Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சென்னையில் சுற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

Posted on October 28, 2014 by admin

சென்னையில் சுற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: இட்லி, தோசை சப்ளை செய்வதை கண்காணிப்பவர்

சென்னை: சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரயில் நகர் சந்திப்பில் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ பாண்டியராஜன் நேற்று காலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது புளூ கலர் சைரன் பொருத்திய ஒரு கார் வேகமாக சிக்னலை தாண்டி சென்றது. இதனால் எஸ்ஐ பாண்டியராஜன், விரட்டிச் சென்று அந்த காரை மடக்கிப் பிடித்தார். கார் கண்ணாடியில் போலீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது.

காரை ஓட்டிய நபர், தான் ஒரு  ஐபிஎஸ் அதிகாரி என்று கூறினார். மேலும் தன்னுடைய ஐடி  கார்டையும் காண்பித்து விட்டு காரை அங்கிருந்து எடுத்துச் சென்றார். இதில் சந்தேகம் அடைந்த எஸ்ஐ பாண்டியராஜன், அடுத்த சிக்னலில் நின்றிருந்த எஸ்ஐ சக்திவேல், வேதகிரிக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உஷாராவதற்குள் அந்த நம்பர் கொண்ட கார், சிக்னலை தாண்டி சென்றது.

இதையடுத்து அந்த காரை போலீசார், பைக்கில் விரட்டிச் சென்று நெற்குன்றம் படேல் ரோட்டில் சுற்றிவளைத்து  பிடித்தனர். காரில் இருந்தவரிடம் விவரங்களை கேட்டனர். அப்போது  அவர் காட்டிய விசிட்டிங் கார்டில், விவேகானந்த மிஸ்ரா (43), டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் துறை டாக்டராக பணியாற்றுவதாக இருந்தது.மேலும் அவர் ஐபிஎஸ் அதிகாரி என்று போலி ஐடி கார்டும் வைத்து இருந்தார். இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

கோயம்பேடு உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சிவகுமார்  ஆகியோர் விரைந்து சென்று அந்த நபரை காவல் நிலையம் கொண்டு வந்தனர். துணை கமிஷனர் மனோகரன் அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், பிடிபட்ட விவேகானந்த மிஸ்ரா, மேற்கு வங்கம் புருடா மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 6 மாதமாக கோயம்பேட்டில் உள்ள ஸ்டார் ஓட்டலில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.

ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்  கேட்கும் இட்லி, தோசை போன்ற உணவுப் பொருட்கள் சரியாக சப்ளை  செய்யப்படுகிறதா என்கிற பணியை செய்து வந்தார். ஆவடி அருகே அண்ணனூர் சிவசக்தி நகர் 7வது அவென்யுவில் தங்கியுள்ளார். அவரது வீட்டை சோதனையிட்ட போது 6 செல்போன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் 6 வங்கி பாஸ்புக் ஆகியவற்றை கைப்பற்றினர். ஒரு சில வங்கியில் ஓவர் டிராப்ட் செய்துள்ளார். மேலும் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பள்ளி முதல்வர் என்ற முத்திரையையும்  கைப்பற்றினர். அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.  அவர்மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

அவர் போலீசிடம் தெரிவித்த தகவல்: நான் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்துள்ளேன். கடந்த 13 வருடங்களுக்கு முன் சென் னைக்கு வந்துவிட்டேன். இங்கு பல்வேறு ஓட்டல்களில் வேலை செய்து வந்த  நான் இந்த ஓட்டலில் ரூ.35,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். படித்து கொண்டிருக்கும்போது நிறைய நாடகங்களில் நடித்துள்ளேன். அதில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாகவே நடித்தேன். அந்த படங்களை நான் ஆல்பத்தில் வைத்திருந்தேன். அதை பார்த்த எனது  மகன் விஷால் மிஸ்ரா, என்னை போலீஸ் அதிகாரியாக பார்க்க  ஆசைப்படுவான். அதனால் நான் இன்டர்நெட்டில் போலீஸ் அதிகாரியின்  ஐ.டி. கார்டை டவுண்லோடு செய்து அதில் எனது முகத்தை பதித்து  செராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டேன். இந்நிலையில் தான் போலீசிடம் சிக்கி கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

source: http://www.dinakaran.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = 80

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb