Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொட்டச்சி

Posted on March 21, 2016 by admin

பொட்டச்சி

பெண்சிசுகள் கருக்கலைப்பு
பெண்குழந்தைகள் கற்பழிப்பு
பெண்மானம் அவமதிப்பு
பெண்மன எண்ணம் நிராகரிப்பு
பெண் ஆணுக்கொரு பொழுதுபோக்கென

கண்ணெதிரே அநியாயங்கள்
கண்ணிமைக்கும் கொடுஞ்செயல்கள்
கண்டும் காணாததுபோல்
என்னுடலைமட்டும் நகர்த்துகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

உண்மைகளை ஊமையாக்கி
பொய்மைகளை புண்ணியமாக்கி
அரங்கேற்றுவதைக்கண்டும் பொம்மையாய்
தலையாட்டித் தவிக்கிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

பொல்லாப்புகளும் பொல்லாங்குகளும்
போட்டிப்போட்டுக்கொண்டு
நியாயத் தராசின் முள்ளுடைப்பதைக்கண்டும்
மூக்குநுணிவரை வந்த கோபத்தை
மூக்கைச்சிந்தி போட்டு முனங்குகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

எழுந்தால் குற்றம் எழுதினால் குற்றம்
பழகினால் குற்றம் பதறினால் குற்றமென
எதற்கெடுத்தாலும் இச்சைகற்பிக்கும்
இழிந்தோர்களை
இழிக்கமுடியாமல் புலம்புகிறேனே
என்ன செய்ய நானே ஒரு பொட்டச்சி!

விடிய விடிய காத்திருந்து
விடியும்தருணம் கூவிவிட்டு
விடிந்தபின்னே அடங்கிடக்கும்
பெட்டையாகுதே பெண்பொலப்பு
பொல்லாரின் வாயடைக்க வழியற்று
வசவேற்று நிற்குதே நாதியற்று.

திடமிருந்தும் திராணியற்று
துணிவிருந்தும் செயலற்று
மதியிருந்தும் சதிகெடுக்க
வெட்டித் தீர்ப்பதுபோல் எழும்
வீரதீர எண்ணங்களை
எழுத்துக்களுக்குள் மட்டும்
வெற்று வசனங்களாய் கொட்டித்தீர்த்துவிட்டு

சட்டிக்குள் கொதித்தடங்கும் நீராய்
சப்பென்று ஆகிறேனே எதற்கும்
சக்தியற்றவளாக போகிறேனே !
என்னதான் செய்ய முடியும்
நானே ஒரு பெண்பாவ பொட்டச்சி…

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

source: http://niroodai.blogspot.in/2016/03/blog-post_19.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 + = 52

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb