கேஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது எச்சரிக்கை தேவை!
13 பிப்ரவரி 2015 அன்று பெண் ஒருத்தி தன் சமையல் அறையில் கேஸ் (Gas stove) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும்போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.
உடனே அவள் பூச்சிக் கொல்லி (“Hit”, “Mortein”) மருந்தை தெளித்தாள்.
அந்த மருந்தின் வேகம் கேஷ் சிலிண்டரை வெடித்து அவள் மேல் 65% தீகாயம் ஏற்பட்டது.
அவளைக் காப்பாத்த முற்பட்ட கணவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அந்த பெண் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.
அவள் இறந்தது கூட கணவனுக்கு தெரியாது.
அதனால் எரிவாயு எரிந்து கொண்டு இருக்கும்போது பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.