Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வாழ்வைத் தொலைத்துக் கொண்ட மனித குலமும், மகத்தான தூதை மறந்து விட்ட சிறந்த உம்மத்தும்

Posted on January 18, 2016 by admin

வாழ்வைத் தொலைத்துக் கொண்ட மனித குலமும், மகத்தான தூதை மறந்து விட்ட சிறந்த உம்மத்தும்

      இனாமுல்லாஹ்     

பிரபஞ்சம், அதில் எங்கோ இருக்கும் பால்வெளி மண்டலம், அதிலும் அடையாளம் காண முடியாத நமது சூரிய குடும்பம், நமது சிறிய கோள் புவி, தன்னைத் தானே ஒரு முறை சுற்றி, சூரியனை கோளப்பாதையில் சுற்றிவருதல், அதன்மூலம் இரவு பகல் மாறி வருதல், நாட்கள், வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள் என காலத்தின்த்தின் கணிப்பீடு, ஓசோன் மண்டலம், வளி மண்டலம், சூரியனின் கதிர்வீச்சு, ஆறு கடல், மழை நீர் , நீர் , நெருப்பு ,காற்று, கடலிலும் தரையிலும் உள்ள அனைத்து படைப்பினங்கள், தாவரங்கள், உயிரினங்கள், நுண்ணுயிர்கள்ஸஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட வாழ்வுச் சக்கரம்.

இவற்றை எல்லாம் மண்ணில் வாழ்வதற்காக, மண்ணினால் படைக்கப்பட்ட மனிதனுக்காக படைத்து, வயப்படுத்தி அவனுக்கு அவற்றைக் கையாளும் அறிவு ஞானத்தையும் வழங்கிய பின் அத்தனை பிரபஞ்ச நியதிகளையும் திட்டமிட்டு தீர்மானித்து வகுத்து இயங்கச் செய்து கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் காலத்திற்குக் காலம் இறை தூதர்களை அனுப்பி மனித குலத்திற்கான வாழ்வு நெறி எனும் அமானிதத்தை வழங்கி இருக்கின்றான்.

தனது உடல் அறிவு ஆன்மா இந்த மூன்றையும் இறைவன் வகுத்த வழியில் தனி மனிதனாக, குடும்பமாக, சமூகமாக, தேசமாக, உம்மத்தாக, உலகமாக வாழ்வதன் மூலம் இவ்வுலக மற்றும் மறு உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டிய மனிதன் இன்று அளவின் விளிம்பில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றான்.

தனிமனிதாக, குடும்பமாக, சமூகமாக, தேசமாக, உம்மத்தாக, சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர்.

ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன், உயிர், அறிவு, உடைமைகள், பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன.

காலத்திற்குக் காலம் நபிமார்கள், தூதுவர்கள், இறுதி இறைதூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்கள், தாபிஈன்கள் அவர்கள் பின் வந்த நல்லடியார்கள் மனித வர்க்கத்திற்கு தத்தமது பங்களிப்பை செய்திருக்கின்றார்கள்.

இறைவன், பிரபஞ்சம், உலகம், வாழ்வு, மரணம், இன்மை மறுமை குறித்த மிகவும் தெளிவான கோட்பாட்டுச் சிந்தனைகளை கொண்டுள்ள சிறந்த ஒரு உம்மத் நவீன உலகிற்கு இஸ்லாம் குறித்த எத்தகைய நடை முறை வியாக்கியானங்களை தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், தேசங்களாகவும், உம்மத்தாகவும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதே ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மாவை ஆட்டிப் படைக்கின்ற, உள்ளத்தை உறுத்துகின்ற கேள்வியாகும்.

இஸ்லாத்தின் பெயரால், ஷரீஅத்தின் பெயரால், அகீதாவின் பெயரால், கிலாபாத்தின் பெயரால், ஆன்மீகநெறிமுறைகளின் பெயரால் மொத்தத்தில் மதத்தின் பெயரால் வெவ்வேறு முரண்பாட்டு முகாம்களுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு இன்மை மறுமை வாழ்வின் அத்துணை இலக்குகளையும் தொலைத்துக் கொண்ட ஒரு உம்மத்தாக, இஸ்லாத்தின் எதிரிகளை உள்வீட்டில் வைத்து போஷிக்கும் ஒரு உம்மத்தாக அவர்களின் நலன்களுக்கேற்பவே நகர்த்தப் படும் முகாம்களாக நாம் மாறி வருகின்றோம்.

இஸ்லாத்தையும் முஸ்லிம் இளைஞர்களையும் இலக்கு வைத்து சத்தியத்தின் கோலம் கொண்டு, சத்தியத்தின் சுலோகங்கள் சுமந்து சதி வலைகளை விரித்துள்ள பரந்து விரிந்த சியோனிஸ மற்றும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளிடமிருந்தும் முஸ்லிம் உலக முகவர்களிடமிருந்து காப்பாற்றுகின்ற மிகப் பெரும் பாரதூரமான பணி நாம் கடந்த பல தசாப்தங்களாக கொண்டிருந்த செயற்பாட்டு இலக்குகளை, கோட்பாடுகளை காலாவதியாக்கியுள்ளன.

source: http://yourkattankudy.com/2015/10/26/article/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 − = 14

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb