Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதர்கள் பலவிதம்!

Posted on September 6, 2016 by admin

மனிதர்கள் பலவிதம்!

பொறாமைதனை நெஞ்சில் ஏற்றி
பொருமிப் பொருமி அலைகிறான்
எருமைபோல் நடந்துகொண்டு
ஏமாறுபவன் இருக்கிறான்!

பேராசையால் மூளைமங்கி
பேந்தவிழிப்பவன் இருக்கிறான்
போராசையினால் போட்டிபோட்டு
பணக்காரனானவன் இருக்கிறான்!

பெண்ணாசை பித்துப் பிடித்த
பெரிய மனிதன் இருக்கிறான்
பொன்னாசையால் விழிகள் பிதுங்கி
பொறாமைப்படுபவன் இருக்கிறான்!

காசு கொடுத்து தீயதுசெய்து
காசினியில் வாழ்பவன் இருக்கிறான்!
மாசு கொண்ட உள்ளத்தாலே
பாசம் பொழிபவன் இருக்கிறான்!

பேனை பிடித்து பெயருக்காக
எழுதும் மனிதன் இருக்கிறான்
செல்போனில் பேசி பெண்களையெல்லாம்
ஏமாற்றுபவன் இருக்கிறான்!

வட்டி உண்டு வாழ்க்கையிலே
வயிறு வளர்த்தவன் இருக்கிறான்
முட்டி நிறைய கள்ளு, சாராயம்
காய்ச்சி விற்பவன் இருக்கிறான்!

பக்தி கொண்டு நல்லவனைப்போல்
பணிந்து நடப்பவன் இருக்கிறான்
கத்தி கொண்டு பிறரைமிரட்டி
காசு பறிப்பவன் இருக்கிறான்!

மாடி வீடு, காரு, காசு
தேடித் திரிபவன் இருக்கிறான்
பதவி, அதிகார ஆசை பிடித்து
பல்லு இளிப்பவன் இருக்கிறான்!

பொய்யை மட்டும் சரியாக
பேசும் மனிதன் இருக்கிறான்
மெய்யை மட்டும் மருந்துக்குக் கூட
உச்சரிக்காதவன் இருக்கிறான்!!!

source: http://rimzapoems.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 9 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb