Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!

Posted on June 2, 2015 by admin

அழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை!

இன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர் மக்கள்.. 

வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும் நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர்!

இப்படிப்பட்ட கண்ணை மூடிய ஓட்டப்பந்தயத்தில் வாழ்வின் உண்மைகளை மனிதன் மறந்துவிடுகிறான். மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும் தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நாளை தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றியும்  மற்றும் அவற்றை செலவு செய்தது பற்றியும் விசாரணை உள்ளது என்பதையும் தொடர்ந்து அதற்கான தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதையும் உணராத நிலையிலேயே மனிதன் வாழ்வைக் கழித்துக்கொண்டு இருக்கிறான்.

இதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

102:1, 2  செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-……நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.

ஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.

102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.  பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

உண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.

102:5. அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
 
மாறாக, சற்று நிதானித்து ‘இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெறும் செல்வம் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது’ என்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.
 
ஒருமுறை நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 ‘
மனிதன் “எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?”

இச்செய்தியை  நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். (முஸ்லிம் 5665 )

இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக தான் சேர்க்கும் பொருளில் தனது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும்  செலவிடுவான்.

பணவேட்டையின் சாதனைகள்
 
இன்று நடக்கும் மூர்க்கத்தனமான பணவேட்டையின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? அதுதான் கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்பது! தன்னை மறந்து, தனக்கு அனைத்தையும் தந்த இறைவனையும் மறந்து வெறும் பணம், சொத்து, புகழ் என்று வெறிகொண்டு அலையும் மனிதனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான்.:

102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.

102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
 
நிதானம் இழந்து வாழும் இந்த அறிவீனர்களுக்கு புதைகுழிக்கு அடுத்தபடியாகக் காத்திருப்பது நரகம் என்ற பாதாள எரிகிடங்குதான். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாதவாறு உறுதியாக மனிதன் தன் கண்களால் அதைக் கண்டுகொள்வான்.

102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
 
அந்நாளில் உண்மைகள் வெட்டவெளிச்சமாகத் தென்படும். இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அருட்கொடைகளும் பட்டியலிடப்பட்டு எடுத்துக்காட்டப்படும். இன்றைய அவசர உலகில் செல்வம் சேர்க்கும் போதையில் அவன் எதையெல்லாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினானோ, சிறிதும் பெரிதுமான அனைத்து அருட்கொடைகளையும் இறைவன் அன்று நினைவுபடுத்துவான். எதையுமே அவனால் நிராகரிக்க முடியாது. அவற்றிற்கு இவ்வுலகிலேயே நன்றி பாராட்டி அவற்றைத் தந்த இறைவனுக்கு அடிபணிந்தவனாக வாழ்ந்திருந்தால் அவன் அன்றைய நாளில் இறைவனின் தண்டனைகளில் இருந்து காப்பாற்றப்படுவான். மாறாக நன்றிகொன்று தன் மனோ இச்சைகளின் படி தான்தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு இறைவனின் தண்டனைகள் காத்திருக்கின்றன.

பொருளாசை என்ற போதை விளைவுகள்

பொருளாசை என்ற போதை தலைக்கேறிய பலர் இரவுபகலாக வியாபாரங்களிலும் தொழிலிலும் தங்கள் சக்திக்கு மீறி உழைப்பதைப் பார்க்கிறோம். அந்த போதையில் இறைவனைப் பற்றியோ மறுமை வாழ்வு பற்றியோ சற்றும் இவர்கள் சிந்திப்பதில்லை. இறைவன் அவர்களுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றவும் மறந்துவிடுகின்றனர்.

தன் உடலுக்கு, தன் மனைவிக்கு, தன் குழந்தைகளுக்கு, தன் பெற்றோருக்கு, தன் உறவினர்களுக்கு, சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளும் இப்படிப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. பண போதையில் கண்மூடித்தனமாக இவர்கள் சேர்த்த செல்வங்கள் இவர்களின் வாரிசுகளுக்குக் கைமாறப் போகிறது என்பதை சற்றும் உணராமலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது.

நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் தன் ‪மனைவி மக்கள் விஷயத்தில் பொறுப்பாளன் ஆவான். பெண் தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது ‪பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ‪புகாரி 5200)

வாரிசுகளின் வஞ்சனை

இறையச்சம் – அதாவது தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு – பெற்றோருக்கும் இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. இறை உணர்வை பெற்றோரும் போதிப்பது இல்லை, கல்விக்கூடங்களும் போதிப்பது இல்லை. அவர்களின் கவலையெல்லாம் குழந்தைகள் பெரிதாகி உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே! அவர்களிடம் மனிதத்துவம் நிலைக்க வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு சற்றும் கவலயே இல்லை!

ஸ்ரீ நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.’ (அல்குர்ஆன் 31:14)

இது நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் இறைவனின் அறிவுரை. இதுபற்றி சிறுவயது முதலே குழந்தைகளுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.

இவ்வாறு பொறுப்[புணர்வோடு வளர்க்கப்படாத காரணத்தால் பொருள் படைத்த பெற்றோரின் குழந்தைகள் சோம்பேறிகளாக மாறுவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோர்களை சற்றும் மதிப்பதும் இல்லை. பெற்றோர்களை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்கள். பெற்றோரைத் தங்களுக்கு பெரும் இடையூறாகவும் கருதுகிறார்கள்.

இரக்கம் என்பது இல்லாது போகும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் சேர்த்துக் குவித்த சொத்துக்களை விரைவில் அடைவதற்காக சிலர் “கருணைக் கொலை” என்ற பெயரில் கொன்றுவிடவும் செய்கிறார்கள்.

இன்னும் சிலரைப் பார்க்கிறோம். கணவனும் மனைவியும் இரவுபகலாக உழைத்துப் பொருள் சேர்த்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அங்கு தன் மனம் விரும்பிய காதலனோடு அல்லது காதலியோடு உல்லாசமாக இருப்பார்கள் பெண்ணுக்கு கர்ப்பம் முற்றும்போது நிர்பந்தத்தால் அந்த கண்றாவியையே மனம் முடித்து காலகாலமும் சென்ற இடத்திலேயே செட்டில் ஆகியும் விடுகிறார்கள். பெற்றோர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை! இதற்காகத்தான் அப்பெற்றோர்கள் உழைத்தார்களா?

சரி, அப்படியே சென்ற இடத்தில் கைநிறைய சம்பாதித்து தாய்நாடு வந்து பெற்றோர் நிச்சயித்த நபரை மணமுடித்து மீண்டும் வெளிநாடு திரும்பியவர்களின் நிலைதான் என்ன? அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும்! ‘தாய்ப்பாசம்’ பொங்கும்! தாயை அழைத்து தங்களோடு தங்க வைப்பார்கள் பேரப்பிள்ளையின் மலத்தை சுத்தப்படுத்த!

பிள்ளைகளை மேற்படிப்பு படிக்கவைப்பதற்காக வீட்டை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்கிய பெற்றோரும் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் அவர்களின் காதல் கூட்டாளிகளோடு ஓடிப்போனதால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தெருவுக்கு வந்த பெற்றோரும் உள்ளனர்.

இவையெல்லாம் இவ்வுலகில் சந்திக்கும் இழிநிலைகள்! மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது? நரகம் அல்லாமல் வேறு என்ன?

எல்லாம் எதனால்? …. இறைவனையும் மறுமை என்ற உண்மையையும் மறந்து பொருளீட்டியதற்காக!

வாழ்வின் போக்கை மாற்றுவோம்!
 
இவையெல்லாம் நாளை நடக்க இருக்கும் சம்பவங்கள். இவற்றை இன்றே நினைவுறுத்தி நிதானத்தோடு சிந்தித்து நம் வாழ்வின் போக்கை திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான் கருணையுள்ள இறைவன்.

திருமறையின் இந்த நினைவூட்டலை ஏற்று வாழ்வைத் திருத்திக் கொள்வோருக்கு நாளை மறுமையில் கவலைகள் இல்லை என்பது மட்டுமல்ல, இவ்வுலகிலும் அவர்கள் பலவிதமான மனஉளைச்சல்களில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள். இன்று நம்மைச் சுற்றி நடப்பவைகளை சற்று நோட்டமிட்டாலே இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளலாம்.

source: http://quranmalar.blogspot.in/2015/05/blog-post_43.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

48 − 45 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb