Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தம்பி, எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க!

Posted on December 10, 2015 by admin

தம்பி, எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க!

கடலூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஊடகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக கிடைக்கிறது.

ஆனால், குக்கிராமங்கள்…?

கடலூர் மாவட்டம், வடலூர் குறிஞ்சிப்பாடி தாண்டி அன்னவல்லி என்கிற கிராமத்தில் நண்பர்களோடு நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்,

“தம்பி எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க, இந்த நாளு நாளா சாம்பார் சாதம், புளி சாதம், சப்பாத்தி, கஞ்சினு பலபேர் பலவிதமா இயற்கை உருவாக்கின எங்கள் பசிக்கு உங்களால் முடிந்தளவு உதவிகளை பெருவதில் ஆறுதல் அடைகிறோம் நாங்கள்”

“இது நமக்கான உதவிதானம்மா”

“‘வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலார் வாழ்ந்த பூமியில் வாழ்கிற நாங்கள் பசியின் கொடுமை அறியாதவர்களல்ல தம்பி” என்றவர் மேலும் சொன்னார்,

“நாங்களும் பகுத்துண்டு வாழ்ந்தவர்கள்தாம், பலபேருக்கு பசியாற்றியவர்கள்தாம். ஆனால் இந்த இயற்கை…?
நம்மை எப்டியெல்லாம் புரட்டிப்போடுகிறது”

அந்தம்மா சொல்லி முடித்தவுடன் நீண்டதொரு அமைதி

“சரி சாப்டுங்கம்மா”

“பிறகு சாப்டுக்குறோம்ப்பா”

“ஏம்மா…வேற எதா தேவையா…? பாய், தலகாணி, போர்வை, மாத்திரைகள் இப்டி எதா வேணுமா”

“அதெல்லாம் இருக்குப்பா”

“இப்டி நீங்க சொல்லும்போதே, வேற எதோ தேவைனு தெரியுது. அது என்னனு சொன்னாதானம்மா புரியும்”

நீண்ட பேரமைதிக்குப்பின்…

கலங்கிய கண்களுடன் தலை குனிந்து மெல்லியக் குரலில் அந்தம்மா சொன்னார்

”‎முதல்ல நாங்க பாத்ரூம் போகனும்‬”

சில்லிடுகிற தொடையளவு நீரில் நின்றிருந்தும் உடம்பு முழுக்கச் சுட்டது அந்த வார்த்தைகள்.

வீடு முழுக்கத் தண்ணீர், எப்டி இயற்கை உபாதைகளைக் கழிப்பார்கள் என்பதை எப்படித்தான் மறந்துபோனோம் நாம்.

இது ஏதோ கீழ்கோடியில் அன்னவல்லி என்கிற குக்கிராமத்தில் அல்லல்படுகிற ஒரு பெண்மணியின் வாய்மொழி அல்ல.

கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பேரிடர் பாதித்த மாவட்டங்களின் ஒட்டு மொத்த பெண்மணிகளின் வாக்குமூலம் அது.

சில நாட்களுக்கு முன்பாக திண்டிவனம் நகரில் அமைக்கப்பட்ட இதுபோன்ற ‪#‎நடமாடும்_கழிப்பறைகள்‬ தற்போதைய அத்தியாவசியம்.

இந்த தகவலை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறைக்கும் கொண்டு சென்றிருக்கிறோம். ஒரு குரல் ஓசை மெலியது, பல குரல்களின் ஓசை வலியது. இந்த செய்தி சுகாதாரத் துறையின் காதுகளை எட்ட 104 என்ற எண்ணில் டயல் செய்து ‘நீரில் மூழ்காத நடமாடும் கழிப்பறைகள்’ என்ற வாக்கியத்தைப் பதியுங்கள்.

தற்போதைய தேவை ‘எது’ என்பதை நாம் உணரவேண்டிய தருணமிது.

source: http://adiraiannaviyar.blogspot.in/2015/12/blog-post_22.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb