Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!

Posted on February 25, 2016 by admin

திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!

      Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)      

[ ‘மனிதனும், மனிதனும், பெண்ணும், பெண்ணும் பாலின சேர்க்கையில் ஈடுபடுவது மிருகத்தினை விட கேவலமானது.

எந்த மிருகமாவது அதே இனத்துடன் பாலினத்தில் ஈடுபடுகின்றதா?

பின் ஏன் மனிதன் அதனைப் பற்றி பேசவேண்டும். அந்தக் கேவலமான செயலில் ஈடுபட வேண்டும்?

எந்த மனிதன் தன் இன நபருடன் இன்பத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் மிருகத்தினைவிட கேவலமானவரில்லையா?’

– பிலிப்பைன்ஸ் நாட்டின் உலக குத்துச் சண்டை சாம்பியன், மேனி பக்யு ]

உலகில் பிறந்த ஒவ்வொரு மானிடனுக்கும் ஒரு துணை என்ற மண வாழ்வு நீதிக்குப் புறம்பாக வாழும் மனிதர்களின் சறுக்குகள் பற்றி சமீப கால செய்திகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்பதுடன், மண வாழ்வின் மகத்துவத்தினையும் சற்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

அமெரிக்காவினைச் சார்ந்த ‘டைமீனிக்’ என்ற பெண் 1973ம் வருடம் வருங்கால போப்பான போலந்து நாட்டின் கார்டினல் ‘கரோட்டினை’ தத்துவம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தமாக சந்தித்து ஒரு புத்தகம் எழுதுவதிற்காக போலந்து நாட்டினுக்குச் சென்று கிறுத்துவ மதக் குருவினை சந்தித்தார். அது ஒரு காலக் கட்டத்தில் மிகவும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், அதுவே ஒரு காலக் கட்டத்தில் கார்டினல் துறவரத்தினை விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு சென்று விடலாம் என்று தோன்றியதாகவும், போலந்து தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட கடித போக்குவரத்தில் இருந்து புலனாகிறது என்று பி.பி.சி. நிறுவன செய்தி குறிப்பு சமீபத்தில் வெளியாக்கி உள்ளது. அந்தக் கார்டினல் தான் பிற்காலத்தில் போப் ஜான் 2 என்று அழைக்கப் பட்டார்.

இது ஒருபுறம் இருக்க அமெரிக்க, ஜெர்மனி, ஹாலந்து,ஆஸ்ட்ரிய, ஐயர்லாந்து போன்ற நாடுகளில் பாதிரிமார்கள் தேவாலயத்தில் சாமி-கோரஸ் பாடும் சின்னஞ்சிறு பாலகர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை 14.3.2010 தேதியிட்ட ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டு மக்கள் கிறித்துவ பாதிரிமார்கள் தேவாலயங்களில் சேவையாற்ற சென்ற சிறுவர்களை பாலியல் குற்றத்திற்கு தள்ளியது கண்டு கொதித்தெழுந்து அந்த நாட்டு மக்களின் கோபாதாபங்களை 12.3.2010 அன்று ஜெர்மன் நாட்டு பிஷப்புகள் போப் ‘பெண்டிக்கினை’ச் சந்தித்து எடுத்துரைத்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

பல்வேறு மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கை சட்டப் படி செல்லும் என்று கூறப் பட்ட நிலையில் இந்திய சுப்ரீம் கோர்ட்டிலும் இது சம்பந்தமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இ.த.ச 377( கிரிமினல் சட்டத்தினை) பரிசீலித்து அறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உத்திரவிட்ட செய்தி வந்துள்ளது பற்றி உங்களுக்குத் தெரியும்.

அல்குர்ஆன் அத்தியாயம் 29:28:29 அல் அன் கபூத்தில், ‘லூத்தை நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம். அவர் தம் சமூகத்தாரிடம் மானக் கேடான ஒரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்கள். உலகத்தாரில் எவரும் அதைகண்டு உங்களை முந்தவில்லை, நீங்கள் பெண்களை விட்டு ஆண்களிடம் மோகம் கொண்டவர்களாக வருகின்றீர்களா’ என்று கூறி அந்தக் கூட்டத்தினருக்கு சொல்ல, அதனை அவர்கள் உதாசீனப் படுத்திய நேரத்தில், அந்த சமூகத்தினவருக்கு தாங்க முடியாத மவேதனையைக் கொடுத்தான் எல்லாம் வல்ல அல்லாஹ்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் உலக குத்துச் சண்டை சாம்பியனும், வருங்கால ஜனாதிபதியாக கனவில் இருப்பவருமான மேனி பக்யு 16.2.2016 அன்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ‘மனிதனும், மனிதனும், பெண்ணும், பெண்ணும் பாலின சேர்க்கையில் ஈடுபடுவது மிருகத்தினை விட கேவலமானது. எந்த மிருகமாவது அதே இனத்துடன் பாலினத்தில் ஈடுபடுகின்றதா, பின் ஏன் மனிதன் அதனைப் பற்றி பேசவேண்டும், அந்தக் கேவலமான செயலில் ஈடுபட வேண்டும். எந்த மனிதன் தன் இன நபருடன் இன்பத்தில் ஈடுபடுகின்றாரோ அவர் மிருகத்தினைவிட கேவலமானவரில்லையா’ என்று கூறியிருப்பது அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது.

மனிதர்களுக்கு திருமணம் ஏன் அவசியம் என்பதினை அல்குர்ஆன் அந் நூரில்(24:32) தெளிவாக அல்லாஹ் சொல்கின்றான் என்பது ஈமான் உள்ளவர்களுக்குப் புரியும்.

திருமண வாழ்வு ஒரு மனிதனை புனிதனாக்கிறது. திருமண வாழ்க்கை அவனை முழு மனிதனாக்குகிறது.

திருமண வாழ்வு என்பது வாழ்க்கையில் மனிதர்களை தன்னலவாதியாகவும், சுயஇன்பம் கொள்பவர்களாகவும் இருப்பதிலிருந்து தடுக்கும் ஒரு தடுப்பு அணை.

மண வாழ்வு என்பது ஒரு மனிதன் தன் மனைவியுடன் உனக்கு நான், எனக்கு நீ என்று செய்து கொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம்.

மனிதன் அமைதி பெற்று இளைப்பாறும் பசுமையாக பெண் இருக்கிறாள். இன்பத்தினைத் தரும் அதே நேரம், கணவனுக்குத் துன்பம் வரும்போது தனது எல்லா சுகத்தினையும் அவனுக்காக தியாகம் செய்து அவனை பாதுகாக்கும் பெட்டகமாகிறாள் என்பது கண்மணி ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதிஜாப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் துன்பம் வரும்போது காப்பாற்றியது பற்றி அனைவரும் படித்திருக்கின்றோம்.

திருமணம் என்பது கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள பாசப் பிணைப்பினை ஏற்படுத்தும் சமூக அமைப்பாகும்.

அந்த சமூக அமைப்பின் விரிசல் அந்த சமூக அமைப்பினையே தகர்த்து விடும். திருமணம் என்பது மேலை நாடுகளில் அவை ஒரு பாலின உணர்ச்சி வசப்படுகிற சடங்காகவே உள்ளது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் திருமணம் ஒரு சிவில் சட்டத்திற்குள் அடங்குவதில்லை. மாறாக திருமணம் இஸ்லாத்தில் உணர்ச்சிகரமான, உடல் ரீதியான, மத சார்பான ஒருங்கிணைப்பாகும். உடல் ரீதியான ஒருங்கிணைப்பு என்பது மணமக்கள் தங்களுக்கென்று வருங்கால சந்ததிகளான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாகும்.

கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ ஞானி அகஸ்டின், ‘திருமணம் என்பது சமூக, நல்லிணக்க, நல்லொழுக்கம் ஏற்படுத்தும் ஓர் அடித்தளமாகும்’ என்று கூறுகிறார்.

திருமணம் ஒரு உரிமை மட்டுமல்ல. மாறாக ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் பொறுப்பாகும், இணைப்புப் பாலமாகும்.

ஆமாம் இவையெல்லாம் தெரிந்ததும், கேள்விப் பட்டதும் தானே பின் ஏன் இதனைச் சொல்கிறார் என்று உங்களுக்குக் கேள்வி கேட்கத் தோன்றுவது இயற்கையே!

சமீப கால திருமணங்கள் நானா, நீயா என்று போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர செலவு செய்து திருமணம் விமரிசையாக செய்து, சென்னையினை நவம்பர்-டிசெம்பர், 2015ல் புரட்டியெடுத்த அடைமழை ஓய்ந்த பின்புபோல திருமணம் முடிந்தாலும் மணமகள், மணமகன் வீட்டிற்கு சென்ற சில மாதங்களிலேயே தாய் வீட்டிற்கு அழுகையும், பெட்டியும் கையுமாக திரும்பும் செய்திகள் எங்கே சமூதாய கட்டுக் கோப்பினை குழைத்து விடுமோ என்று பயமாக இருப்பதினால் நான் மேல்கோள் காட்டுகின்றேன். முன்பெல்லாம் மனைவியினை விட்டுவிட்டு பர்மா, மலேசியா, ஸ்ரீலங்கா போய் இரண்டு அல்லது மூன்று வருடம் சென்று மனைவியினைப் பார்க்கும் காலம் கரை ஏறிவிட்டது. அப்போது கூட கண்டதே கணவன், கொண்டதே கோலம் என்று எப்போது கணவன் வருவான் என்று காத்திருக்கும் காலம் மலையேறி விட்டது. இப்போது கணவன் அருகில் இருக்கும் போதே கணவன்-மனைவிக்கும், மனைவி-மாமியார்-நாத்தனார் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து வாழும் பெண்களை, ஆண்களை நாம் காணாமல் இருக்க முடியவில்லையல்லவா?

அது ஏன்?

1.) திருமணம் நடக்கும்போது நாம் கவனம் செலுத்துவது ஆடம்பர உடைகள், ஆபரண ங்கள், சுவைமிகு உணவு வகைகள், கேளிக்கைகள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகின்றோம். அரேபியால் உள்ளது போல திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகள் ஒத்தக் கருத்துடையோராக்க இரண்டு வீட்டார் முன்னிலையில் கவுன்சிலிங் செய்து நல் போதனைகள் செய்வதில்லை.

2.) திருமணம் செய்யும் போது எவ்வாறு இரு வீட்டாரும் இனணந்து வேளைகளில் ஈடுபட்டூமோ அதனை சிறிது சின்னஞ்சிறு மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த கட்டிடம் ஆடாமல், அசையாமல் இருக்க அடித்தளம் போடுவதில்லை.

3.) உறவினரும் மூக்குப் பிடிக்க, நா சுவைக்க விருந்து சாப்பிட்ட கையேடு அந்த மணமக்கள் சந்தோச வாழ்க்கை நடத்துகின்றார்களா என்று பார்ப்பதில்லை, மாறாக மணமக்களுக்குள் வேற்றுமை வந்தால் அதனை ஊதி பெரிதாக்கி இன்னொரு விருந்து சாப்பிடமாட்டோமா என்று என்னும் மனநிலை தற்போது இருக்கின்றது.

4.) ஜமாத்தாரும் திருமண தினத்தில் பதிவேட்டில் பதியும் அளவிற்கு நின்றுவிட்டு, மன முறிவு பற்றிய வழக்குகள் வரும்போது, அவர்களுக்கு பிரிவு நோட்டிஸ் கொடுக்கும் லெட்டெர் பேடுகளாக இருப்பதினைக் காண்பது வேதனை அளிக்கின்றது.

5.) நவீன டி.வி. சீரியல்கள், நெட், செல் போன், சினிமா மோகம் நிறைய இளசுகளின் மனதுகளில் நச்சு விதிகளை விதைத்து விடுகின்றன. அவைகளைப் போக்க வயதான குடும்பத்தினர் முயற்சி எடுக்காது, அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து சிரித்து மகிழ்வது வீட்டுக்கு மட்டுமன்றி,சமூகத்திற்கே வேட்டு வைக்கும் என்று எண்ணுவதில்லை.

6.) சில அமைப்புகள் பெற்றோர் சம்பந்தம் பெறாமல் வரும் ஆண்களையும், பெண்களையும் புரட்சி செய்கின்றோம் என்று திருமணம் செய்து வைப்பது அவர்களை பெற்றோர், உற்றார், உறவினரை விட்டு ஒதுக்கித் தள்ளப் பட்டு, இளம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வரும்போது அவர்களுக்கு ஆலோசனை சொல்லக் கூட நாதியில்லா பரிதாப நிலையினைக் காண முடிகின்றது.

7.) மேற்கூறிய நிலை தொடருமேயானால் வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாழாத பெண் மட்டுமல்ல, மண வாழ்வு முறிந்து தனியே வாழும் ஆண்களும் இருக்கும் நிலை வருமல்லவா?

ஆகவே மண வாழ்வு முறியாமல், நமது சமூக அமைப்பினை பலப் படுத்த மார்க்க அறிஞர்கள் கூடிய விரைவில் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

AP,Mohamed Ali

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

34 − 28 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb