Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வுளுவுடன் பள்ளிக்கு செல்வோம்!

Posted on January 23, 2016 by admin

வுளுவுடன் பள்ளிக்கு செல்லல்

    மௌலவி யூனுஸ் தப்ரீஸ்    

நாம் அன்றாடம் செய்யும் அமல்கள் மூலம் எவ்வாறு நமது உள்ளத்தில் எப்படி இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது? என்பதை விளக்கப் படுத்தும் முகமாக ஒவ்வொரு மாதமும் ஓரிரு ஹதீஸ்களை முன் வைத்து அதற்கான வழி காட்டலை வழங்கி வருகிறோம்.அந்த வரிசையில் நாம் தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது வுளுவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது பற்றிய ஹதீஸை விளக்க உள்ளேன்.

பாங்கு சத்தம் கேட்டவுடன், வுளு செய்து கொண்டு பள்ளிக்கு போக வேண்டும். அப்படி போகும் போது, பள்ளியை நோக்கி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை பதியப் படும், ஒரு பாவம் அழிக்கப் படும்.

பின்வரும் ஹதீஸை கவனியுங்கள்.

உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.” (நூல்: முஸ்லிம் 393)

இந்த ஹதீஸின் படி தொழுகைக்காக பள்ளிக்கு செல்லு்ம் போது வுளுவுடன் செல்ல வேண்டும். அப்படி செல்லும் போது எனது பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. நன்மைகள் எழுதப் படுகின்றன. என்ற சிந்தனையோடு செல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டு செல்லும் போது உள்ளத்தில் இறையச்சத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக வீட்டில் இருந்தாலும் சரி, அல்லது தொழில் புரியக் கூடிய இடத்தில் இருந்தாலும் சரி, எல்லா சந்தர்ப்பங்களிலும் வுளுவுடன் இருக்க கூடிய நிலையை அமைத்துக் கொள்ள வேணடும். அதன் மூலமும் உள்ளத்தில் இறையச்சம் வளருவதை உணர முடியும்.

மேலும் வுளு செய்யும் போது அவரவர் செய்த பாவங்கள் தண்ணீரோடு, தண்ணீராக வெளியேறுகின்றன் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை கவனிக்கலாம்.

”ஒரு அடியான் வுளு செய்யும் போது முகத்தை கழுவினால் கண்களால் பார்க்கப் பட்ட பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. கையை கழுவினால் கையினால் செய்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. காலை கழுவினால் பாவத்திற்காக நடந்த பாவங்கள் தண்ணீரின் இறுதி சொட்டுடன் வெளியேறுகின்றன. என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

நாம் வுளு செய்யும் போது அதாவது முகத்தை கழுவும் போது கண்ணால் செய்த பாவங்கள் இப்போது வெளியேறுகின்றன என்றும், கைகளை கழுவும் போது கைகளால் செய்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும், காலை கழுவும் போது பாவத்திற்காக நடந்த பாவங்கள் வெளியேறுகின்றன என்றும் நினைத்துக் கொண்டு வுளு செய்தால் அந்த நேரத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

வுளுவின் துஆ

வுளு செய்த பின் வுளுவுடைய துஆவை ஓதினால் அவருக்காக சுவர்கத்துடைய வாசல்கள் திறக்கப்படுகின்றன. என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப் படுத்துவதை காணலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ”…உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம். (நூல்: முஸ்லிம் 397)

நீங்கள் வுளு செய்து முடித்து இந்த துஆவை ஓதியவுடன் எனக்காக சுவர்கத்தின் எட்டு வாசல்கள் திறக்கப்படுகின்றன,

இப்போது நான் சுவர்கத்திற்குள் நுழைகின்றேன் என்ற உணர்வை அமைத்துக் கொள்ள வேணடு்ம்.

உதாரணத்திற்கு

சுப்ஹூ தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் நான் இப்போது பாபு ஸதக்கா வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும்,

ளுஹர் தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் நான் பாபுஸ் ஸலாத் வழியாக சுவர்கத்திற்குள் செல்கிறேன் என்றும்,

அஸரு தொழுகைக்கு வுளு செய்து, இந்த துஆவை ஓதிய பின் பாபுல் ஜிஹாத் வழியாக சுவர்கத்திற்கு செல்கிறேன் என்றும்,

மஃரிப் தொழுகைக்கு வுளு செய்து, இந்த து ஆவை ஓதிய பின் பாபுர் ரய்யான் வழியாக  சுவர்கத்திற்குள் செல்கிறேன்

என்ற உணர்வை அந்த இடத்தில் கொண்டு வர வேண்டும் அப்போது உள்ளத்தில் இறையச்சத்தின் அதிகரிப்பை கண்டு கொள்ள முடியும்.

மேலும் சுவர்கத்தின் வாசலுடைய பெயர்களும் மறக்காது.

இப்படி ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்தி வந்தால் அமல்களில் ஆர்வமும், இறையச்சத்தின் அதிகரிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்

source: http://www.islamkalvi.com/?p=105564

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 77

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb