Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பார்வை ஒன்றே போதுமோ!

Posted on September 14, 2016 by admin

பார்வை ஒன்றே போதுமோ!

      எம்.யாசிர் B.E., மதுரை      

நாட்டின் முக்கிய துறைகளான இராணுவம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை என அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இன்று இஸ்லாமிய மதத்தை பற்றி தவறாக பரப்புரை செய்வதில் முதலிடத்தில் இருப்பது ஊடகத்துறை. மக்களை எளிதில் சென்றடையும் இந்த துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சொற்பமே.

நடுநிலை தன்மையோடு செயல்படவேண்டிய ஊடகத்துறை இன்று சில கயவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு ஒரு சாராருக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களை திட்டமிட்டு புறக்கணித்தும் வருகிறது. இந்த நிலை உருவாவதற்கு முஸ்லிம்களும் ஒரு காரணம்.

நாம் என்ன செய்கிறோம்? முஸ்லிம்களை பற்றி யாரவது தவறாக எழுதிய கட்டுரையை படித்து விட்டு அல்லது டி.வி சேனல்களில் யாராவது தவறாக பேசிய பேச்சை facebook போன்ற சமூக வலைதளங்களில் விமர்சிப்போம். சிந்தியுங்கள் சகோதரர்களே. எத்தனை பேர் முஸ்லிம்களை பற்றி தவறாக எழுதப்படும் கட்டுரைகளுக்கு பதில் எழுதி உள்ளீர்கள். காலம் முழுக்க பார்வையாளராகவே இருக்க போகிறோமா?.

ஊடகங்கள் முஸ்லிம்களை புறக்கணிக்கின்றன என்று facebook -க்கில்   எழுதி தள்ளும் நாம், என்றாவது ஒரு கட்டுரை எழுதி செய்திதாள்களுக்கு அனுப்பியதுண்டா?

facebook -க்கில் கிறுக்குவதை விட்டுவிட்டு நமது சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான கட்டுரைகள் எழுதவேண்டும். அதை பல்வேறு செய்திதாள்களுக்கு அனுப்பவேண்டும். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மக்களை எளிதில் சென்றடையும் ஒரே துறை ஊடகத்துறை தான். எனவே நாம் அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

மதுவிற்கு எதிராக இஸ்லாம் என்ன கூறுகிறது, தீவிரவாதத்திற்கு எதிராக இஸ்லாம் என்ன கூறுகிறது, இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்ட விதம், சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு, சங்பரிவார்களின் பிரிவினைவாத கொள்கை என்று எண்ணற்ற கட்டுரைகள் எழுதுங்கள். இளைஞர்கள் தங்களின் திறமையை வெளிக்கொணர வேண்டும். ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு எழுத்தாளன் உள்ளான். துடிப்புள்ள இளைஞர்கள் ஊடகத்துறையை அதிகம் பயன்படுத்தவேண்டும்.

சமுதாய தலைவர்கள் டி.வி களில் பேசிவிட்டால் கைதட்டி, அதை மற்றவர்களுக்கு பரப்புகிறோம். என்று நாம் ஊடகத்துறையில் பங்குகொள்ளபோகிறோம்? இன்று சங்கபரிவார கும்பல் ஊடகத்துறையை நன்கு பயன்படுத்தி வருகிறது. தாங்கள் கூறவரும் கருத்துக்களை எழுத்துக்களாக மாற்றி மக்களுக்கு சென்றைய செய்கின்றனர். காலம்காலமாக அதை நாம் “படித்துக்கொண்டே” தான் இருக்கிறோம்.

நாம் இதுவரை எத்தனை கட்டுரை எழுதி இருக்கிறோம் என்று உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள். ஊடகங்கங்கள் நம்மை புறகணிக்கவில்லை. நாம் தான் ஊடகத்தை புறக்கணித்து வருகிறோம். பேனாவின் வலிமை இன்னும் நமக்கு தெரியவில்லை. இது தான் உண்மை.

ஊடகத்துறையில் கயவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஒரே வழி எழுத்து தான். இளைஞர்களே இப்பொழுதே எழுந்த ஆரம்பியுங்கள். எழுதுவதை நாகரிகமாகவும், புள்ளிவிவரத்தோடும் எழுதுங்கள். நிறைய கட்டுரைகள் எழுதி செய்தித்தாள்களுக்கு அனுப்புங்கள். நம்மால் முடியாதது எதுவும் இல்லை. சமுதாயத்திற்கு எழுத்தாளர்கள் தான் தேவை. பார்வையாளர்கள் வேண்டாம்.

– எம்.யாசிர் B.E., மதுரை

source: http://www.thoothuonline.com/archives/77099

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb