Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஈமானின் எழுச்சி!

Posted on April 6, 2015 by admin

ஈமானின் எழுச்சி!

  மவ்லவீ, ஹாஃபிள், எம்.எம்.எஸ்.மஹ்மூது மிஸ்பாஹி   

வாழ்வதற்காகத்தான் அல்லாஹ் நம்மைப் படைத்துள்ளான். வீணாக அழுவதற்காகவும், அழிவதற்காகவும் அல்லாஹ் நம்மைப் படைக்கவில்லை.

எல்லாம் என் தலைவிதி! என்று கடந்த காலத்தை எண்ணி வருந்துவது, என்ன செய்யப்போகிறோமோ, தெரியவில்லையே! என்று எதிர்காலத்தை எண்ணி ஏங்குவது நமது பலகீனமாக உள்ளது.

வாழ்க்கையை கசப்பாக்குவதும் இனிப்பாக்குவதும் நமது கையில்தான் அல்லாஹ் தந்துள்ளான்.

நெருப்புக்கு மத்தியில் எப்படி மகிழ்வடைய முடியும்? வெள்ளத்திற்கு நடுவில் எப்படி நிம்மதி கொள்ள முடியும்? அல்லாஹ்வின் அருள் இருந்தால் எல்லாமே முடியும்!

நெருப்புக்குழிக்குள்ளே இருந்து ஹளரத் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், நைல் நதியின் நடுவில் ஹளரத் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் நிம்மதி பெறவில்லையா?

ஆக, அல்லாஹ்வை எல்லையாகக் கொண்டு வாழும் மனிதனுக்கு தொல்லையில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்பம் வந்தாலும் அல்ஹம்துலில்லாஹ்! துன்பம் வந்தாலும் அல்ஹம்துலில்லாஹ்! என்று அல்லாஹ்வை நாவாலும் மனதாலும் புகழ வேண்டும்.

“என்ன பிழைப்பு! செத்த பிழைப்பு! பிழைப்பா இது! பேசாம செத்துறலாம்… ஏதோ வண்டி ஓடுது… சே! நாய் பிழைப்பா போச்சு…” என்று புலம்புகின்றவர்களை நாம் பார்க்கிறோம். இது இயலாதவர்களின் அடையாளமாகும். நல்ல வாழ்க்கை அமிந்திட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல பல உபதேசங்களை செய்துள்ளார்கள்.

“உண்மையை மட்டும் பேசு! தேவையானதை மட்டும் பேசு. பொய், கோள், புறம், அவதூறு, இட்டுக்கட்டுதல் எதையும் பேசவே கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “உடல் உழைப்பால் நீ சாப்பிடு! பிறருக்கும் கொடு. பிறரிடம் யாசிக்காதே! யாசிப்பவனை நிந்திக்காதே!

ஒன்றும் தெரியாத மக்களாக, ஆடு மாடு, ஒட்டகங்களை மேய்ப்பதை மட்டுமே வாழ்வாக கொண்டிருந்த மக்களை நேர்வழி காட்டி, மார்க்கத்தின் ஞானங்களை ஊட்டி, நபித்துவ ஒளியான குர்ஆனை காட்டி மனனமிடச் செய்து அல்லாஹ்வால் பொருந்திக் கொண்ட மக்களாக, புனிதர்களாக ஆக்கினார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

கண்ணியம் வாய்ந்த இவ்விறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், உலக மக்களை நன்மையின் பக்கம் அழைத்தார்கள். யுத்த களங்களில் தன்னுயிர்களை தியாகம் செய்து இஸ்லாத்தை காத்தார்கள். இறை வணக்கங்களில் ஈடு இணையற்று திகழ்ந்தார்கள். கொடுக்கல் வாங்களில் ஹலாலை பேணி, ஹராமை தவிர்த்தார்கள்.

சுற்றத்தாரிடம், அண்டை வீட்டாரிடம், ஏழைகளிடம் மிகவும் நேசமுடனும் உதவியும் செய்து வந்தார்கள்.

அர்த்தமேயில்லாமல் ஆண்டாண்டு காலங்களாக போரிட்டு வந்த மக்காவாசிகள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையால் அழகிய முன் மாதிரியாக உலகிற்கு ஒளிவீசி வழிகாட்டினார்கள். கல்வி ஞாங்களை உலகெங்கும் சென்று பரப்பினார்கள்.

எனவே தான் பல லட்ச ஸஹாபாக்கள் வாழ்ந்த புனித மக்காவிலும், மதினாவிலும் சில ஆயிரம் ஸஹாபாக்களின் மண்ணறைகள் மட்டுமே உள்ளன. மற்றவர்கள் இஸ்லாமிய சுடர் ஏந்தி உலகின் எண் திக்குகளிலும் சென்று அடக்கமாக்கி விட்டார்கள்.

யார்? எந்த மனிதர் அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற வேண்டும் என்று எண்ணுகிறாரோ, நேர்வழியில் தன்னை அல்லாஹ் நடத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர் அல்லாஹ்வை ஈமான்(நம்பிக்கை) கொண்டு அவனது வழியை பலமாக பற்றிப் பிடித்திட வேண்டும்.

ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மரண நேரத்தில் ஒரு சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பி அழுது கொண்டிருந்தார்கள்.

அருகிலிருந்த அவரது மகன், “தந்தையே! உங்களின் நண்பர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு சுபச்செய்தி சொல்லியிருக்கிறார்கள் அல்லவா! பின்பு ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “ஒரு காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வெறுப்பு கொண்டவன் என்னைப் போல் யாரும் கிடையாது. அந்த நபியை கொன்றுவிட பலமுறை சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து வெறியாக அலைந்தேன். அது என் வாழ்நாளில் மோசமான நாளாகும். அதே நிலையில் நான் மரணித்திருந்தால் நிச்சயம் நான் நரகவாசியாக ஆகியிருப்பேன். ஆனால், அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டினான். அதன் பின்பே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களின் அருகில் சென்று, “உங்களிடம் பைஅத் செய்திட கரங்களை நீட்டுங்கள்” என்றேன்.

“யா ரஸூலல்லாஹ்! உங்களிடம் சில நிபந்தைகளிட விரும்புகிறேன்” என்றேன்.

“என்ன நிபந்தனை?” என்றார்கள்.

“என் பாவஙகள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டும், அதிகமாக பாவம் தான் செய்துள்ளேன். என்னை அல்லாஹ் மன்னிப்பானா?”

“இஸ்லாமை நீ ஏற்றுக்கொண்டால் பாவம் நீங்கும். ஹஜ் செய்தால் பாவம் நீங்கும்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அதன்பின் இஸ்லாமான எனக்கு நபிகளாரைவிட விருப்பமானவராக உலகில் எவரும் இல்லை. ஏழ்மையாக அறிவில்லாதவனாக இருந்த என்னை ஈமான் உயர்வாக்கி செல்வந்தனாக்கியது.” என்று ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி முடித்தார்கள்.

நமது உயர்வுக்கும் இருலோக வெற்றிக்கும் வழி அல்லாஹ்வை வழிப்படுவதில் மட்டுமே உள்ளது. அல்லாஹ்வுக்கு வழிபட்ட நல்லடியார்களில் அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்தருள் புரிவானாக!

நன்றி: ‘குர்ஆனின் குரல்’ டிசம்பர் 2011

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb