Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)

Posted on September 22, 2016 by admin

ஹஸீனா அம்மா பக்கங்கள் (6)

பதவி உயர்வு தருபவை :

பத்து விஷயங்கள் ஓர் அடியானை சிறப்பிற்குறியவர்களின் ஸ்தானத்திற்கு உயர்த்திவிடும்.

1. அதிகமாக தர்மம் செய்வது.

2. அதிகமாக குர்ஆன் ஓதுவது.

3. உலகை விட்டு மறுமையை நினைவுகூர்பவருடன் அமர்வது.

4. உறவினரைச் சேர்ந்து வாழ்வது.

5. நோயாளியை விசாரிப்பது.

6. மறுமையை மறக்கச்செய்யும் பணக்காரர்களுடன் கலந்துறவாடாமல் இருப்பது.

7. மரணத்திற்குப் பின் செல்ல வேண்டிய இடம் பற்றி அதிகம் சிந்தனை செய்வது.

8. உலகாசையைக் குறைத்து மறுமையை அதிகம் நினைப்பது.

9. மவுனத்தை மேற்கொண்டு குறைவாகப் பேசுவது.

10. பணிவுடன் வாழ்வது.

ஈமானின் பகுதிகள் :

1. ஈமான் என்பது உண்மைப்படுத்துதல் ஆகும்.

2. உலகப்பற்றின்மையும், தக்வாவும் அதன் தலையாகும்.

3. வழிபாடும், உறுதியும் அதன் உடலாகும்.

4. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் அதன் மரம்.

5. தவ்ஹீத் அதன் கிளை.

6. ஜகாத் அதன் பழம்.

7. தொழுகையும், இக்லாசும் அதன் வேர்.

8. அல்லாஹ் அளித்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்துதல்.

9. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்தல்.

10. அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்தல்.

நூல்: ஜாமிஉல் உஸூல்

 

தொழுகையின் சிறப்பு :

“தொழுகை தீனின் தூண். அதை நிலை நிறுத்தியவர் தீனை நிலைநிறுத்தியவர் ஆவார். மேலும் அதில் பத்து நன்மைகள் இருக்கின்றன என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

1. முகத்தின் அழகு.

2. அகத்தின் ஒளி.

3. உடல் சுகம்.

4. கப்ரில் அமைதி.

5. அருளிறக்கும் சாதனம்.

6. வானத்தின் திறவுகோல்.

7. மீஜானை கனமாக்குவது.

8. ரப்பின் பொருத்தம்.

9. சொர்க்கத்தின் கிரயம்.

10. நரகத்தின் திரை.

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

சிறந்த அமல் :

ஹளரத் உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப்பார்த்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்; “உக்பாவே! இம்மை, மறுமை இரண்டிலும் மிகச்சிறந்த ஒரு மல் எதூ? உமக்குத் தெரியுமா?”

ஹளரத் உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்; “சொல்லுங்க, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; “உம்மை விட்டு விலகி ஓடுபவரோடு வலியப் போய் சேர்ந்து கொள்ளும். உம்மிடம் கேட்கத்தயங்கிக் கொண்டிருப்பவருக்கு கொடும். உமக்கு அநீதம் இழைத்தவரை மன்னித்துவிடும்.

எல்லோருக்கும் பொதுவான பத்து விஷயங்கள் :

பத்து விஷயங்கள் படைப்பினங்கள் அனைவருக்கும் பொதுவானவை.

1. மரணம்.

2. உயிர்க்கொடுத்து எழுப்புதல்.

3. மஹஷரில் நிற்குதல்.

4. செயல் ஏட்டை வாசித்தல்.

5. கணக்குக் கொடுத்தல்.

6. நன்மை, தீமைகள் நிறுக்குதல்.

7. ஸிராத்துல் முஸ்தகீமில் நடத்தல்.

8. கேள்விக்கணக்கு கேட்கப்படுதல்.

9. கூலி வழங்கப்படுதல்.

10. திடுக்கிட்டு விழுதல்.

நூல்: நவாதிருல் கல்யூபி

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb