Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?”

Posted on April 28, 2015 by admin

“என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?”

“என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?”

நிலையான மறுமையில் குருடனாக எழும் நிலையா…? நினைக்கவே அச்சமாக இருக்கிறதல்லவா…?

இவ்வுலகில் கண்ணுள்ளவர்களும், கண்ணில்லாதவர்களும் கலந்து வாழ்கிறார்கள். அவர்களில் காலமெல்லாம் கண்ணொளி பெற்றவர்கள் அல்லாஹ் படைத்த இவ்வுலகின் அனைத்தையும் கண்டு மகிழ்கிறார்கள்.

வானத்தையும், பூமியையும். இவ்விரண்டிற்கும் இடையில் இருப்பவைகளையும் பார்த்து மனித இனம் பரவசம் அடைகிறது.

அப்படிப்பட்ட மனிதன் கண்ணொளியை இழப்பானாகில் அது அவனுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை எவரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஆனால் கண்ணொளி பெற்ற மனிதன் அதைப்பற்றி; இறைவன் தனக்கு வழங்கியிருக்கும் அந்த மகத்தான அருட்கொடையைப் பற்றி என்றைக்கேனும், எப்போதேனும் சிந்தித்துப் பார்க்கிறானா…?

இதோ மனிதனை அச்சமூட்டி எச்சரிக்கும் இறைவசனம்!

ஒளியுள்ள நம் கண்கள் அதனை பார்த்து நமது உள்ளத்துக்குள் அது ஊடுருவட்டும்.

“எவன் எனது உபதேசத்தை புறக்கணிக்கின்றானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை இருக்கிறது. மேலும் குருடனாகவே மறுமை நாளில் அவனை நாம் எழுப்புவோம். (குர்ஆன் 20:124)

(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்(குர்ஆன் 20:125)

(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான். (குர்ஆன் 20:126)

ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும். (குர்ஆன் 20:127)

சொற்ப காலமே வாழக்கூடிய இவ்வுலகில் கண்ணில்லாமல் போனாலே கதிகலங்கும் மனிதன், நிலையான மறுமையில் குருடனாக எழும் சூழலுக்கு தன்னை உள்ளாக்கலாமா?

சிந்திப்போம் சீர்பெறுவோம்

எம்.ஏ.முஹம்மது அலீ

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 26 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb