Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சட்டத்துக்கு சவால் விடும் 9 சாமியார்கள்!

Posted on November 21, 2014 by admin

சட்டத்துக்கு சவால் விடும் 9 சாமியார்கள்!

இதுதான் இந்த ஞானபூமியின் லட்சணம்!

நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

சம தர்மமும், மதச் சார்பின்மையும் நோக்காகக் கொண்ட நாட்டில் மதவெறியும், சனாதன சாமியார்களின் போட்டி அரசும், காவிகளையே அதிரச் செய்யும், காவிக் காலிகளின் ராஜ்யம் உலகத்தார்முன் நம்மைத் தலைகுனிய வைக்கிறது!

ஹிந்து மதத்தினைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஏடுகளாலேயேகூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு, சாமியார்கள் என்ற ரவுடிகளின் ராஜ்யம், சனாதனத்தின் போர்வை தனா – தனம் கொடிகட்டிப் பறக்கிறது!

ஹரியானாவில் உள்ள ராம்பால் என்ற அய்-டெக் சாமியார் (பாலிடெக்னிக் பட்டயம் படித்தவர்) பல கோடி சொத்துக்கள் – மடங்கள் – அப்பாவி சீடர்களைக் கொண்ட அகம்பாவத்தின் சின்னமாகத் திகழுகிறார்.

சட்டங்களையும், சர்க்காரையும் சவாலுக்கு அழைக்கிறார்.

நீதிமன்றங்களை மதிக்கத் தயாரில்லை என்பது போன்று ஒரு போட்டி அரசினையே அரசுகளுக்கு எதிராக நடத்தி, ஆணவத்தின் நுனிக்கொம்பில் ஏறி அவனியோருக்கு, அதிசயக் காட்சியானார்.

அவர் மட்டுமா? இந்தியாவின் சாமியார், சாமி யாரிணிகள் பட்டியல் கணக்கிலடங்கா!

சாமியாராக என்ன தேவை – காவி உடை, இல்லை யேல் ஒரு கோவணம், அதுவும் இல்லையென்றால், முழு நிர்வாண சாமியார் – 100-க்கு 150 சதவிகித சக்தி வாய்ந்த சாமியார் என்றழைத்துக் கொள்ள, சங்கோஜப்படாத முன்னாள், இந்நாள் கிரிமினல்கள்!

இதுபற்றி பார்ப்பன நாளேடான தினமலர் ஏட்டில் வந்துள்ள செய்தியையும், படத்தினையும் அப்படியே தந்திருக்கின்றோம் (அருகில் காண்க).

மத்திய அரசையும், மற்ற முந்தைய நேபாளத்தையும் கையில் வைத்திருப்பதாகச் சொன்ன, சொல்லும் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் முதல், இரண்டாம் குற்றவாளிகளாக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குமேல் ஜெயிலில் இருந்து, பிறகு பெயிலில் வந்து, 89 பிறழ் சாட்சியங்களை யெல்லாம் வைத்தும், நீதிபதியிடமே பேசியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பல்வேறு புகார்களுக்குப் பிறகு எப்படியோ கொலை வழக்கில் விடுதலை வாங்கி விட்டும், அதற்குமேல் அப்பீல் தாக்கல் செய்யும் ஆணையையும் சில புரோக்கர் சாமிகளின்மூலம் ரத்து செய்ய வைத்தும், தனி ராஜ்யம் நடத்திடும், சட்டத்தையே ஊமையாக்கிய காஞ்சி சாமியார்களும் ஏனோ இதில் இடம்பெறவில்லை; ஒரு  பிரபல பார்ப்பன எழுத்தாளரான ஒரு பெண்மணியிடம் இந்த யோக்கிய சிகாமணி நடத்தைபற்றி அவரே சாட்சியம் சொன்னதும்கூட எடுபடவில்லை.

எல்லாம் குப்பைத் தொட்டியில் அல்லது ஊறுகாய் ஜாடியில்!

சாமியார் காலில் விழும் முண்டங்களே! உங்களுக்கு இப்போதாவது புத்தி வருமா?

– ஊசிமிளகாய்

Read more: http://viduthalai.in/e-paper/91484.html#ixzz3JcX9rgy8

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb