Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனித உறவின் நீட்சி

Posted on September 5, 2014 by admin

மனித உறவின் நீட்சி

மனிதன் இந்த உலகின் மிகப்பெறுமதியான படைப்பினம். அனைத்து படைப்பினங்களையும் விடவும் அவனுக்குத் தான் அந்தஸ்து அதிகம். உலகின் அனைத்து படைப்பினங்களும் அவனுக்காகத் தான் படைக்கப்பட்டுள்ளன. இது அல்குர்ஆன் மனிதனைப்பற்றி கூறும் நிஜங்கள்.

மனிதன் இந்த உலகில் தனித்து வாழ முடியாது. அவனது வாழ்க்கை மற்ற மனிதர்களுடன் நெருக்கமான  தொடர்பு கொண்டது. ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுடன் இணைந்து செல்லும் வாழ்வைத் தான் அவன் தேர்ந்தெடுக்க வேண்டியவனாக இருக்கின்றான். “மற்ற மனிதர்களுடன் சேர்ந்து வாழாத விசுவாசியினை விட , மற்றவர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் ஏற்படும் கஷ்டங்களில் பொறுமையுடன் இருக்கும் விசுவாசி தான் மிகச் சிறந்தவன்” என்பது நபிமொழி.

மற்றவர்களுடனான வாழ்க்கை சிலருக்கு மிகவும் சுவையாக இருக்கும் இன்னும் சிலருக்கு இப்படியான ஒரு வாழ்க்கை ஏன் என்று எண்ணத் தோன்றும். இதனை  சரியாக கையாள முடியாத போது அதுவே மிகப்பெரும் சோதனையாகவும் மாறிவிட வாய்ப்புண்டு.

இப்படியான வாழ்க்கைக்கு ஒருவன் தன்னைதானே தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. தன்னைப் போன்றுதான், தன்னைச் சூழ உள்ள அனைவரும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவர்கள். இந்த எண்ணத்துடன் மனித உறவு நீடிக்காது. என்னைப்பற்றிய மனப்பதிவு மற்றவர்களிடம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் அவர்களைப்பற்றிய பிழையான மனப்பதிவுகளுடன் வாழ்வை கொண்டு செல்ல முடியாது.

மனித உறவுகளின் நீட்சி மற்றவர்களது செயல்களுக்கு நியாயம் காணும் பண்பிலும் தங்கியிருக்கிறது. இந்த நிலை அனைவராலும் முடியாது, குறிப்பாக மற்றவர்கள் பற்றிய பிழையான மனப்பதிவுகளால் தங்கள் உள்ளத்தினை நிறைத்து வைத்திருக்கும் மனிதர்களால் முடியவே முடியாது. தூய்மையான உள்ளம் கொண்டவர்களால், பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொண்டவர்களால் மாத்திரம் தான் முடியும்.

“குறித்த இன்ன சகோதரன் எனது தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்க வில்லை…வழக்கமாக எனது குறுஞ் செய்திகளுக்கு உடனேயே பதிலளிப்பவர் இன்னும் பதில் தரவில்லை…ஏன் இன்று இவர் வீட்டிலிருந்து நேர காலத்துடன் செல்கிறார் ?… இப்படி நமக்கு மற்றவர்களிடம் வித்தியாசமாகத் தெரியும் விஷயங்களுக்கு சில கேள்விகளை நாமாகவே எழுப்பிக் கொள்வதுண்டு.. அனால், இவற்றுக்கான நியாயம் என்ன என்பதனை அறிந்து கொள்ளாது நாமாகவே ஒரு விடையினைத் தேர்ந்தெடுப்பது பலவகையிலும் ஆபத்தானது. இந்தம் நிலை கடைசியில் மற்றவர்களைப்பற்றிய பிழையான மனப்பதிவை ஏற்படுத்தி, மனித உறவையே சீரழித்துவிடும்.

“அவருக்கு ஏதோ வேலையாக இருக்கலாம், அவர் இன்னும் தொலைப்பேசியினைப் பார்த்திருக்க மாட்டார்..” இப்படியாக நியாயங்களைத் தேடுவது மனித உறவுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். எமது ஸலபுகள்(முன்னோர்கள்) “ஒரு சகோதரனது ஒரு செயலுக்கு தொண்ணூறு காரணத்தை தேட வேண்டும்” என்று கூறுகிறார்கள்.. காரணம் மனித உறவு அப்போது தான் அழகாக தளிர்விடத் தொடங்கும்.

நம்மிடம் அரிதாகி போகின்ற மிக முக்கியமான பண்பு மற்றவர்களைப்பற்றி முதல் தடவையிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் பிழையான எண்ணம் கொள்வது…

மற்ற சகோதரனது செயல்களுக்கு நியாயமான காரணத்தைத் தேடாது பிழையான விளக்கத்தினைக் கொள்வது நமது மறுமை வாழ்கையை அதிகமாகவே பாதித்து விடும்.

“மிகத் தூய்மையான உள்ளத்துடன் வருகின்றவருக்குத் தான் அந்த மறுமை நாளில் விமோசனம்..”(ஷுஅரா:89)

“முஃமின் மற்றவர்களின் செயல்களுக்கு நியாயமான காரணம் தேடுவான், முனாஃபிக் மற்றவர்களது குறைகளைத் தேடுவான்” இப்னு மாசின் ரஹ்மதுல்லாஹி அலைஹி.

source: http://www.samooganeethi.org/index.php/category/salim–

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 93

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb