Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்!

Posted on September 19, 2015 by admin

குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்!

இன்றைய தினத்தில் நம்முடைய கைகளில் Touch Mobile சர்வசாதாரணமாக இருப்பதால் செல்பி, குரூப் போட்டோ என எடுத்து அதனை பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றுவது வழக்கம் ஆகிவிட்டது.

அதனால் தான் இந்த பதிவு இன்னும் சில நாட்களில் பக்ரீத் பெருநாளை நாம் அடைய இருக்கிறோம். (இன்ஷா அல்லாஹ்). அன்றைய தினத்தில் நம்மில் பலரின் வீடுகளில் அல்லாஹ் நமக்கு கட்டளையிட்ட குர்பானி என்ற அமல் நிறைவேற்றப்படும்.

அப்படி குர்பானி பிராணியை அறுக்கும் போது பலர் ஆர்வத்தில் அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுத்து பேஸ்புக்கிலும் வாட்ஸ்ஆப்பிலும் பரப்புகின்றனர்.

இவ்வாறு பரப்பி பெருமை அடைவதற்கு அல்ல குர்பானி என்ற அமல். நம்முடைய இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அமல்தான் குர்பானி.

”அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!” (அல்குர்ஆன் 22:37)

மேலும் இவ்வாறு குர்பானி பிராணியை அறுப்பதை போட்டோவும் வீடியோவும் எடுத்து அனுப்புவதால் இன்னொரு பிரச்சினையும் எழ கூடும்.
ஹஜ்ஜுப் பெருநாளின் போது, குர்பானி செய்யும் ஆடு, மாடு, ஒட்டகை போன்ற விலங்கினங்கள் அறுக்கப்படும் நிகழ்வுகளை வீடியோ,போட்டோ வடிவங்களில் Facebook, WhatsApp, imo, telegram, Twitter, Google+ போன்றவைகளில் பதிவுசெய்வதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

ஏனென்றால், பகிரப்படும் அக்காட்சிகளைகொண்டு, இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் இயக்கங்கள், Blue Cross போன்ற அமைப்புகள் இட்டுக்கட்டி பொய்யான பிரச்சாரம் செய்யவும், இஸ்லாமிய சமுதாய மக்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது!

எனவே இஸ்லாமிய சொந்தங்களே கண்டிப்பாக ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் குர்பானி பிராணிகள் அறுக்கப்படுவதை யாரும் போட்டோவும் வீடியோவும் எடுக்காதீர்கள்.

இறையச்சத்தின் அடிப்படையில் செய்யும் அந்த அமலின் முழு நன்மையையும் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

– யாசர் அரபாத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 − = 6

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb