மனைவியின் அருமை அவளின் மறைவிற்குப் பின்பே பலருக்குப் புரியும்!
நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
காசின் அருமை வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பிலே தெரியும்!
தந்தையின் அருமை அறிவினில் தெரியும்!
நண்பனின் அருமை உதவியில் தெரியும்!
அண்ணனின் அருமை அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின் அருமை அரவணைப்பில் தெரியும்!
தம்பியின் அருமை தயவில் தெரியும்!
தங்கையின் அருமை விருந்தில் தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுமையில் தெரியும்!
மனைவியின் அருமை அனைத்திலும் தெரியும்!
ஆனால்…! இது…
அவளின் மறைவிற்குப் பின்பே
பலருக்குப் புரியும்!
மனிதனே! உன் பண்பு….?
வசந்த காலம் வந்தாலும்
கற்கள் புல்பூண்டுகளை
விளைவிப்பது இல்லை.
மண்ணிலிருந்தே அணைத்தும் விளைகின்றன!
மனிதனே! நீயும் மண்ணில்தான்
படைக்கப்பட்டாய்!
மண் குணம், பண்பு எதைக்
கொடுத்தாலும்
திருப்பித் தந்துவிடும்.
உன் பண்பு….?
முஸ்லிம் முரசு, ஆகஸ்ட் 2015