Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எவ்வளவு அழகான மனிதன் நீ…

Posted on May 22, 2015 by admin

எவ்வளவு அழகான மனிதன் நீ
எத்தனை இளமையான தலைவன் நீ
எவ்வளவு கம்பீரமான பிரதமர் நீ

நாட்டின் கவுரவத்தை
உன்னைப்போல் அழகாக்கியவனல்லவா நீ
உலகத்தையே சுற்றி வந்த போதும்
கேலிக்கு ஆளாகாதவனல்லவா நீ

பறப்பதை தொழிலாகச் செய்த விமானத் தொழிலாளி நீ
அரசியல் கடந்தும் நாட்டு மக்களால்
நேசிக்கப்பட்டவன் நீ

வளமான தேசத்தை கட்டமைக்க
விமானத்திலிருந்து
இறங்கி வந்தவன் நீ

நாட்டின் எதிர்காலம நீ என
மக்கள் நம்பிக்கையை பெற்றவன் நீ !
சிதறடித்து விட்டார்களே …
உன்னையும்
எங்கள் உணர்வையும் !

பாவிகள் தகர்த்தது
உன் உடலையா ?
இல்லை… இல்லை …
இந்த தேசத்தின் ஆன்மாவை !

சதிகாரர்களின்
சவுந்தர்ய பூமியில்
சாந்தியை விரும்பும் உன்னை
சாந்தியடைய வைத்து விட்டார்களே !

ஒளிமயமான எதிர்காலத்தை
நிர்மூலமாக்கிவிட்டு
ஓராண்டு சாதனையைச் சொல்லி
ஒப்பாரி வைக்கிறார்கள்
ஊர் சுற்றிகள் !

நீ இருக்கும்போது
தெரிந்து கொள்ள முடியாத
நீ வாழ்ந்த
அனலிடை வாழ்க்கையை
உன்னை இழந்த பிறகுதான்
புரிந்து கொண்டோம்!

இருந்தாலும் …
உன் பாட்டனும்
உன் தாயும்
நீயும்
விதைத்துச் சென்ற
மதவெறியூட்டப்படாத
சமாதானப்பயிர்
கருகி விடாது
என்ற நம்பிக்கை
இன்னமும் எங்களுக்கிருக்கிறது !

இன்றைய உனது
நினைவுநாளில்
உறுதி கொள்கிறோம்…
துவேஷங்களில்லாத
தேசத்தை
நாங்கள்
கட்டி எழுப்புவோமென்று !

– ஆக்கம்: Abu Haashima

source: http://nidurseasons.blogspot.in/2015/05/blog-post_21.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

55 − 51 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb