Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்

Posted on July 31, 2016 by admin

வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்

[ ஒரு நாட்டில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் உள்­ள­போ­திலும், ஒரு குடும்­பத்தில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு குடும்­பத்­த­லைவன் தொழில் புரி­யா­­மை­யினால் அல்­லது குறைந்த ஊதி­யத்­திற்கு தொழில் புரி­வ­தனால் போதிய வருமானம் கிடைக்­காமை, தாய் அல்­லது தந்தை அல்­லது இரு­வரும் எதிர்­நோக்கும் நோய்கள், அதே­போல, சகோ­தரர் அல்­லது சகோ­தரி எதிர்­நோக்கும் உடற்­கு­றை­பாடு, போதிய கல்­வி­ய­றிவு இன்மை, அதிக குடும்ப உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, கணவன் உயி­ரி­ழப்பு அல்­லது விவா­க­ரத்தால் வித­வை­யாதல் போன்ற பல கார­ணங்கள் குடும்ப வறு­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

இலங்­கையில் வடக்கு கிழக்கில் 40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வித­வைகள் உள்­ள­தாக சில புள்­ளி­வி­ப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இவர்­களில் பலர் ஒரு வேளை சப்­பாட்­டுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலையும் காணப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான வறுமை நிலை பல குடும்பத் தலை­வி­களை வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மாற்­றி­யுள்­ளது.

எவ்­வித தொழில் முன் அனு­ப­வ­மு­மின்றி பணத்தை மாத்­திரம் மைய­மாகக் கொண்டு செல்­கின்ற அல்­லது முக­வர்­க­ளினால் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்ற அநேக பெண்கள்; அங்கும் இங்­கு­மாக பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்கு முகங்­கொ­டுக்­கின்­றனர்.

அந்­நா­டு­க­ளி­லுள்ள வீடு­களில் பணிக்­காக அமர்­த்­தப்­ப­டு­கின்­ற­போது அவ்­வீ­டு­களின் நவீ­னத்­திற்கு ஏற்ப தமது பணி­யினை நிறைவு செய்ய முடி­யாமை, அவர்­க­ளது மொழியில் உரிய முறையில் தொடர்­பா­டலை ஏற்­ப­டுத்த முடி­யாமை, அந்­நா­டு­களின் கலா­சார பண்­பாடுச் சூழ­லுக்கு ஏற்ப சுய­மாக இயங்க இய­லாமை, அந்­நா­டு­களின் தொழில் உறவு, சட்டம் ஒழுங்கு என்­பவை தொடர்­பான போதிய அறிவு காணப்­ப­டாமை போன்ற பல­வீ­னங்­க­ளுடன் பணி புரி­கின்ற இவர்­க­ளினால், புரி­கின்ற தொழி­லுக்குக் கிடைக்கும் பணத்தைக் கூட முறை­யாக முகா­மைத்­துவம் செய்ய முடி­ய­தா­வர்­க­ளாக உள்­ளனர்.]

வெளிநாட்டு பணிப் பெண்கள் : வலிகளைச் சுமக்கும் கனவுகள்

சகல வளங்­களும் பெற்­ற­வர்­க­ளாக உலகில் எவரும் வாழ­வில்லை. ஒன்றில் திருப்தி கண்டால் மற்­றொன்றில் திருப்­பதி காணாத நிலை­யிலே மனித வாழ்வு உள்ளது. இவற்­றினால் போதும் என்ற மனப்­பாங்கில் வாழும் மக்­களை விடவும் போதாது என்ற மனப்­பாங்கில் வாழும் மக்­களே அதிகம்.

அவ்­வா­றான மன நிலையில் வாழ்­வோரில் பலர் பெரு­ளா­தார வள­மின்றி துன்­புற்றும் வாழ்­கின்­றனர். இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு சில சந்­தர்ப்­பங்­களில் சிறி­த­ளவில் உத­விகள் கிடைத்­தாலும், அவ்­வு­த­வி­களால் அவர்­க­ளது குடும்­பத்தை நகர்த்­து­வது என்­பது முயற்­கொம்­பா­க­வுள்­ளது. இதனால் சமூக, பொரு­ளா­தார மட்­டத்தில் பின்­னி­லையில் கணிக்­கப்­ப­டு­கின்­றனர். பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வுகள் மக்­களை வர்க்­கங்­க­ளா­கவும் பிரித்துக் கணிக்­கி­றது. பொரு­ளா­தார அடிப்­ப­டையில் சமூ­கத்தில்; உயர்­தர, மத்­திய தர, வறிய மக்கள் என மக்கள் வரை­யறை செய்­யப்­ப­டு­கின்­றனா.

எந்­த­வொரு நாட்­டிலும் யுத்­தமோ, இயற்கை அழி­வு­களோ, விலை­வாசி உயர்வோ ஏற்­பட்­டாலும் அவற்­றினால் பாதிக்­கப்­படும் வர்க்­கத்­தி­ன­ராக காணப்­ப­டு­கின்­ற­வர்கள் இந்த மத்­திய தர மற்றும் வறிய மக்கள் என்­பது கண்­கூடு.

பொருட்கள், சேவைகள் என்­ப­வற்றின் பெறு­மான அதி­க­ரிப்­புக்கு ஏற்ப பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்க வேண்­டிய நிலைக்கு ஒவ்­வொரு மத்­திய தர மற்றும் வறிய நிலை­யுள்ள குடும்பத் தலை­வரும், தலை­வியும் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

நவீன உலகின் தொழில்­நுட்ப புரட்சி ஏற்­ப­டுத்­தி­யுள்ள மாற்­ற­மா­னது ஒவ்­வொ­ரு­வ­ரிலும் தேவையை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. தேவையின் அதி­க­ரிப்­புக்கு ஏற்ப பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தையும் இந்தக் குடும்­பங்­களில் சமூகச் சூழல் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பது உண்மை.

அடுத்த வீட்டார் வாழ்­வது போன்று தானும் தனது குடும்­பமும் வளம் பெற்று வாழ வேண்டும். அதற்­காக எந்த வழி­யி­லேனும் உழைக்க வேண்டும். என்ற மனப்பாங்கில் பணத்தைத் தேடு­வ­தற்­காக பலர் பல வழி­களை நாடிச் செல்­வ­தையும் அதனால் அவஸ்த்­தை­க­ளுக்­குள்­ளா­வ­தையும், சமூக அந்­தஸ்தை இழப்­ப­தையும் சம­கா­லத்தில் காண முடி­கி­றது.

மறு­புறம், தனது குடும்பம் வறு­மை­யி­லி­ருந்து விடு­ப­டும்­போ­துதான் பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை ஒளி­ய­மாக்க முடி­யும், குடும்பம் நிம்­மதி பெறும் அதற்­காக எங்கு சென்­றா­லும், என்ன செய்­தாலும் பணத்தைத் தேட வேண்டும் என்ற மன­நி­லையில் பல குடும்பப் பெண்கள் முனைந்­துள்­ளனர். அதற்­காக, அவர்­களைக் கொண்டு பிழைப்பு நடத்தும் நபர்­களை நாடிச் செல்­கின்­றனர்.

இவற்றின் விளைவு அவர்­களை வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பின்பால் கவரச் செய்­கி­றது.

அவர்கள் எவ்­வித தொழில் முன் அனு­பவம், தொழில்­தி­ற­னின்றி வெளி­நாட்டு வேலை வாய்ப்பைப் பெற்று வீட்டுப் பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றனர். அல்­லது விட்டுப் பணிப்­பெண்­க­ளாக வெளி­நாட்­டுக்கு குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றனர். இந்­தொ­ழி­லா­ளிகள் ஏற்­று­மதி வணி­க­மா­னது சட்­ட­பூர்­வ­மா­கவும் சட்­ட­பூர்­வ­மற்ற முறை­யிலும் நடந்­தே­று­கி­றது.

தமது வறுமை நிலை­யி­லி­ருந்து மீட்சி வெறு­வ­தற்­காக இத்­தொ­ழில்­வாய்ப்பின் மூலம் செல்­கின்­ற­வர்­களில் அதி­க­மானோர் அவர்­களின் கன­வுகள் நிறை­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளினால், சுமை­க­ளையும் வலி­க­ளையும் சுமந்து கொள்­கின்­றனர். அந்­நா­டு­க­ளை­விட்டு வேத­னை­யோடு தாய்­நாடு வந்து சேர்­கின்­றனர். இவை தொடர்­க­தை­யா­கவே நிகழ்­கி­றது.

வறு­மையும் பெண்­களும்

சமூ­கத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்­களின் வறு­மையைப் போக்­கு­வ­தற்­கான முறை­யான திட்டம் ஏற்­ப­டா­நி­லையில் பலர் தொடர்ந்தும் வறு­மையை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். உணவு, உடை, உறை­விடம், பாது­காப்­பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக அந்­தஸ்த்துப் பெறுதல் போன்­றவை உட்­பட வாழ்க்­கைத்­த­ரத்தை இழந்த நிலையே வறுமை எனப்­ப­டு­கி­றது. இந்த வறுமை நிலையில் வாழ்­வோரின் எண்­ணிக்கை நகரப் புறங்­க­ளிலும் பார்க்கக் கிராமப் புறங்­களில் அதி­க­மா­கவே உள்­ளன.

இருப்­பினும், நகரப் புறங்­கங்­களின் சேரிப்­பு­றங்­களில் வாழ்­வோரில் பலர் வறு­மைக்­கோட்டின் கீழ் தமது வாழ்வைக் கழித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

2013ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் தேசிய மட்­டத்தில் வறு­மைக்­கோட்டின் கீழ் வாழ்வோர் 14 சத வீதத்­தி­ன­ராகக் காணப்­பட்­டனர். மொன­றா­கலை, பதுளை, இரத்­தி­ன­புரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் 10 முதல் 20 வீத­மானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்­வோ­ராவர்.

ஒரு நாட்டில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்கள் உள்­ள­போ­திலும், ஒரு குடும்­பத்தில் வறுமை ஏற்­ப­டு­வ­தற்கு குடும்­பத்­த­லைவன் தொழில் புரி­யா­­மை­யினால் அல்­லது குறைந்த ஊதி­யத்­திற்கு தொழில் புரி­வ­தனால் போதிய வருமானம் கிடைக்­காமை, தாய் அல்­லது தந்தை அல்­லது இரு­வரும் எதிர்­நோக்கும் நோய்கள், அதே­போல, சகோ­தரர் அல்­லது சகோ­தரி எதிர்­நோக்கும் உடற்­கு­றை­பாடு, போதிய கல்­வி­ய­றிவு இன்மை, அதிக குடும்ப உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை, கணவன் உயி­ரி­ழப்பு அல்­லது விவா­க­ரத்தால் வித­வை­யாதல் போன்ற பல கார­ணங்கள் குடும்ப வறு­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

2014ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிரகாரம் தினமும் 400 விவா­க­ரத்­துக்கள் நாட்டில் இடம்­பெ­று­கி­றன. அது­த­விர, கடந்த 30 வருட காலம் நாட்டில் ஏற்­பட்ட கொடிய யுத்தம், சுனாமி அனர்த்தம் என்­பன வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் பலரை வித­வை­க­ளாக ஆக்­கி­யுள்­ளது.

இலங்­கையில்- வடக்கு கிழக்கில் 40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வித­வைகள் உள்­ள­தாக சில புள்­ளி­வி­ப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இவர்­களில் பலர் ஒரு வேளை சப்­பாட்­டுக்குக் கூட மற்­ற­வர்­க­ளிடம் கையேந்தும் நிலையும் காணப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான வறுமை நிலை பல குடும்பத் தலை­வி­களை வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் மாற்­றி­யுள்­ளது.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு

வறு­மையை ஒழிக்க வேண்டும். பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை சிறப்­பாக்க வேண்டும், போதிய வச­தி­கொண்ட வீடு கட்ட வேண்டும். சமூ­கத்தில் அந்­தஸ்தைப் பெற வேண்டும் என்ற எதிர்­கால ஆசை­க­ளோடும் கன­வு­க­ளோடும் உள்ள குடும்பத் தலை­வி­களின் ஒரே தெரி­வாக இருப்­பது வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புத்தான்.

இந்த வாய்ப்பை வழங்­கு­வ­தற்கு பதிவு செய்­யப்­பட்ட ஏறக்­கு­றைய 1043 வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிலை­யங்கள் நாடு பூரா­கவும் உள்­ளன. இம்­மு­கவர் நிலை­யங்­க­ளினால் பல பெண்கள் தொழில் வாய்ப்புப் பெற்று வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­றனர்.

இவ்­வாறு வெளி­நாடு செல்­கின்­ற­வர்­களில் 0.14 வீத­மான பெண்கள் தொழில்­வாண்மை பெற்­ற­வர்கள். 0.65 வீதத்­தினர் நடுத்­தர தொழில்­வாண்­மை­மிக்­க­வர்கள்.

4.9 வீதத்­தினர் தொழில் திறன் மிக்­க­வர்கள். ஆனால், இவர்­களில் 94 வீத­மானோர் எவ்­வித தொழில்­தி­ற­னு­மின்றி வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக செல்­கின்­றனர்.

இவர்கள் செல்­கின்ற பிர­தான நாடு­க­ளாக அல்­லது இலங்கைப் பணிப்­பெண்­களை வர­வ­ழைக்­கின்ற முக்­கிய நாடு­க­ளாக சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ேஜாதான், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகி­யவை உள்­ளன.

இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­ய­கத்தின் 2013ஆம் ஆண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 2009ஆம் ஆண்டு 87,404 பேரும் 2010ஆம் ஆண்டில் 86,917பேரும், 2011இல் 81,442பேரும் 2012இல் 94,612 பேரும் 2013இல் 73,987 பேரு­மாக மத்­திய கிழக்கு நாடு­களில் பணிப்­பெண்­க­ளாக பணி­பு­ரி­யச் சென்றுள்ளனர். 2014இல் சென்­றுள்ள பணிப்­பெண்­களின் எண்­ணிக்கை 88,661 ஆகும்.

எவ்­வித தொழில் முன் அனு­ப­வ­மு­மின்றி பணத்தை மாத்­திரம் மைய­மாகக் கொண்டு செல்­கின்ற அல்­லது முக­வர்­க­ளினால் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்ற அநேக பெண்கள்; அங்கும் இங்­கு­மாக பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்கு முகங்­கொ­டுக்­கின்­றனர்.

அந்­நா­டு­க­ளி­லுள்ள வீடு­களில் பணிக்­காக அமர்­த்­தப்­ப­டு­கின்­ற­போது அவ்­வீ­டு­களின் நவீ­னத்­திற்கு ஏற்ப தமது பணி­யினை நிறைவு செய்ய முடி­யாமை, அவர்­க­ளது மொழியில் உரிய முறையில் தொடர்­பா­டலை ஏற்­ப­டுத்த முடி­யாமை, அந்­நா­டு­களின் கலா­சார பண்­பாடுச் சூழ­லுக்கு ஏற்ப சுய­மாக இயங்க இய­லாமை, அந்­நா­டு­களின் தொழில் உறவு, சட்டம் ஒழுங்கு என்­பவை தொடர்­பான போதிய அறிவு காணப்­ப­டாமை போன்ற பல­வீ­னங்­க­ளுடன் பணி புரி­கின்ற இவர்­க­ளினால், புரி­கின்ற தொழி­லுக்குக் கிடைக்கும் பணத்தைக் கூட முறை­யாக முகா­மைத்­துவம் செய்ய முடி­ய­தா­வர்­க­ளாக உள்­ளனர்.

இதனால் பல்­வேறு துய­ரங்­களை அவ்­வீ­டு­களில் எதிர்­நோக்க வேண்டி ஏற்­ப­டு­வ­துடன், மனி­தா­பி­மா­ன­மற்ற உடல் உள உபா­தை­க­ளையும் ஒரு சில தொழில் வழங்­கு­னர்கள் இலங்கைப் பணிப்­பெண்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

அத்­தோடு கண­வ­னையும் பிள்­ளை­க­ளையும் விட்­டு­விட்டு வீட்டுப் பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்ற இப்­பெண்­களின் குடும்பம் ஒட்­டு­மொத்த சீர­ழி­வுக்குள் தள்­ளப்­ப­டு­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக வெளி­வரும் ஊடகச் செய்­தி­க­ளி­னூ­டாக அவை நிரூ­பிக்­கப்­ப­டு­கின்­றன. நாட்டில் உற­வுக்­கா­ரர்­களால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சிறுவர் துஷ்­பி­ரயோகச் செயற்­பா­டு­களில் அதிகம் பாதிக்­கப்­ப­டு­வது தாய் வெளி­நாடு சென்ற குடும்பப் பிள்­ளை­க­ளாகும்.

அத்­து­டன, அக்­கு­டும்பப் பிள்­ளை­களின் கல்வி பாதிக்­கப்­ப­டு­வ­தோடு போதை­வஸ்துப் பாவனை, விரும்­பத்­தகாத நடத்­தைக்­கோ­லங்கள் போன்­ற­வற்­றிற்கும் பிள்­ளைகள் உள்­ளா­கு­கின்­றனர்.

கணவன் மது­போ­தைக்கு அடி­மைப்­பட்டு மாற்று வழி­களில் தகாத உற­வு­களை ஏற்­ப­டுத்தி வாழும் சூழலும் ஏற்­ப­டு­கி­றது. இதனால் தாயும் இல்லை தந்­தையும் இல்லை என்ற குழப்­ப­க­ர­மான நிலைக்­குள்­தள்­ளப்­படும்; பிள்­ளைகள் உள­வியல் ரீதி­யா­கவும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்

இவ்­வா­றான நிலை­யில்தான் கடந்த 2013ஆம் ஆண்டு மூதுரைச் சேர்ந்த 19 வயது நிரம்­பிய றி­ஸான நபீக் கொலைக்­குற்­றம்­சாட்டப்­பட்டு சவுதி அரே­பி­யாவின் நீதி­மன்றத் தீர்ப்­புக்கு ஏற்ப மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யதும், தற்­போது மரு­தா­னையைச் சேர்ந்த 45 வயது பெண்­மணி தகாத உறவில் ஈடு­பட்டார் என்­ப­தற்­காக ஷரியாச் சட்­டத்தின் பிர­காரம் நீதி­மற்றம் வழங்­கி­யுள்ள தண்­ட­ணையை எதிர்­நோக்­கி­யுள்­ள­மையும் உள்நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.

சவூதி அரே­பி­யாவும் சட்­டமும்.

ஒவ்­வொரு நாட்­டுக்கும் ஒவ்­வொரு சட்டம் உள்­ளது. ஒவ்­வொரு நாடும் அந்­நாட்டில் வகுக்­கப்­பட்­டுள்ள சட்­டங்­க­ளுக்கு ஏற்ப குற்றம் புரிவோருக்கு தண்­டனை வழங்கி வரு­கி­றது.

பெரும்­குற்றம், சாதா­ரண குற்றம் என குற்­றங்­களின் தன்­மையைப் பொறுத்து அக்­குற்­றங்­க­ளுக்­கான தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது.

இறை­மை­யுள்ள ஓர் இஸ்­லா­மிய நாடு என்ற ரீதியில் சவூதி அரேபியாவில் இஸ்­லா­மியச் ஷரியாச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எந்தவொரு சட்­டமும் குற்­றத்­திற்­கான தண்­ட­னையை எழுந்­த­மா­ன­மாக அல்­லது நீதி தவறி வழங்கச் சொல்­ல­வு­மில்லை. அவ்­வாறு அச்­சட்டங்கள் வகுக்­கப்­பட்­டு­மில்லை.

எந்­த­வொரு குற்­ற­மா­க­வி­ருந்­தாலும் அந்தக் குற்றம் சரி­யான முறையில் விசா­ரிக்­கப்­பட்டு, சாட்­சிகள் நிரூ­பிக்­கப்­பட்டு அவற்றின் பின்­னரே அந்­நாட்­டுச்­சட்­டங்­களின் படி அக்­குற்­றத்­திற்­கான தீர்ப்பு நீதி­மன்­றங்­க­ளினால் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லையில், இஸ்­லா­மிய ஷரியாச் சட்­டத்தின் உள்­ளர்த்தம் தொடர்­பான சரி­யான தெளி­வு­ப­டுத்தல் இல்­லா­மையும் முறை­யாக முன்­வைக்­கப்­பட வேண்­டிய இடங்­களில் உரி­ய­வர்­க­ளினால் முன்­வைக்­கப்­ப­டாது இருப்­ப­த­னாலும் இச்­சட்டம் தொடர்­பான சந்­தே­கங்­களும் விமர்­ச­னங்­களும் மாற்றுக் கருத்­துக்­களும் காலத்­திற்குக் காலம் எழு­கின்­றன. ஷரி­யாச்­சட்டம் தொடர்­பான முறை­யான புரிதல் இவ்­வாறு அதனை விமர்­சிக்­கின்­ற­வர்­க­ளிடம் காணப்­ப­டு­வ­தில்லை.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­போதும், சிறுமி சேயா அவ்­வாறே கொலை செய்­யப்­பட்­ட­போதும் சவூதி அரே­பி­யாவில் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­டனை போன்று வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்­தன.

ஏனெனில், பாரிய குற்­றங்­களைப் புரி­கின்­ற­வர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­ற­போ­துதான் ஏனை­ய­வர்­களும் அக்­குற்­றங்­களைப் புரி­யாது தடுக்­கப்­ப­டு­வார்கள் என்ற உணர்­வுடன் அக்­கு­ரல்கள் எழுப்­பப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இருப்­பினும், நாலுபேர் குரல் எழுப்­பு­கி­றார்கள் என்­ப­தற்­காக எந்­த­வொரு நாட்­டிலும் எந்­த­வொரு நீதி­மன்றத் தீர்ப்பும் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. மரண தண்­டனை எல்லா நாடு­க­ளிலும் விதிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவை அந்­நா­டு­களில் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. இருந்­த­போ­திலும் அரபு நாடு­களில் குற்ற விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் நீதி­மன்றத் தீர்ப்பின் பிர­காரம் தண்­ட­னைகள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றா­ன­தொரு தண்­ட­னைக்கு உள்­ளா­கி­யுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்சை குறித்து அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கி­றது.

இந்­நி­லையில், “சவூ­தியில் எமது பெண்­ணொ­ரு­வ­ருக்கு கல்­லெ­றிந்து கொலை செய்­யு­மாறு வழங்­கிய தீர்ப்பு அந்த நாட்டின் சட்­ட­மாகும். அந்த நாட்டின் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக எங்­க­ளுக்கு எந்த நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது.

இலங்­கையில் ஒருவர் தவ­று­செய்தால் எமது நாட்டின் சட்­டப்­ப­டியே அதற்­கு­ரிய தண்­டணை வழங்­கப்­படும். அதே­போன்­றுதான் வெளி­நா­டு­களில் அந்­தந்த நாடு­களின் சட்­டத்­துக்­க­மை­யவே குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. என்­றாலும் எமது நாட்டுப் பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் தண்­டனை குறித்து மேன்­மு­றை­யீடு செய்­தி­ருக்­கின்றோம். அதற்­கான நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

மரு­தா­னையைச் சேர்ந்த இந்தப் பெண் 2013ஆம் ஆண்­டில்தான் சவூ­திக்கு வீட்டுப் பணிப்­பெண்­ணாகச் சென்­றுள்ளார். 2014 ஏப்ரல் மாதத்­தில்தான் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த மார்ச் 9ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்­துள்­ளது.

இதன் அடிப்­ப­டையில் குறித்த பெண் தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றத்தை 4 தட­வைகள் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

இறு­தி­யாக கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற வழக்கு விசா­ணை­யின்­போது குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­டதன் பிற­குதான் அவ­ருக்­கான தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள குறிப்­பிட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­மாகும்.

வறுமை ஒழிப்பும் உயிர்ப்­பா­து­காப்பும்

வெளி­நாட்டு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்­கின்ற வீட்டுப் பணிப்­பெண்­க­ளினால் அந்­நியச் செலா­வணி நாட்டுக்கு வந்து சேர்ந்­தாலும், அவர்­க­ளுக்கு அந்­நா­டு­களில் ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புக்­களும் அவர்­களின் குடும்பம் அவர்­களின் பிரிவால் எதிர்­நோக்­கு­ம் சிக்­கல்­களும் ஈடு செய்­யப்­பட முடி­யா­தவை.

குறிப்­பாக எவ்­வித முன் அனு­ப­வ­முமின்றி, எவ்­வித தொழில்­தி­ற­னு­மில்­லாமல் சாதா­ரண வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக மத்­திய கிழக்­கிற்கு அனுப்­பப்­ப­டு­வ­தனால் அவர்கள் அடையும் பயனை விட அவர்­களை அனுப்பி வைப்போர் அடையும் இலா­பமே அதிகம் என்­பதை மறுக்க முடி­யாது.

வறு­மைக்­குட்­பட்­டுள்ள குடும்­பங்­களில் பெண்­களும் வரு­மானம் ஈட்­டி­னால்தான் வறு­மையை ஒழித்து குடும்ப வாழ்வை சிறப்­பாக்க முடியும். பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்றதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வறுமையை ஒழிப்பதற்கான மாற்று வழிகள் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமாகும்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பப் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவதும் அச்சுய தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதும் அவசிமாகியுள்ளது.

வறுமையின் நிமித்தம் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், அவ்வாறு அவர்கள் அங்கு செல்வதனால் ஏற்படுகின்ற விபரீதங்களை தடுப்பதற்கும், அதனால் நாடும் ஏனையவர்களும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்ற அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கும் தீர்வாக அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்படுவது முக்கியம்.

இதற்கு அரசாங்கத்தினால் மாத்திரமின்றி சமூகத்திலுள்ள செல்வந்தர்களினதும், சமூக அமைப்புக்களினதும் பங்களிப்புக்கள் அவசியமாகவுள்ளன.

அவ்வாறு பங்களிப்புக்களை வழங்குவதற்கான மனப்பாங்குகள் சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்படுவதுடன், வறுமையினால் வீட்டுப்பணிப்பெண்களாகச் செல்வதை அல்லது இலாபமீட்டுவதற்காக அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதன் மூலம் அப்பாவிப் பெண்கள் உடல் உளத் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது தடுக்கப்படுவதுடன், அவர்களின் உயிர்களும் பாதுகாக்கப்படும். அத்தோடு குடும்பங்களும் சீர்கெட்டுப்போகாமல் காப்பாற்றப்படும்.

ஆகையால், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வறுமை ஒழிப்புக்கான முறையான திட்டங்கள் சமூகமட்டத்தில் வகுக்கப்படுவதும்; வீட்டுப்பணிப்பெண்களாக அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது தடுக்கப்படுவதும்; உள்நாட்டிலேயே அவர்களின் கனவுகள் நிறைவேறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படுவதும் காலத்தின் தேவையென சகல மட்டங்களிலும் கருதப்படுவதும் அவசியமாகும்.

source: http://vidivelli.lk/article

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb