Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கு…?!

Posted on April 30, 2015 by admin

இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கு…?!

இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் நாட்டம் குறைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணமும் அது மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!

இன்று எமது இளைஞர்கள் மத்தியில் மேற்க்கத்திய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒருவகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது வாழ்வினது மாடலாக அவர்கள் நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குஃப்ஃபார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “ஃபேஷன்” என்ற பெயரில் இவர்கள் பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில் உள்ள தெளிவின்மையும்  இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவரபடிக்காமல் இருப்துமேயாகும்.

முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் மார்க்கமாகவும் நோக்குவதால், இவர்கள் தொழுதால் போதும் அல்லது எப்படிவேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும்.

உண்மையில் இஸ்லாம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பை ஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல் அது பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல், பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத் தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றை ஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக ஒரு முழுமையான இஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம் பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத் தவறுவதாலேயே மத ஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவ தாராண்மைவாதச்  சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு அவன் “நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப்பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான். இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன் காணும் தாவாமுறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத் தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்க முற்படும் மேற்கினது கலாச்சார படையெடுப்பும்,  வாழ்கை முறையையும்,  சிந்தனைப் படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன் உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒருமுழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology) வாழ்க்கை முறையாக அவன் விளங்குவதும், அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின், அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும், முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும், மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பதுடன் அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான். அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது வாழ்க்கை முறைபற்றிய அடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒருமாற்றீட்டு வாழ்க்கைத் திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ், இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்பட்டு,  முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும் இஸ்லாமிய வெளிநாட்டு கொள்கை மூலமாக  தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு உலகில் இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும்ஒரு தலைமையாக  இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய இளைஞனாக” அவன் மாறுவான். இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து  பாதுகாத்து மறுமையில்ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ்..,

source: http://muthupettaiexpress.blogspot.in/2014/08/blog-post_20.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 93 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb