக வெளியே எடுக்க விட மாட்டார்கள். இதற்கு முன்பு இருந்தது போன்று, பல ஆயிரங்களோ, சில லட்சங்களோ இனி பணத்தாளாக கிடைக்காது. (வங்கியில் உள்ள தமது சொந்தக் கணக்கில் இருந்து, மக்கள் தம்முடைய சொந்தப் பணத்தை, பணத்தாளாக எடுக்க முடியாத அளவுக்கு சர்வாதிகாரத்தின் உச்சமாக மாறி விட்டது மோடி அரசு) இதற்கு மாற்றாக காசோலை, மின்னணு பணமாற்றம் மற்றும் கடன் அட்டைகளை பயன்படுத்த சொல்வார்கள். அதாவது, வங்கிகளுக்கு இடையே தான் பணம் மாற வேண்டும். மக்களுக்கு இடையே பணத்தாளாக மாறக்கூடாது என்பதே மோடி அரசின் மாபெரும் சதி ஆகும்.

“டேஷ் பக்தி வாழ்க”; 87 % பொருளாதார நடவடிக்கைகள் பணத்தாள் மூலம் நடந்த நாட்டில், மக்களின் வீட்டு செலவுகளில் 96 % பணத்தாள் மூலம் நடந்த நாட்டில் – பணத்தாள் இனி இல்லை என்கிற சதியை திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டார்கள். மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் போகிறார்கள்.

source:  http://seithipunal.com/news/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb