Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிறகுகள் இல்லாத பறவை

Posted on August 27, 2014 by admin

சிறகுகள் இல்லாத பறவை

  பா. பானுமதி   

[ பாதுகாப்பு என்ற போர்வையிலேயே பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். உண்மையில் பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பு கிடைக்கிறதா?

நீங்கள், நான் என்று ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பெண்களுக்கான கொடுமைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கே யாரையும் தனித்துக் குறை கூறுவதிற்கில்லை.

கனவுகள் சுமந்த பெண்ணே, கலங்கி நிற்காதே. விடியும் பொழுது உனக்காகத்தான் !]

பெண் என்பவள் ஆணாதிக்கச் சமூகத்தில் சிக்கித் தவிக்கும், சிறகுகள் இல்லாத பறவை. அந்தப் பறவைக்கு அனைத்து சுதந்திரமும் கொடுத்து விட்டோம். ஆனால், பறவை கூண்டைவிட்டு எங்கும் செல்லக் கூடாது என்ற ஒரே ஒரு கட்டுப்பாட்டை மட்டும் செயல்படுத்த வேண்டும் என்கிறது இந்தச் சமூகம். அப்படியும் சில பறவைகள் கூண்டைவிட்டு வெளியே வந்து வானில் சிறகு விரித்து பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் சில பறவைகளுக்கோ வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

கட்டுப்பாடு

மனிதனின் அடிப்படை உரிமையான உடையில்கூட பெண்ணுக்குக் கட்டுப்பாடுதான். பெண்களை விலைப் பொருட்களாக மாற்றிவிட்ட ஊடகங்களும், திரைப்படங்களும்தான் இதற்குக் காரணம். பொழுதுபோக்குதானே, இதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பலர் கேட்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையினர் அதிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடாததை எல்லாம் நிறைய கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

படிப்பு

விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் பெண்களுக்கு அனுமதியில்லை. பெண்களின் படிப்பு சார்ந்த முடிவுகளை பெரும்பாலான வீடுகளில் ஆண்களே எடுக்கிறார்கள். அதையும் மீறி வெளியே வந்தாலும் சமூகம் அதற்கு இடம் தருவதில்லை. பெண்களுக்கென்றே சில படிப்புகளை ஒதுக்கி விடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள்.

பாதுகாப்பு என்ற போர்வையிலேயே பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். உண்மையில் பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பு கிடைக்கிறதா? நீங்கள், நான் என்று ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பெண்களுக்கான கொடுமைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கே யாரையும் தனித்துக் குறை கூறுவதிற்கில்லை.

தற்காப்பு

எத்தனை வீடுகளில் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருகிறோம்? இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு எதற்கு என்று விட்டுவிடுகிறோம். விளைவு, அநீதி நடக்கும் நேரங்களில் வேறொருவரின் துணையை நாட வேண்டியுள்ளது. சாதுவாக, அமைதியாக இருப்பதற்குப் பெண்மை என்று பெயரில்லை. பெண்மை என்பது வீரம் நிறைந்தது. ஆனால் அந்தப் பெண்மையை இந்தச் சமூகம் தன் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக் கொள்கிறது.

மாற்றம் முதலில் பெண்ணிடம் இருந்தே வர வேண்டும். தனக்கு என்ன தேவையோ அதைத் துணிச்சலோடு எடுத்துச் சொல்லும் மன உறுதி பெண்களுக்குத் தேவை. பெண்கள் தங்களுக்குத் தேவையான உரிமைகளுக்காக யாரிடமும் யாசகம் கேட்கத் தேவையில்லை. இந்தச் சமூகம் பெண்ணை கண்ணே, மணியே என்று பாராட்டி, வேலைக்காரியாக மட்டுமே வாழப் பணிக்கிறது. எப்போதும் எதற்காகவும் பெண் ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன்னை குறுக்கிக் கொள்ளக் கூடாது.

கனவுகள் சுமந்த பெண்ணே, கலங்கி நிற்காதே. விடியும் பொழுது உனக்காகத்தான் !

source: http://tamil.thehindu.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 + = 31

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb