Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திராவகம் வீசினால் தூக்குத்தண்டனை -மத்திய அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது

Posted on December 25, 2014 by admin

மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்ப்பு திராவகம் வீசினால் தூக்குத்தண்டனை மத்திய அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது

புதுடெல்லி : திராவகம் வீச்சு வழக்கை மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்த்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் தூக்குத்தண்டனை வரை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திராவகம் வீச்சு சம்பவங்களில் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவது, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு மிகவும் கவலையை அளித்துள்ளது. திராவகம் விற்பனையை சில மாநிலங்கள் கட்டுப்படுத்தி உள்ளது. சில மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரு மாதத்தில் சராசரியாக 400 திராவகம் வீச்சு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பழி வாங்குவதற்காக ஈடுபடும் மோசமான இந்த செயலால், பெண்கள் மிகவும் கடுமையான உடல் வேதனை, மனவேதனை அடைவதாகவும் வாழ்க்கையே குலைந்து போவதாகவும், எனவே இந்த குற்றத்தை கடுமையான சட்டம் கொண்டு தடுக்க வேண்டும் என்று மத்திய சட்டக்கமிஷன் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திராவகம் வீச்சு சம்பவங்களை முழுமையாக தடுப்பதற்காக மத்திய அரசு, கடுமையான சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே திராவகம் வீச்சு சட்டம் 2013–ன் படி, வழக்கை 60 நாட்களில் முடிக்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு முதல் ஆயுள்சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டது. இந்த சட்டம் மேலும் கடுமையாக்கப்படுகிறது.

தூக்குத்தண்டனை
அதன்படி திராவகம் வீச்சு வழக்கை மிகக் கொடிய குற்றப்பட்டியலில் சேர்க்கப்படுகிறது. வழக்கு விசாரணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடித்து, அதிகபட்சமாக குற்றவாளிக்கு ஆயுள்சிறை முதல் தூக்குத்தண்டனை வரை விதிக்கவும், மேல்முறையீடு செய்வதில் விதிமுறைகள் வகுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திராவகம் விற்பனையை வரைமுறைப்படுத்தவும், குற்றவாளிக்கு அதிக தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மறுவாழ்வு
திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்டவருக்கு, மருத்துவமனையில் கருணை அடிப்படையில் உயர்தர இலவச சிகிச்சை அளிக்கவும் மேலும் பலன்களை பெறும்வகையில், சுகாதாரத்துறை, நிதித்துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து புதிய முடிவுகள் எடுக்கவும் மத்திய உள்துறை தீர்மானித்துள்ளது.

திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ஊனம் ஏற்படுமானால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்பொருட்டு, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, சிறப்பு பயிற்சி, சுயவேலை வாய்ப்பு கடனுதவி ஆகியவை அளிக்கவும் வழிவகை செய்ய ஆலோசிக்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

-தினத்தந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb