Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி

Posted on May 20, 2016 by admin

குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தனது குதிரையில் ஏறி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்திற்கு விரைந்தார்கள்.

அப்பொழுது, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியில் நின்று மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் எதனையும் கண்டு கொள்ளாத அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நேராக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள்.

அவர்களை மூடியிருந்த போர்வையை நீக்கி விட்டு, அந்த மலர் வதனத்தில் முத்தமிட்ட அபுபக்கர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! உங்களது வாழ்வும் புனிதமாக இருந்தது..! இன்னும் உங்களது மரணமும் புனிதமானதே..! என்றார்கள்.

இறைவன் தனது அடியாரின் மீது தேர்ந்தெடுத்துக் கொண்ட அந்த மரணத்தை நீங்கள் சுவைத்துக் கொண்டு விட்டீர்கள். இனி எப்பொழுதும் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள்..!

இந்த புகழாரங்களைச் சூட்டி விட்டு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மலர் வதனத்தைப் போர்வையால் மூடி வைத்து விட்டு, வெளியே வந்தார்கள். அங்கே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் :

இங்கே இருக்கும் நயவஞ்சகர்கள் சிலர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறக்கவில்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் சென்றிருப்பது போல் சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் தனது இறைவனிடம் சென்றிருப்பதை வைத்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வாறு நாற்பது நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்களோ, அவ்வாறே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் திரும்பி வருவார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

இதனைச் செவிமடுத்த அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமரே..! நிறுத்துங்கள்..! அமைதியாக இருங்கள்..! உங்களை நீங்கள் முதலில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பின்பு இறைவனைப் புகழ்ந்தவர்களாக..!

கேட்டுக் கொள்ளுங்கள்..! தோழர்களே..! நிச்சயமாக..! யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அறிந்து கொள்ளுங்கள்..! முஹம்மதும் இறந்து போகக் கூடியவரே..! யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ…! அறிந்து கொள்ளுங்கள்..! அவனே நித்திய ஜீவன், அவனுக்கு இறப்பென்பதே கிடையாது..! என்று கூறி விட்டு, கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓத ஆரம்பித்தார்கள்..

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:143)

மேற்கண்ட இறைவசனத்தை ஓதிக்காட்டிய பின்பு, தோழர்கள் தங்களது நிலையை உணர்ந்தவர்களாகக் கூறினார்கள், இப்பொழுது தான் இந்த வசனம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளியது போன்றிருக்கின்றது என்பதை நாங்கள் அப்பொழுது உணர்ந்து கொண்டோம் என்று கூறினார்கள்.

அப்பொழுது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலை எவ்வாறிருந்தது என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இந்த வசனத்தைக் கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது பாதங்கள் நிலைகுலைய ஆரம்பித்தன, அவரால் சரியாக நிற்கக் கூட முடியாத அளவுக்கு தள்ளாடிய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நிலைகுலையாத அந்த மனிதர் நிலத்தில் சாய்ந்தே விட்டார், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெளிவு பெறச் செய்தது.

மேற்கண்ட சம்பவத்தைப் பற்றி தனது ஆட்சியின் பொழுது ஒருநாள் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நினைவு கூர்ந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மேற்கண்ட 2:143 (நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸ_ல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;)வசனத்தின் மூலம், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களே..! என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.

source: http://islamicuprising.blogspot.in/2015/09/blog-post_55.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

60 + = 70

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb