Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மெளனமாய் உதிர்ந்த மகுடம்!

Posted on February 8, 2015 by admin

மெளனமாய் உதிர்ந்த மகுடம்!

மரணத்தைச் சந்திக்க
துடிதுடித்து மக்களெல்லாம்
துயரத்தைக் கொண்டாலும்
முடியதுவும் உதிர்வதுபோல்
மரணங்கள் இயல்பென்றே
குடிமைகளும் அறிந்ததனால்
கூப்பாடு போடவில்லை.

விடுமுறைகள் வேண்டவில்லை.
வீதியிலே கூடவில்லை
கொடுஞ்செயல்கள் வன்முறைகள்
கொலைகளவு நாடவில்லை.
படபடக்கும் கொடிகூட
பார்வைக்குத் தாழவில்லை.
அடம்பிடித்து படம்பிடித்து
ஆன்மநலம் தே(ற்)றவில்லை.

அரசநிலம் கைப்படுத்தி
அடக்கத்தைச் செய்யவில்லை.
முரசொலிக்க வானொலியில்
முழக்கங்கள் வழக்கமில்லை.
வரமிதுதான் வாழ்வென்ற
ஓருண்மை விளங்கிவிட
சிரம்பணிதல் என்றைக்கும்
சாகாத இறைவனுக்கே.!

ஒப்பாரிச் சாராயம்
ஒருவருமே அருந்தவில்லை.
துப்பாக்கி முழக்கங்கள்
துளைக்கின்ற சப்தமில்லை.
எப்போதும் போலத்தான்
இந்நாளும் செல்கிறது.
இப்பாரும் அதிசயிக்கும்
இயல்பான மாற்றமிதே.

பாமரனும் அரசனுமே
பக்கத்துப் பக்கத்தில்.
சாமரமா? சுழற்காற்றா?
செயலேட்டில் அவரெழுத்தே!
யாவருமே ஓர்நிறைதான்.
இடுகாட்டின் கணக்கீட்டில்.
‘பூ’வருமா? ‘தலை’ விழுமா?
புதைந்ததுவும் ரகசியமே!

தேசத்தின் அரங்குகளில்
திருப்புகழ்ச்சிப் பாட்டில்லை.
காசற்றோர் காசுள்ளோர்
கணக்குகளும் காணவில்லை.
மாசற்ற தன்மையன்றி
மதிப்புகளும் வேறில்லை.
பாசத்தால் இச்செய்தி
பாடங்கொள் பாரதமே!

– கவிஞர். ஃபக்ருத்தீன் இப்னு ஹம்தூன்
 
source: http://www.satyamargam.com/poem/2510-noiseless-loss.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb