Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

‘சைட்’ அடிக்கும் ஆண்களின் கண்களைப் பிடுங்குவோம்: சந்திரசேகரராவ் அதிரடி!

Posted on October 8, 2014 by admin

‘சைட்’ அடிக்கும் ஆண்களின் கண்களைப் பிடுங்குவோம்: சந்திரசேகரராவ் அதிரடி!

ஹைதராபாத்: ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையிலும், பெண்களை வன் கொடுமை செய்தால் வளைகுடா நாடுகளில் இருப்பது போல கடுமையான சட்டம் கொண்டு வரவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்களை கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே கண்களை பிடுங்குவோம் என்றும் சந்திசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெல்லிக்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் பெண்கள் வன்கொடுமைகளை தடுப்பதில் முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிரமாக உள்ளார். வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூணம் மால கொண்டையா தலைமையில் ஒரு குழுவை தெலுங்கானா அரசு நியமித்துள்ளது.

ஆய்வு செய்த அதிகாரிகள் இக்குழு குஜராத், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியது. அங்குள்ள சட்ட திட்டங்களை அறிந்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்தது. மேலும் சிங்கப்பூர் செல்லவும் முடிவு செய்து உள்ளது.

வளைகுடா நாடுகளில் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு வளைகுடா நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. பெண்களை போதை பொருளாக பார்ப்பவர்களின் கண்களை தோண்டி எடுக்கும் வகையிலும் சட்டம் உள்ளது.

மகளிர் போலீசார் அது போன்ற சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார்.இதற்காக மகளிர் போலீஸ் நிலையத்தை அதிகப்படுத்தவும், பெண் போலீசாரை கூடுதலாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

source: http://tamil.oneindia.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

99 − = 89

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb