Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தண்ணீர் தேசம்

Posted on December 4, 2015 by admin

தண்ணீர் தேசம்

  A.சிக்கந்தர் M.Sc., M.Phil., விருத்நகர். 

நான் மழைத்துளி பேசுகிறேன்…!
மானிடனே! உன்னைப்பார்த்து…!
தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை!
நிறைய நிறைய யோசிக்கச் செய்கிறதா உன்னை?

யோசிக்க நேரமில்லாமல் ஓடித் திரிந்தாயே!
கொஞ்சம் நின்று யோசி!
இனியாவது இயற்கையை நேசி!

நான் ஆட்சி புரிய வேண்டிய தண்ணீரின்
தேசத்தை நீ ஆக்கிரமித்தாய்!
ஆண்டாண்டு காலமாக அபகரித்தாய்!
அழித்துத் தீர்த்தாய்!
பராமரிக்க மறுத்தாய்! மறந்தாய்!

நான்கைந்து நாட்கள்தானே
நான் உன்னை ஆக்கிரமித்தேன்?
ஆவேசத்தில் கொட்டித் தீர்த்தேன்!
எனது சொந்த மண்ணை காண வந்தேன்!

நான் வெளியேரத் தாமதமானதும்
அன்றாட வாழ்வு ஸ்தம்பித்துப் போனதும்
புலம்புகிறாயே! பிதற்றுகிறாயே! உன்னால் இந்த
இடர்தனைப் பொறுக்க முடியவில்லையே மானிடா?

எனது பொறுமையை… எனது அருமையை
எத்தனை ஆண்டுகளாய் சோதித்துப் பார்த்திருப்பாய்?

எனது தண்ணீர் தேசத்தை
பட்டா போட்டுவிட்டு…
காங்கிரீட் காட்டை கட்டிவிட்டு
நீர்நிலைகளை அழித்துவிட்டு
மண்ணை சுரண்டி அள்ளிவிட்டு,
பள்ளத்தை மேடாக்கி – இயற்கை
வளத்தைப் பாழாக்கி, நிலத்தடி நீரினையும்
தூரமாக்கி, தண்ணீர் தேசத்தையே கோரமாக்கி,
இன்று புலம்புகிறாயே மானிடா!
இது வெற்றுப் புலம்பலடா… சுயநலப் பிதற்றலடா!

நானி(நீரி)ன்றி உலகு அமையாது
என்ற போதும் மழைத்துளியே வாழ்வின்
ஆதாரம் என்ற போதும் மதிக்காத நீ
சேதாரம் என்றதுமே திகைக்கிறாயே!

தேவை வேண்டி நின்றபோது, தாகத்தில்
தவித்துத் திரிந்தபோது வரவேற்ற நீ… இன்று
என்னை வெளியேற்றத் துடிக்கிறாயே!
நீரின் வேரறுக்க நினைக்கிறாயே!

நானிருக்க வேண்டிய இடத்தில் இன்று நீ!
இது எனது பூர்வீக தேசம்…
இடம் தேடி வந்து விட்டேன்.
இனி வெளியேரப் போவதில்லை!
நீயே வெளியேறு! உனது காங்கிரீட்
காட்டை வேறோடு பிடுங்கிக் கொண்டு!

மண்ணிற்கு நான் வாணூட்டும் தாய்ப்பால்…!
கருணைக் கடலும் என்னுள் உண்டு…
நான் ஆக்கவே… அருட்கொடையாய்
பூவுலகில் படைக்கப் பட்டவன்
அழிப்பது எனது நோக்கமல்ல…
ஆக்கிரமிப்பும் எனது பழக்கமல்ல!
கடைசியாய் இரக்கம் காட்டுகிறேன்!
கருணையாய் உபதேசம் கூறுகிறேன்

இனியாவது தண்ணீர் தேசத்தின்
நீர்நிலைகளை சீராக்கி
நீர்வழித்தடங்களை நேராக்கி,
விதிமுறைகளை முறையாக்கி,
மண்வளத்தை சிறப்பாக்கி
வாழக் கற்றுக்கொள்!
இயற்கையை நேசி!
இயற்கை சீரழிவை விட்டும் காப்பாற்ற
இறையிடத்தில் யாசி

– “ஜமா அத்துல் உலமா” மாத இதழ், டிசம்பர் 2015

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 84 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb