Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

“பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!”

Posted on August 26, 2014 by admin

“பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!”

[ நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49 : 12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். (நூல்: புகாரி 5143)]

மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இரண்டு வகையான தவறுகள்

தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள்.

தவறுகளை காணும்போது நாம் செய்ய வேண்டியவை என்ன?

வெளிப்படையாக செய்யப்படும் தவறுகளை நாம் விமர்சனம் செய்யலாம். அதைக்கண்டிக்கலாம். அதை பகிரங்கப்படுத்தலாம்; அவர்களைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்கள் இத்தவறுகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்.

இப்படி இல்லாமல் மறைமுகமாக உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல், அதை நேரத்தில் யாருக்கும் அந்த தவறு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இருக்குமானால் அதை வெளிப்படுத்தக்கூடாது. அதை பகிரங்கமாக கண்டிக் கக்கூடாது. அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும்.

துருவித் துருவி ஆராயக்கூடாது

இவர் தவறு செய்கிறாரா? என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவரின் அனைத்து நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடாது. பொதுவாக எல்லாரையும் நல்லவராகவே எண்ண வேண்டும். தவறு செய்திருக்க முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49 : 12)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். (நூல்: புகாரி 5143)

பிறர் தவறு செய்து அது நம்முடைய பார்வைக்கு வருமானால் நேரடியாக அவரை சந்தித்து அவர் செய்யக்கூடிய பாவத்தின் தண்டனையை பற்றி நாம் அவருக்கு விளக்க வேண்டும். மறுமையை பற்றி அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் அவரின் பாவத்தை வெளிப்படுத்தினால் இதனால் ஏற்பட்கூடிய விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.

ஏற்படும் விளைவுகள்

மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால் நீ அவர்களை பாழாக்கிவிட்டாய் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 4244)

ஒருவர் புகை பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் புகை பிடிப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இப்பபோது இதை நாம் பகிரங்கப்படுத்தும்போது மறைமுகமாக தவறு செய்தவர் நாளை நம்முடைய முகத்துலே அதன் புகையை ஊதி தள்ளுவான்.

இதை பகிரங்கமாக செய்தவதால் இதைப்பார்க்கும் மற்றவர்களும் செய்வ தற்கு துணிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தீமை அவனோடு ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களையும் ஈர்க்கும் நிலையும் ஏற்படும்.

மறுமையில் ஏற்படும் தண்டனை

யாருடைய பாவத்தை நாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்யும் நாமும் கூட தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்களிடம் ஒரு குறை. ஒரு தவறு இருந்தால் நம்மிடம் வேறொரு குறை, தவறு இருக்கும். இந்த தவறுகள் நாளை மறுமையில் பலருக்கு முன்னால் வெளிப்படுத்தி அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால் நாம் இம்மையில் நம்முடைய பார்வைக்கு வந்த குறைகளை தவறுகளை மறைத்தாக வேண்டும். அப்படி மறைக்காத பட்சத்தில் நம்முடைய குறைகளை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி யிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாள் துன்பங்கள் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாற்ல் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 2442)

காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும்

பிறரின் குறைகளை கேட்பதற்காக மற்றவர்களின் உரையாடலை கேட்பவனுக்கு மறுமை நாளில் அவனின் காதில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் தண்டனை கொடுக்கப்படும்.

“தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரி 7042), திர்மிதீ 1673)

எனவே பிறரின் குறைகளையும், அந்தரங்க விஷயங்களையும் ஆய்வு செய்யும் காரியங்கள் அனைத்திலிருந்தும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

71 + = 75

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb